AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னை: வேளச்சேரி–பரங்கிமலை ரயில் சேவை தொடங்குவதில் சிக்கல்

Train Service After Safety Inspection: சென்னை எழும்பூர் மறுசீரமைப்பு பணிகளால் மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. வேளச்சேரி–பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்ட நிலையில் பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தண்டவாளத்தில் கூடுதல் பணிகள் முடிந்த பின் ரயில் சேவை தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை: வேளச்சேரி–பரங்கிமலை ரயில் சேவை தொடங்குவதில் சிக்கல்
வேளச்சேரி–பரங்கிமலை ரயில் சேவை Image Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 09 Mar 2026 10:20 AM IST

சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் காரணமாக கடந்த 2026 பிப்ரவரி மாதம் 20-ந்தேதி முதல் மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதற்கான மாற்று ஏற்பாடாக வேளச்சேரி–பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டது. ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஜனக்குமார் கர்க் தலைமையிலான குழு கடந்த 2026 மார்ச் 5-ந்தேதி தண்டவாளத்தில் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வில் தண்டவாள பாதுகாப்பு சோதனை முடிந்தாலும் சில கூடுதல் பணிகள் செய்ய பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. அந்த பணிகள் முடிந்த பின் பரங்கிமலை–வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை எழும்பூர் மறுசீரமைப்பு பணி – மின்சார ரெயில் சேவை குறைப்பு

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகளின் காரணமாக கடந்த 2026 பிப்ரவரி மாதம் 20-ந்தேதி முதல் மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மாற்றம் காரணமாக தினமும் ரயிலில் பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அலுவலக நேரங்களில் கூட்ட நெரிசல் அதிகரித்து, பயணிகள் தங்களது இலக்கை நேரத்தில் அடைவதில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் ரெயில்வே நிர்வாகம் பல்வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது. கூடுதல் பஸ் சேவைகள், மாற்று ரெயில் வழித்தடங்கள் போன்ற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை திட்டம்

இந்த மாற்று ஏற்பாடுகளில் மிக முக்கியமானதாக வேளச்சேரி – பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவையை இயக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த சேவை தொடங்கப்பட்டால் சென்னை தெற்கு பகுதிகளில் இருந்து பயணிக்கும் மக்களுக்கு பெரிய நிவாரணமாக இருக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி நாளை 2026 மார்ச் 10-ந் தேதி முதல் அந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்கும் என முன்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் அந்த பாதையில் ரெயில்களை இயக்குவதற்கு முன் பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்ள ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் குழு ஆய்வு செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Also Read: ஊட்டி மலை ரயில் குறித்து குளு குளு அறிவிப்பு.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு

இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி டெல்லியில் இருந்து ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஜனக்குமார் கர்க் தலைமையில் வந்த குழுவினர் வேளச்சேரி – பரங்கிமலை வழித்தடத்தில் விரிவான ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் அந்த பாதையில் ரயிலை இயக்கி சோதனை செய்ததுடன், டிராலிகளில் பயணித்தும் தண்டவாளத்தின் நிலையை நேரில் பார்வையிட்டனர். இந்த ஆய்வின் போது தண்டவாளத்தின் பாதுகாப்பு நிலை, சிக்னல் அமைப்புகள், பாதை அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து அதிகாரிகள் விரிவாக பரிசோதனை செய்தனர்.

அனுமதி சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை

ஆய்வு முடிந்ததும் பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட்டவுடன் அந்த வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது தண்டவாள பாதுகாப்பு பரிசோதனை முடிவடைந்திருந்தாலும், ரயிலை இயக்குவதற்கான இறுதி அனுமதி சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வுக்கு வந்த குழுவினர் தண்டவாளத்தில் சில கூடுதல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பணிகள் முடிந்த பின் சேவை தொடக்கம்

அந்த பணிகள் முழுமையாக முடிவடைந்த பின்னரே பரங்கிமலை – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை தொடங்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் நாளை தொடங்கும் என்று எதிர்பார்த்திருந்த ரயில் சேவை சிறிது காலம் தாமதமாகும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாக உறுதி செய்யப்பட்ட பிறகே சேவை தொடங்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேவையான பணிகள் விரைவாக முடிக்கப்படவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Follow Us