AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பெரம்பூர் பேருந்தில் ஏறிய முதல்வர் விஜய்.. நடத்துநருடன் கலந்துரையாடி ஆய்வு!

இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பெரம்பூர் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் ஏறி பயணம் மேற்கொண்டார். பின்னர் பேருந்தின் உள்ளே அமர்ந்தபடி தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தார்.

பெரம்பூர் பேருந்தில் ஏறிய முதல்வர் விஜய்.. நடத்துநருடன் கலந்துரையாடி ஆய்வு!
பேருந்தில் பயணம் செய்த முதல்வர் விஜய்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 Jun 2026 11:19 AM IST

ஜூன் 25, 2026: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் புதிதாக வாங்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட பேருந்துகளை தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று மக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்ததுடன், பயணச்சீட்டும் (டிக்கெட்) வாங்கிய அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

300 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்த முதல்வர் விஜய்:

தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்காக புதிய பேருந்துகள் வாங்கப்பட்டிருந்தன. இந்த பேருந்துகள் கடந்த ஜூன் 22-ஆம் தேதி, முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு சேவைக்காக அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் நிர்வாக காரணங்களால் தொடக்க விழா ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் படிக்க: “மிரட்டலுக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம்!”.. எ.வ.வேலு வீடுகளில் ரெய்டு.. மு.க.ஸ்டாலின் கண்டனம்!

இதன் காரணமாக புதிய பேருந்துகள் சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும், அந்த பேருந்துகளுக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் சென்னையில் தங்கியிருந்ததால், போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியும் குழப்பமும் ஏற்பட்டதாக கூறப்பட்டது. புதிய பேருந்துகளை உடனடியாக சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பெரம்பூர் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் ஏறி பயணம் மேற்கொண்டார்.

அரசு பேருந்தில் டிக்கெட் வாங்கி பயணம் செய்த முதல்வர் விஜய்:

பேருந்தில் பயணம் செய்தபோது, முதலமைச்சர் சில்லறை கொடுத்து பயணச்சீட்டை வாங்கினார். பின்னர் பேருந்தின் உள்ளே அமர்ந்தபடி தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

மேலும், சாலையோரங்களில் அணிவகுத்து நின்றிருந்த அரசு பேருந்துகளின் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பொதுமக்களை நோக்கி முதலமைச்சர் கையசைத்து வாழ்த்து தெரிவித்தார். புதிய பேருந்துகள் சேவைக்கு வந்துள்ளதால், பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயண அனுபவம் கிடைக்கும் என்றும், அரசு போக்குவரத்து சேவையின் தரம் மேலும் மேம்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow Us