தமிழகத்தில் மீன்களின் விலை குறைய வாய்ப்பு… இன்றுடன் முடியும் மீன்பிடி தடைக்காலம் …
Fishing Ban Ends in Tamil Nadu: தமிழகத்தில் 61 நாட்கள் அமலிலிருந்த மீன்பிடி தடைக்காலம் இன்று (ஜூன் 14) நள்ளிரவுடன் முடிவடைகிறது. இதனைத்தொடர்ந்து, காசிமேடு உள்ளிட்ட துறைமுகங்களில் சுமார் 800 விசைப்படகுகள் மீன்பிடிக்கத் தயாராகி, 200 படகுகள் முதற்கட்டமாக கடலுக்கு புறப்படுகின்றன. மீன்வரத்து அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதுடன், சூறாவளிக் காற்று எச்சரிக்கையையும் மீனவர்கள் கருத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஜூன் 14: தமிழகத்தில் (Tamilnadu) மீன்பிடித் தடைக்காலம் (Fishing ban) இன்று (2025 ஜூன் 14) நள்ளிரவுடன் முடிவடைய இருப்பதால், தமிழக மீனவர்கள் (Tamilnadu fisherman) கடலுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர். 61 நாட்கள் தடைக்காலம் 2025 ஏப்ரல் 15 முதல் நடைமுறையில் இருந்தது. காசிமேடு துறைமுகத்தில் உள்ள சுமார் 800 விசைப்படகுகள் பழுதுபார்க்கப்பட்டு தயாராக்கப்பட்டுள்ளன. டீசல், உணவுப்பொருட்கள் உள்ளிட்ட தேவைகள் படகுகளில் ஏற்றப்படும் பணி நடக்கிறது. முதல் நாளில் சுமார் 200 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவுள்ளன. மீன்வரத்து அதிகரித்து மீன் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்கள் மேற்கொள்ள வேண்டிய அறிவுறுத்தல்கள் https://www.fisheries.tn.gov.in/ என்ற இணையத்தில் மீன்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் மீன் பிடிக்க அமலில் இருந்த தடைகாலம்
வங்கக் கடலில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்க 61 நாட்களாக அமல்படுத்தப்பட்டிருந்த தடைக்காலம் இன்று (ஜூன் 14) நள்ளிரவுடன் முடிவடைகின்றது. இதனையொட்டி, தமிழகத்தின் முக்கிய மீன்பிடித் துறைமுகங்களான சென்னை காசிமேடு உள்ளிட்ட இடங்களில் மீனவர்கள் மீண்டும் கடலுக்குச் செல்ல உற்சாகமாகத் தயாராகி வருகின்றனர்.
தடைக்காலம் 2025 ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கியது
இந்த தடைக்காலம் 2025 ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கி, மீன்களின் இனப்பெருக்கத்தைக் கருத்தில் கொண்டு வருடந்தோறும் நடைமுறைக்கு வருகின்றது. இந்த காலத்திலில், காசிமேடு துறைமுகத்தில் உள்ள சுமார் 800 விசைப்படகுகள் பழுது பார்க்கப்பட்டு, புது தோற்றத்தில் கடலுக்குத் தயாராகின்றன. தற்போது படகுகளில் டீசல் நிரப்பு, ஐஸ்கட்டி சேமிப்பு, உணவுப்பொருட்கள், சமையல்பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து தயாரிப்பும் நடந்து வருகிறது.




இன்று நள்ளிரவுடன் முடிவடையும் தடைகாலம்
2025 ஜூன் 14 சனிக்கிழமை நள்ளிரவுக்கு பிறகு சுமார் 200 விசைப்படகுகள் முதற்கட்டமாக கடலுக்கு புறப்பட்டு, 5 முதல் 15 நாட்கள் வரையிலான பயணத்திற்கு கிளம்பவுள்ளன. வஞ்சிரம், வவ்வால், ஊழா, சங்கரா, இறால் போன்ற விலை உயர்ந்த மீன்கள் பெரும்பாலும் இத்தகைய விசைப்படகுகளால் தான் பிடிக்கப்படும். எனவே, மீன்வரத்து அதிகரித்து, இன்னும் சில நாட்களில் மீன் விலை குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025 ஜூன் 17 வரை சூறாவளிக் காற்று வீச வாய்ப்பு
இந்தச் சூழலில், மீன்வளத் துறை அனைத்துவித வசதிகளையும் செய்து வருகின்றது. ஆனால், சென்னை வானிலை ஆய்வு மையம் 2025 ஜூன் 17 வரை மணிக்கு 45–55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீச வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளது. எனவே, மீனவா்கள் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் என காசிமேடு மீன்பிடித் துறைமுக உதவி இயக்குநர் ப.திருநாகேஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் ஏன் ?
- தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்படுவதற்கான முக்கிய காரணங்கள்:
- மீன்களின் இனப்பெருக்கத்திற்கு நேரம் வழங்குதல்
- கடல் உயிர்களின் எண்ணிக்கையை பாதுகாத்தல்
- மீன்வளத்தை நிலையாக வைத்திருத்தல்
- மீனவர்களின் வருமானத்தை நீண்ட காலத்தில் உயர்த்துதல்
- சுற்றுச்சூழல் சமநிலையை பேணும் வகையிலும் இந்த தடைகாலம் அமல்படுத்தப்படுகிறது.