AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தலைவர்கள் மக்களுடன் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சியளிக்கிறது’.. முதலமைச்சர் விஜய்யை பாராட்டிய தமிழிசை சௌந்தராஜன்..

இன்று நடைபெற்ற போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தான் ஓட்டத்தில் ஏராளமான இளைஞர்களுடன் இணைந்து முதலமைச்சர் விஜய் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது; பாராட்டத்தக்கதாகவும் உள்ளது. தலைவர்கள் மக்களுடன் இணைந்து நடக்கும்போதும், ஓடும்போதும், அவர்களுடன் தோளோடு தோள் நின்று செயல்படும்போதும், விழிப்புணர்வு ஒவ்வொரு இல்லத்தையும் சென்றடைகிறது என தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.

தலைவர்கள் மக்களுடன் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சியளிக்கிறது’.. முதலமைச்சர் விஜய்யை பாராட்டிய தமிழிசை சௌந்தராஜன்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 26 Jun 2026 10:05 AM IST

ஜூன் 26, 2026: பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் இளைஞர்களுடன் இணைந்து பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை பாராட்டியுள்ளார். சென்னை காமராஜர் சாலையில், பேரறிஞர் அண்ணா நினைவிடம் அருகே நடைபெற்ற ‘Start Run, Stop Drugs’ போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் சுமார் 6 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது. இந்த ஓட்டத்தை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன், ஏராளமான இளைஞர்களுடன் இணைந்து ஓட்டத்திலும் பங்கேற்றார்.

போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தான்:

“உயர்ந்த நோக்கத்திற்காக ஓடுவோம்… போதைப்பொருள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த விழிப்புணர்வு ஓட்டம், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் இருந்து தொடங்கி 6 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது.

விழிப்புணர்வு ஓட்டம் தொடங்குவதற்கு முன்பு, அங்கு வைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு பலகையில், “Start Run, Stop Drugs… Sports-ஆ எடு, Drugs-ஆ விடு… பிரியமுடன், விஜய்” என்ற வாசகத்துடன் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார். பின்னர், இளைஞர்களுடன் இணைந்து விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்கேற்று போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மேலும் படிக்க: ‘Start Run, Stop Drugs’ ஓட்டம்.. மக்களுடன் இணைந்து மாரத்தானில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய்..

முதல்வர் விஜய்யை பாராட்டிய தமிழிசை சௌந்தராஜன்:

இந்த நடவடிக்கையை பாராட்டிய தமிழிசை சௌந்தரராஜன், இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பதிவில் கூறியதாவது: “பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எப்போதும் முன்னுதாரணமாக இருந்து, சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்கள், உடற்தகுதி இயக்கங்கள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் இளைஞர்களுடன் நேரடியாக பங்கேற்று வருகிறார். தலைவர்கள் மக்களுடன் இணைந்து நிற்க வேண்டும் என்ற அவரது நம்பிக்கை, பல்வேறு சமூக நல முயற்சிகளில் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிக்க ஊக்கமளித்துள்ளது.

சமீபத்தில், பிரதமரைப் போலவே, சர்வதேச யோகா தினம் உள்ளிட்ட பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயும் நேரடியாக பங்கேற்க வேண்டும் என்று நான் பரிந்துரைத்திருந்தேன்.

முதல்வரின் செயல் மகிழ்ச்சியளிக்கிறது:

அந்த வகையில், இன்று நடைபெற்ற போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தான் ஓட்டத்தில் ஏராளமான இளைஞர்களுடன் இணைந்து முதலமைச்சர் விஜய் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது; பாராட்டத்தக்கதாகவும் உள்ளது. தலைவர்கள் மக்களுடன் இணைந்து நடக்கும்போதும், ஓடும்போதும், அவர்களுடன் தோளோடு தோள் நின்று செயல்படும்போதும், விழிப்புணர்வு ஒவ்வொரு இல்லத்தையும் சென்றடைகிறது.

போதைப்பொருளுக்கு எதிரான போராட்டம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.

Follow Us