Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பொளக்கப்போகும் மழை.. எந்த மாவட்டங்களுக்கு அரஞ்சு அலர்ட்? சென்னையில் எப்படி இருக்கும்?

Tamil nadu Rain Alert: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

பொளக்கப்போகும் மழை.. எந்த மாவட்டங்களுக்கு அரஞ்சு அலர்ட்? சென்னையில் எப்படி இருக்கும்?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 Oct 2025 15:56 PM IST

வானிலை நிலவரம், அக்டோபர் 20, 2025: தென்கிழக்கு அரபிக்கடலில், கேரளா கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. அதேபோல், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து, 20 அக்டோபர் 2025 தேதியான இன்று அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு திசையில் மேலும் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க, தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தீபாவளி முடிந்து ஊர் திரும்ப சிறப்பு ரயில்கள் – எப்போ தெரியுமா?

 

மழை எச்சரிக்கைகள்:

  • 20 அக்டோபர் 2025 – ஆரஞ்சு எச்சரிக்கை: இராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர்.
    கனமழை வாய்ப்பு: கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை.
  • 21 அக்டோபர் 2025 – ஆரஞ்சு அலர்ட்: இராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர். கனமழை வாய்ப்பு: கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல்.
  • 22 அக்டோபர் 2025 – ஆரஞ்சு எச்சரிக்கை: திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை. கனமழை வாய்ப்பு: கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை.
  • 23 அக்டோபர் 2025 – ஆரஞ்சு அலர்ட்: திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர். கனமழை எச்சரிக்கை: கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர்.
  • 24 அக்டோபர் 2025 – கனமழை வாய்ப்பு: திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஈரோடு, நீலகிரி, கோவை, தர்மபுரி.

அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகும் நிலையில், வரக்கூடிய நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.