சென்னையில் சட்டவிரோத பார் மற்றும் மதுபாட்டில் விற்பனை.. அதிரடி காட்டிய போலீஸ் – 16 பேர் கைது..
சட்டவிரோதமாக செயல்படும் பார்கள், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து சில்லறை விற்பனையில் ஈடுபடுபவர்கள் குறித்து கண்காணிக்கும் வகையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து சுமார் 500 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகர எல்லைக்குள் சட்டவிரோதமாக பார்கள் நடத்துபவர்கள் மற்றும் சில்லறையாக மதுபாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
கோப்பு புகைப்படம்
Follow Us