AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோவை சிறுவன் கொலை வழக்கு மனதை பதைபதைக்க வைக்கிறது – மு.க ஸ்டாலின் வேதனை..

பள்ளியில் மாணவர்களுடன் அதிக நேரம் செலவிடும் ஆசிரியர்களும், கல்வியறிவோடு பொறுமை, அன்பு போன்ற பண்புகளையும் அவர்களின் மனதில் விதைக்க வேண்டும் என்பதையே இந்த கொடிய நிகழ்வு உணர்த்துகிறது. நம் மாநிலத்தின் வருங்காலமே குழந்தைகள்தான். அவர்களை பொறுப்புடன் வளர்த்தெடுப்பது நம் அனைவரின் சமூகக் கடமை” என குறிப்பிட்டுள்ளார்.

கோவை சிறுவன் கொலை வழக்கு மனதை பதைபதைக்க வைக்கிறது – மு.க ஸ்டாலின் வேதனை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 18 May 2026 18:59 PM IST

மே 18, 2026: கோவை மாவட்டம் இருகூர் அருகே 13 வயது பள்ளி சிறுவன் நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின்  தனது சமூக வலைதளப் பதிவில் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கோவை இருகூர் அருகே 13 வயதே ஆன பள்ளிச் சிறுவன் நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மனதை பதைபதைக்க வைக்கிறது.

பிள்ளைகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும் – மு.க ஸ்டாலின்:

பெற்றோர்கள் நம் பிள்ளைகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும். குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை கண்காணித்து, அவர்களிடம் ஏற்படும் உளவியல் மாற்றங்களை அறிந்து, நாம்தான் நல்வழிப்படுத்த வேண்டும்.

பள்ளியில் மாணவர்களுடன் அதிக நேரம் செலவிடும் ஆசிரியர்களும், கல்வியறிவோடு பொறுமை, அன்பு போன்ற பண்புகளையும் அவர்களின் மனதில் விதைக்க வேண்டும் என்பதையே இந்த கொடிய நிகழ்வு உணர்த்துகிறது. நம் மாநிலத்தின் வருங்காலமே குழந்தைகள்தான். அவர்களை பொறுப்புடன் வளர்த்தெடுப்பது நம் அனைவரின் சமூகக் கடமை” என குறிப்பிட்டுள்ளார்.

நடந்தது என்ன?

கோவை மாவட்டம் இருகூர் பகுதி நியூ காலனியைச் சேர்ந்த பாரதிராஜாவின் 13 வயது மகன், ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது கோடை விடுமுறை என்பதன் காரணமாக, கடந்த 15ஆம் தேதி பிற்பகலில் தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து மாசாணியம்மன் கோயில் அருகே உள்ள வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.

நண்பர்களால் கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன்:

அப்போது, மீன் பிடித்துக் கொண்டிருந்த இடத்தில் அந்த சிறுவனுக்கும் நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள், அருகில் கிடந்த காலி பாட்டில்களால் சிறுவனை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சிறுவன், ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்துள்ளார்.

மேலும் படிக்க: அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு – தரமான உணவு கிடைக்க ஆணை

இதையடுத்து, எதுவும் நடக்காதது போல இரு சிறுவர்களும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இரவு நேரமாகியும் மகன் வீட்டிற்கு வராததால் பதற்றமடைந்த பெற்றோர், நண்பர்களிடம் விசாரித்தபோது, “நாங்கள் எல்லோரும் ஒன்றாகத்தான் சென்றோம். அவரை வேறு யாரோ அழைத்துச் சென்றனர்” என உண்மையை மறைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பெற்றோர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் இரு சிறுவர்களையும் அழைத்து விசாரித்தபோது, அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டனர்.

புதைக்கப்பட்ட இடத்திலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு:

பின்னர், சிறுவர்கள் காட்டிய இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், புதைக்கப்பட்டிருந்த மாணவனின் உடலை தோண்டி மீட்டனர். மகனின் சடலத்தை பார்த்த பெற்றோர் கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.

மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கைது செய்யப்பட்ட இரு சிறுவர்களிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

13 வயது சிறுவன் சக நண்பர்களால் கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow Us