AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு.. பச்சிளம் குழந்தைகளை தூக்கி கொஞ்சிய முதல்வர் விஜய்..

மருத்துவமனை டீன் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர், மருத்துவமனைக்கு தினசரி வருகை தரும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், தற்போதுள்ள உள்கட்டமைப்பு வசதிகள், கூடுதல் வசதிகளின் தேவைகள் மற்றும் மருத்துவ சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

எழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு.. பச்சிளம் குழந்தைகளை தூக்கி கொஞ்சிய முதல்வர் விஜய்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 08 Jul 2026 19:07 PM IST

ஜூலை 8, 2026: தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், சென்னை எழும்பூரில் உள்ள அரசு தாய்-சேய் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாய்மார்களை நேரில் சந்தித்து அவர்களின் உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை, மருத்துவ வசதிகள் மற்றும் நோயாளிகளுக்கு கிடைக்கும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

தாய்-சேய் நல மருத்துவமனையில் முதல்வர் ஆய்வு:

ஆய்வின்போது, புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகளை கையில் தூக்கி அன்புடன் அரவணைத்த முதலமைச்சர், அவர்களின் பெற்றோருடனும் உரையாடினார். தொடர்ந்து, மருத்துவமனை டீன் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர், மருத்துவமனைக்கு தினசரி வருகை தரும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், தற்போதுள்ள உள்கட்டமைப்பு வசதிகள், கூடுதல் வசதிகளின் தேவைகள் மற்றும் மருத்துவ சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும், தேவையான வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தகவல்கள் அப்டேட் செய்யப்படுகிறது…

Follow Us