AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மக்களே உஷார் … தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக உயரும்

Tamil Nadu Weather: தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவுகிறது. வேலூரில் 37.9° செல்சியஸ் அதிகபட்சம் பதிவாகியுள்ளது. கொடைக்கானலில் 7.1° செல்சியஸ் குறைந்தபட்சம் பதிவாகியுள்ளது. 2026 மார்ச் 06 ஆம் தேதி வரை வெப்பநிலை உயரக்கூடும். 2026 மார்ச் 07 முதல் 09 வரை சில மாவட்டங்களில் லேசான மழை வாய்ப்பு உள்ளது. மீனவர்களுக்கு தற்போது எச்சரிக்கை இல்லை.

மக்களே உஷார் … தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக உயரும்
வெப்பநிலைImage Source: PTI
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 04 Mar 2026 14:00 PM IST

தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த 24 மணிநேரத்தில் வறண்ட வானிலையே நிலவியது; அதிகபட்சமாக வேலூரில் 37.9°C வெப்பநிலையும், குறைந்தபட்சமாக கொடைக்கானலில் 7.1°C-உம் பதிவாகியுள்ளது. மன்னார் வளைகுடா வளிமண்டல சுழற்சி காரணமாக 2026 மார்ச் 6 வரை வறண்ட நிலையும், வெப்பநிலைப் படிப்படியான உயர்வும் காணப்படும். இருப்பினும், 2026 மார்ச் 7 முதல் தென் தமிழகம் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழை தொடங்கி, 2026 மார்ச் 10 அன்று தமிழகத்தின் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேர வானிலை நிலவரம்

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த 24 மணி நேரமாக வறண்ட வானிலை நிலவியுள்ளது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகளில் பொதுவாக குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளதாகவும், ஏனைய பகுதிகளில் இயல்பை ஒட்டிய நிலை காணப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வேலூரில் 37.9° செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. சமவெளிப் பகுதிகளில் திருத்தணியில் 19.0° செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. மலைப்பகுதிகளில் கொடைக்கானலில் 7.1° செல்சியஸ் குறைந்தபட்சமாக குறிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல சுழற்சி – மழை முன்னறிவிப்பு

மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 04-03-2026 முதல் 06-03-2026 வரை பொதுவாக வறண்ட வானிலை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

07-03-2026 முதல் 09-03-2026 வரை மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என முன்னறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. 10-03-2026 அன்று தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read:  100 டிகிரி பாரன்ஹீட்டை நெருங்கும் வெயில்.. மழை இருக்குமா?

வெப்பநிலை உயர்வு – பனிமூட்டம் எச்சரிக்கை

04-03-2026 முதல் 06-03-2026 வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என கூறப்பட்டுள்ளது. 07 மற்றும் 08 ஆம் தேதிகளில் வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்க வாய்ப்பு குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 08 ஆம் தேதி வரை இயல்பை ஒட்டி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

05 மற்றும் 06 ஆம் தேதிகளில் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை – மீனவர்களுக்கு அறிவிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும், குறைந்தபட்சம் 22 முதல் 23 டிகிரி வரை பதிவாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என கூறப்பட்டுள்ளது.

தமிழக கடலோரம், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் 04-03-2026 முதல் 08-03-2026 வரை மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us