AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இன்று தொடங்கும் தென்மேற்கு பருவமழை.. 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

Tamil Nadu Weather Update: கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நல்ல மழை பதிவாகி வரும் நிலையில், வெப்பநிலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 35.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

இன்று தொடங்கும் தென்மேற்கு பருவமழை.. 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 16 May 2026 06:25 AM IST

மே 16, 2026: மே 16ஆம் தேதியான இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தெற்கு வங்கக் கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் தொடங்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் நீடித்து வருகிறது. இந்த இரண்டின் காரணமாக தமிழகத்தில் வரும் நாட்களில் நல்ல மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் தொடரும் கனமழை:

மே 16ஆம் தேதியான இன்று விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பதிவாகக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மே 17ஆம் தேதி திண்டுக்கல், தேனி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும், மே 18ஆம் தேதி தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: குளுகுளுவென மாறும் சென்னை.. மே 18 வரை வானிலை இப்படி தான் இருக்கும் – பிரதீப் ஜான் தகவல்..

மே 19ஆம் தேதி தமிழகத்தின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், இந்த நிலை மே 21ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

படிப்படியாக குறையும் வெப்பநிலை:

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நல்ல மழை பதிவாகி வரும் நிலையில், வெப்பநிலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 35.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 33.1 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 32.7 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க: சென்னை டெக் மகிந்திரா நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து – பரபரப்பு தகவல்

வரும் மே 18ஆம் தேதி வரை இதே நிலை நீடிக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலடுக்க காற்றழுத்த சுழற்சி காரணமாக கிழக்கு திசையிலிருந்து காற்று வீசுவதால் வானிலை குளிர்ச்சியாக மாறியுள்ளதாகவும், திங்கட்கிழமை முதல் வானிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us