AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிவகாசி பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்து.. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவிப்பு..

விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.. இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வடபட்டி கிராமத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்ததாக தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

சிவகாசி பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்து.. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவிப்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 14 Aug 2026 07:32 AM IST

ஆகஸ்ட் 14, 2026: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே வடபட்டி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.  வடபட்டி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது.

வெடி விபத்தில் இருவர் உயிரிழப்பு:

இந்த விபத்தில், அங்கு பணியாற்றி வந்த அப்பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (41), சர்க்கரையப்பன் என்பவரின் மகன், பலத்த காயமடைந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், திருநெல்வேலி பேட்டை பகுதியைச் சேர்ந்த அகமது இப்ராஹிம் (66), காதர் மைதீன் என்பவரின் மகன், இந்த விபத்தில் பலத்த காயமடைந்தார். மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

மேலும் படிக்க: சொத்து வரி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.. சென்னை மாநகராட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான பட்டாசு தொழிற்சாலைகள் செயல்பட்டு வரும் நிலையில், அவ்வப்போது இதுபோன்ற விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன. இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ரூ. 4 லட்சம் நிதியுதவி – முதல்வர் விஜய் உத்தரவு:


இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: வேலூர் அருகே கொடூரம்.. பணி முடிந்து திரும்பிய பெண் தலைமை காவலர் கத்தியால் குத்திப் படுகொலை!

இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வடபட்டி கிராமத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்ததாக தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

Follow Us