Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

NEET UG 2025: மின் தடையால் நீட் தேர்வில் எந்த பாதிப்பும் இல்லை.. மறுதேர்வு குறித்தான வழக்கில் மத்திய அரசு விளக்கம்!

NEET 2025 Exam Controversy: 2025 மே 4ம் தேதி சென்னையில் நடந்த நீட் தேர்வில் மின்வெட்டு ஏற்பட்டதால் 13 மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். சென்னை உயர்நீதிமன்றம் தேர்வு முடிவுகளை தற்காலிகமாக தடை செய்தது. மத்திய அரசு, மின் தடை தேர்வை பாதிக்கவில்லை என வாதிட்டது. மாணவர்கள், கண்காணிப்பு கேமரா காட்சிகளை சமர்ப்பிக்கக் கோரியுள்ளனர். நீதிபதி தீர்ப்பை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

NEET UG 2025: மின் தடையால் நீட் தேர்வில் எந்த பாதிப்பும் இல்லை.. மறுதேர்வு குறித்தான வழக்கில் மத்திய அரசு விளக்கம்!
நீட் தேர்வு - சென்னை சூப்பர் கிங்ஸ்Image Source: Twitter
mukesh-kannan
Mukesh Kannan | Published: 03 Jun 2025 19:51 PM

சென்னை, ஜூன் 3: கடந்த 2025 மே 4ம் தேதி சென்னையில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் மின்வெட்டு மற்றும் புயல் காரணமாக தேர்வின்போது பல இடையூறு ஏற்பட்டதாக கூறி 13 மாணவர்கள் தொடர்ந்த மனுவை தொடர்ந்து, தேசிய தேர்வு முகமை நடத்திய இளங்கலை நீட் தேர்வு (NEET-UG 2025) முடிவுகளை வெளியிடுவதை சென்னை உயர் நீதிமன்றம் தற்காலிகமாக தடை செய்தது. இந்தநிலையில், இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்தில் (Chennai High Court) இன்று அதாவது 2025 ஜூன் 3ம் தேதி விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசானது, மின் தடை (Power Cut) காரணமாக இளங்கலை நீட் தேர்வில் எந்த பாதிப்பும் ஏற்படாததால், மீண்டும் ஒரு முறை மறு தேர்வு நடத்த முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

என்ன நடந்தது..?

சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள பி.எம்.ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா சி.ஆர்.பி.எஃப் தேர்வு மையத்தில் கடந்த 2025 மே 4ம் தேதி நீட் இளங்கலை தேர்வு நடைபெறவிருந்தது. அன்றைய நாளில் அப்பகுதியில் கடும் கனமழை பெய்ததால், தேர்வு மையத்தில் மின்சாரம் தடைப்பட்டது. இதுமட்டுமின்றி, தேர்வு மையத்திற்குள் மழைநீரும் புகுந்ததாகவும் கூறப்படுகிறது. தேர்வு நடைபெறும் போது ஒரு மணி நேரம் நீடித்த மின் தடையால், வெளிச்சமின்மை, மழைநீர் மண்டபத்திற்குள் புகுந்தது, மாணவர்கள் வேறு இடத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து தேர்வு எழுத பல சிரமங்களை எதிர்கொண்டதாக, 13 மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல், அன்றைய நாளில் குன்றத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய இரண்டு மாணவர்களும், கே கே நகர் பத்ம ஷேசாச்திரி மாணவர் 1 நபரும் வழக்கு தாக்கல் செய்தனர்.

முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக நடந்த விசாரணையின்போது, நீதிபதி வி.லட்சுமி நாராயணன், 2025 மே 4ம் தேதி தேர்வின்போது தேர்வு மையத்தில் மின் தடை ஏற்பட்டதா, அது தேர்வாளர்களுக்கு சிரமத்தை கொடுத்ததா, அவர்களின் செயல்திறனை பெரிதும் பாதித்தா என்பதை விசாரிக்குமாறு தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, இந்த வழக்கு 2025 ஜூன் 2ம் தேதிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, தேர்வாளர்களின் விசாரணைக்கு பதிலளிக்கும்படி, தேசிய தேர்வு முகமை, தேசிய மருத்துவ ஆணையம், மத்திய அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை அதுவரை வெளியிடக்கூடாது என இடைக்கால தடை விதித்தது.

இளங்கலை நீட் தேர்வு விடைத்தாள் வெளியீடு:

இந்தநிலையில், நீதிபதி சி.குமரப்பன் முன் விசாரணைக்கு இன்று அதாவது 2025 மே 3ம் தேதி இந்த வழக்கு  விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜரானார். அப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து விசாரணை நடந்தபோது, நீட் தேர்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதால் மறு தேர்வு நடத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தொடர்ந்து, வழக்கு தொடர்ந்த தேர்வாளர்கள் வெளிச்சம் இருந்தது என்பதை மத்திய அரசு நிரூபிக்க தேர்வு மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சி.குமரப்பன், மனுக்கள் மீதான தீர்ப்பை வருகின்ற 2025 ஜூன் 6 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

புதிதாகத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகர் ரவி மோகன்!
புதிதாகத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகர் ரவி மோகன்!...
முன்பதிவு செய்த டிக்கெட்டின் பெயரை மாற்ற முடியுமா? எப்படி செய்வது
முன்பதிவு செய்த டிக்கெட்டின் பெயரை மாற்ற முடியுமா? எப்படி செய்வது...
மேஜிக் நிகழ்ந்ததா? .. கமல் - மணிரத்னத்தின் தக் லைஃப் விமர்சனம்!
மேஜிக் நிகழ்ந்ததா? .. கமல் - மணிரத்னத்தின் தக் லைஃப் விமர்சனம்!...
விஜய் குறித்து சர்ச்சை பேச்சு.. விளக்கம் அளித்த வேல்முருகன்
விஜய் குறித்து சர்ச்சை பேச்சு.. விளக்கம் அளித்த வேல்முருகன்...
நான்கு முகங்கள் கொண்ட முருகன்.. இந்த கோயில் தெரியுமா?
நான்கு முகங்கள் கொண்ட முருகன்.. இந்த கோயில் தெரியுமா?...
என் மகன் சித்தப்பா தனுஷின் மிகப்பெரிய ரசிகர்... செல்வராகவன்
என் மகன் சித்தப்பா தனுஷின் மிகப்பெரிய ரசிகர்... செல்வராகவன்...
வைகாசி விசாக நாளில் இதெல்லாம் செய்தால் புண்ணியம் கிட்டும்!
வைகாசி விசாக நாளில் இதெல்லாம் செய்தால் புண்ணியம் கிட்டும்!...
இதை செய்யவில்லை என்றால் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 கிடைக்காது!
இதை செய்யவில்லை என்றால் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 கிடைக்காது!...
கோயிலுக்கு செல்பவர்களா நீங்கள்? - இந்த தப்பை பண்ணாதீங்க!
கோயிலுக்கு செல்பவர்களா நீங்கள்? - இந்த தப்பை பண்ணாதீங்க!...
ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸாகும் சூப்பர் ஹிட் படம்
ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸாகும் சூப்பர் ஹிட் படம்...
2 மாதங்களில் 12-15% வரை குறைபோகும் தங்கம் விலை?
2 மாதங்களில் 12-15% வரை குறைபோகும் தங்கம் விலை?...