இப்படி லிங்க் வந்தால் நம்பாதீங்க…! சென்னை காவல்துறை எச்சரிக்கை..
Fake Traffic Challan SMS: தரமணியில் வசிக்கும் சக்திவேல் என்பவரிடம் போலி சலான் குறுஞ்செய்தி வந்ததில் உள்ள URL Link-ஐ கிளிக் செய்ததால் கைப்பேசி ஹேக் செய்யப்பட்டது. இதன் மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.99,000 பணம் திருடப்பட்டது. இதுபோன்ற மோசடியை தவிர்க்க பொதுமக்கள் எச்சரிக்கையாக இருந்து, 1930 அல்லது cybercrime.gov.in-ல் புகார் செய்ய வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னை ஜூன் 29: சென்னை (Chennai) தரமணியில் (Tharamani) வசிக்கும் சக்திவேல் (Sakthivel) என்ற நபருக்கு வாகன சலான் என ஒரு போலி SMS வந்தது. அந்தச் செய்தியில் இருந்த URL Link-ஐ கிளிக் செய்ததால் அவரது கைப்பேசி ஹேக் செய்யப்பட்டது. இதன் காரணமாக அவரது Kotak வங்கி கணக்கிலிருந்து ரூ.50,000 மற்றும் ரூ.49,000 ஆகிய இரு முறை பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் அவர் தரமணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது அடையாறு காவல் மாவட்டத்தின் இணையவழி குற்றப்பிரிவில் விசாரணை (Investigation in the Cyber Crime Division) செய்யப்படுகிறது. பொதுமக்கள் இதுபோன்று மோசடியான Link-களை தவிர்த்து, சந்தேகம் இருந்தால் 1930 அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் செய்ய வேண்டும் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
போலியான சலான் URL மூலம் இணைய மோசடி
போலியான போக்குவரத்து சலான் குறுஞ்செய்திகள் மற்றும் இணையதள இணைப்புகள் (URL Links) மூலமாக இணையவழி மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.




தரமணி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தனது இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை குறிப்பிடும் ஒரு குறுஞ்செய்தியை பெற்றார். அந்தச் செய்தியில் இணைக்கப்பட்டிருந்த இணையதள URL Link-ஐ நம்பி கிளிக் செய்த அவர், கைப்பேசி செயலிழந்ததுடன் பல OTP எண்கள் வந்ததை கவனித்தார்.
பின்னர், அவரது Kotak வங்கி கணக்கில் இருந்து இரண்டு முறைகளில் ரூ.50,000 மற்றும் ரூ.49,000 ஆகிய தொகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதுகுறித்து அவர் தரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது அடையாறு காவல் மாவட்டத்தின் இணையவழி குற்றப் பிரிவில் விசாரணை செய்யப்படுகிறது.
சென்னை காவல்துறை எச்சரிக்கை
Beware! Phishing SMS on Traffic Fines Leads to ₹1 Lakh Fraud in #Taramani pic.twitter.com/fTZyILuuuy
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) June 28, 2025
பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க காவல்துறை வேண்டுகோள்
இதேபோல் பலர் வாகன சலான் குறுஞ்செய்திகளை உண்மை என நம்பி மோசடியான URL களைத் திறந்து, தனது கைப்பேசியையும் வங்கி கணக்குகளையும் அந்நியர் கட்டுப்பாட்டுக்கு வழங்கி விடுகிறார்கள். இந்த வகை இணைய மோசடிகள் மூலம் குற்றவாளிகள், OTP, UPI, தொடர்பு விவரங்கள் போன்ற அனைத்து தரவுகளையும் திருடி நிதி இழப்பை ஏற்படுத்துகின்றனர்.
தேசிய இணைய குற்ற தடுப்பு எண்ணில் புகார் அளிக்க வேண்டும்
இதனைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் எந்தவொரு சந்தேகமான இணையதள இணைப்புகளையும் கிளிக் செய்ய வேண்டாம். குறிப்பாக போக்குவரத்து சலான்கள் தொடர்பான குறுஞ்செய்திகளில் வரும் URL Link-களை தவிர்க்க வேண்டும்.
இதுபோன்ற சந்தேகத்தக்க செயல்கள் ஏற்பட்டால் உடனடியாக தேசிய இணைய குற்ற தடுப்பு உதவி எண் 1930-ல் தொடர்புகொண்டு அல்லது https://www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் பதிவு செய்யலாம் என சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.