Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பள்ளி மாணவர்களிடையே மோதல்.. நடுரோட்டில் மாணவனுக்கு கத்திக் குத்து.. ஆரணியில் பயங்கரம்

Tiruvanamalai Student Attack Mate : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 10ஆம் வகுப்பு மாணவன், சக மாணவனை கத்தியால் தாக்கியுள்ளார். இரண்டு மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட போது, ஒரு மாணவர் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாணவர்கள் இருவரும் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவர்களிடையே மோதல்.. நடுரோட்டில் மாணவனுக்கு கத்திக் குத்து.. ஆரணியில் பயங்கரம்
மாதிரிப்படம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 19 Jun 2025 15:19 PM

திருவண்ணாமலை, ஜூன் 19 : திருவண்ணாமலை மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மாணவனை சக மாணவன் (Student Assault Classmate) கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், படுகாயம் அடைந்த 10ஆம் வகுப்பு மாணவனுக்கு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. சமீப காலங்களில் பள்ளி மாணவர்களிடையே மோதல்கள் அதிகளவில் நடந்து வருகிறது.  குறிப்பாக, மாணவர்கள் பள்ளிகளிலேயே ஒருவரைக்கொருவர் தாக்கியும், கத்தியால் தாக்கியும் வருகின்றனர். படிக்கும் வயதில் பள்ளி மாணவர்கள் ஆயுதங்களை கையில் துக்குவது பலரிடையே கவலையை எழுப்பி உள்ளது. இதனை தடுக்க மாநில அரசும் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளிக்கல்வித்துறை சார்பிலும் மாணவர்களுக்கு ஆலோசனையும் நடத்தி வருகிறது. இருப்பினும், மாணவர்களிடையே மோதல் தொடர்ந்து வருகிறது.

பள்ளி மாணவர்களிடையே மோதல்

இந்த நிலையில் தற்போது திருவண்ணாமலையில் பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது.  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் சதீஷ் குமார் மற்றும் வசீகரன் என்ற 10ஆம் வகுப்பு மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், 2025 ஜூன் 19ஆம் தேதியான இன்று காலையில் வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதற்காக சேத்துப்பட்டில் இருந்து அரசு பேருந்தில் ஏறி உள்ளனர்.

இவர்களுடன் 5 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடன் இருந்தனர். அவர்கள் அனைவரும் பள்ளிக்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கி உள்ளனர். அப்போது, சதீஷ் குமார் மற்றும் வசீகரன் என இரு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் இரண்டு மாணவர்கள் ஒருவரைக்கொருவர் தாக்குதல் ஈடுபட்டுள்ளனர். பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே இந்த தாக்குதலில் இரு மாணவர்கள் ஈடுபட்டனர். அப்போது, ஆத்திரத்தில் மாணவர் சதீஷ் குமாரை, சக மாணவன் வசீகரன் பின்பக்க கழுத்தில் பலமுறை குத்தி உள்ளதாக கூறப்பகிறது.

நடுரோட்டில் மாணவனுக்கு கத்திக் குத்து

மாணவரை குத்திவிட்டு அங்கிருந்து மாணவன் வசீகரன் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து,   அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மாணவர் சதீஷ்குமாரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம்  குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து பள்ளி நிர்வாகம் மற்றும்  பெற்றோரிடையே விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மாணவனை சக  மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நெல்லை மாவட்டத்தில் பள்ளி வளாகத்திலேயே  9ஆம் வகுப்பு மாணவன் சக மாணவனை கத்தியால் குத்தினார்.  தண்ணீர் ஊற்றியதால் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில், மாணவனை சக மாணவன் கத்தியால் குத்திவிட்டு, காவல் நிலையத்தில் சரணடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.