AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புது திட்டமா? ஏற்கெனவே இருந்ததா? வாட்ஸ் அப் பிறப்புச் சான்றிதழ் டவுன்லோட்.. உண்மை என்ன?

Birth Certificate WhatsApp Service: சென்னையில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் இனி பெற்றோரின் வாட்ஸ் ஆப்பிற்கு நேரடியாக அனுப்பப்படும். மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணின் மூலம் PDF வடிவில் சான்றிதழ் கிடைக்கும். வாட்ஸ் ஆப் சாட்பாட் மூலம் மீண்டும் பதிவிறக்கம் செய்யும் வசதியும் அறிமுகமாகியுள்ளது.

புது திட்டமா? ஏற்கெனவே இருந்ததா? வாட்ஸ் அப் பிறப்புச் சான்றிதழ் டவுன்லோட்.. உண்மை என்ன?
Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 19 May 2026 10:46 AM IST

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் இனி பெற்றோரின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கே நேரடியாக அனுப்பப்படும் புதிய சேவை அறிமுகமாகியுள்ளது. மருத்துவமனைகளில் குழந்தை பிறக்கும் போது பதிவு செய்யப்படும் கைபேசி எண்ணின் மூலம் PDF வடிவில் சான்றிதழ் கிடைக்கும். இதற்கு முன்பு இணையதளம் மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்யும் வசதி இருந்தது. தற்போது தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக இந்த டிஜிட்டல் சேவை செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சியின் வாட்ஸ் ஆப் சாட்பாட் எண் 94450 61913 மூலம் பிறப்புச் சான்றிதழை மீண்டும் பதிவிறக்கம் செய்யலாம். இதனால் அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய சிரமம் குறையும். மக்கள் சேவையை எளிமைப்படுத்தும் முயற்சியாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் சேவையில் புதிய முன்னேற்றம்

பெருநகர சென்னை மாநகராட்சி மக்களுக்கு தேவையான சேவைகள் எளிதாகவும் விரைவாகவும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து பல டிஜிட்டல் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. அதில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக, இனி சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் பெற்றோரின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கே நேரடியாக அனுப்பப்படும் புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் குழந்தை பிறந்த உடனேயே பதிவு செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த சேவை செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் அலுவலகங்களுக்கு சென்று சான்றிதழ் பெற வேண்டிய சிரமம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிறப்புச் சான்றிதழ் பெறும் நடைமுறையில் மாற்றம்

இதுவரை சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்களை பெற்றோர் மாநகராட்சியின் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து வந்தனர். ஆனால் தற்போது தமிழ்நாட்டில் முதல்முறையாக அறிமுகமாகும் இந்த புதிய வசதியின் மூலம், குழந்தை பிறக்கும் போது மருத்துவமனையில் பதிவு செய்யப்படும் பெற்றோரின் கைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்ட வாட்ஸ் ஆப் எண்ணிற்கு பிறப்புச் சான்றிதழ் PDF வடிவில் நேரடியாக அனுப்பப்படும். இது குறிப்பாக புதிய பெற்றோருக்கு நேரம் மிச்சப்படுத்தும் சேவையாக அமையும் என்று கருதப்படுகிறது. அரசு சேவைகளை மக்களின் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த மாற்றம் பார்க்கப்படுகிறது.

Also Read: “வாக்குறுதி கொடுக்கத் தெரிந்தவருக்கு, 10 லட்சம் கோடி கடன் இருக்குன்னு தெரியாதா?” முதல்வர் விஜய்யை சாடிய சீமான்!

வாட்ஸ் ஆப் சாட்பாட் மூலம் பதிவிறக்கம் செய்யும் வசதி

மேலும், பெற்றோர் தங்களது குழந்தையின் பிறப்புச் சான்றிதழை தேவையான நேரத்தில் மீண்டும் பதிவிறக்கம் செய்யும் வகையில் மாநகராட்சி சிறப்பு வாட்ஸ் ஆப் சாட்பாட் வசதியையும் ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ் ஆப் சாட்பாட் எண் 94450 61913 மூலம், குழந்தை பிறந்தபோது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணைப் பயன்படுத்தி தகவல்களை உறுதிப்படுத்தி, பிறப்புச் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த நடைமுறை மூலம் ஆவணங்களை பெறுவதில் ஏற்படும் தாமதம் குறைந்து, மக்கள் சேவை மேலும் எளிமையாகும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

PR-155-GCC Service-Birth certificate will be sent to the parents’ WhatsApp number-Press Release

தமிழகத்தில் ஏற்கனவே இருந்த திட்டமா?

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்களை, பெற்றோரின் வாட்ஸ்ஆப் எண்ணிற்கே நேரடியாக PDF வடிவில் அனுப்பும் புதிய டிஜிட்டல் சேவை தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தை பிறக்கும் போது மருத்துவமனையில் பதிவு செய்யப்படும் கைபேசி எண்ணின் அடிப்படையில் இந்த சான்றிதழ் அனுப்பப்படும். இதற்கு முன்பு இணையதளம் மூலம் மட்டுமே சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்ய முடிந்த நிலையில், தற்போது மக்கள் அரசு அலுவலகங்களுக்குச் அலைவதைக் குறைக்கும் வகையில் இந்த மக்கள் சேவை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இது தற்போதைய தமிழக அரசின் புதிய திட்டமாகவே பார்க்கப்படுகிறது.

Follow Us