திமுக கூட்டணியில் ஓட்டையா? புதிய புயலை கிளப்பிய வைகை செல்வன்.. திருமாவளவன் சொன்ன விஷயம்
Thirumavalavan Vaigaichelvan Meet : திருச்சி மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் சந்தித்து பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமாவளவனுடனான சந்திப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. இதற்கு திருமாவளவனும் பதில் அளித்துள்ளார்.

சென்னை, ஜூன் 18 : திருச்சி மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை (Thirumavalavan) அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் (Vaigaichelvan) சந்தித்து பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமாவளவனுடனான சந்திப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு (Tamil Nadu Assembly Election 2026) இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்து. அரசியல் கட்சி தலைவர்கள் தற்போதே கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும், கட்சியை பலப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் கட்சிகள் எடுத்து வருகின்றன. வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலிர் ஐந்து முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது 4 முனைப்போட்டி நிலவும் சூழல் உள்ளது. அதாவது, திமுக கூட்டணி (DMK Alliance) வலுவாக இருக்கும் நிலையில், அண்மையில், அதிமுக பாஜக கூட்டணி அமைத்தது.
திமுக கூட்டணியில் ஓட்டையா?
மேலும், நாம் தமிழர் கட்சி மற்றும தமிழக வெற்றிக் கழகம் தனித்து களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், கடந்த சில மாதங்களாகவே அரசியல் திருப்பங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், திருமாவளவன் – வைகைச் செல்வன் சந்திப்பு அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு குறித்து வைகைச் செல்வன் பேசியுள்ளார் . அதாவது, “திருச்சியில் வைகைச்செல்வன் மற்றும் திருமாவளவன் சந்திப்பில் திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது. இது தான் தற்போதைக்கு சொல்லமுடியும்.




அதிமுக கூட்டணியில் ஜெகன் மூர்த்தி இருக்கிறார் என்பதற்காக காழ்ப்புணர்ச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணி நாளுக்கு நாள் வளர்ச்சி பெறும், இன்னும் நிறையபேர் வர உள்ளனர்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவனும் விளக்கம் அளித்துள்ளார்.
திருமாவளவன் சொன்ன விஷயம்
திருச்சி ஒரு நிகழ்ச்சியில் சென்றேன். அங்கு நான் தங்கி இருந்த அறைக்கு பக்கத்தில் அவர் இருந்தார். அப்போது, ”நாங்கள் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, வைகை செல்வன் அவர்கள் எனக்கு புத்தகத்தை பரிசாக அளித்தார். பலரது முன்னிலையில் இந்த சந்திப்பு நடந்தது. நாங்கள் அரசியல் எதுவும் பேசவில்லை” என்று விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து பேசிய திருமாவளவன், “தமிழகத்தில் மதவாத அரசியலுக்கு ஒருபோதும் இடம்மில்லை என்பது தான் வரலாறு. அதற்கு நேர் மாறாக பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் மக்களை மதத்தின் பெயரால் பிளவுப்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் இந்துகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே முரண்பாடுகள், மோதல்கள் இல்லை. சகோதரத்துவ வாஞ்சையுடன் அனைத்து மதங்களை சார்ந்த மக்களும் வாழ்ந்து வரும் நிலையில், இங்கு மதத்தின் பெயரால் அரசியல் ஆதாயம் தேட முயற்சி நடந்து வருகிறது. இதனை தமிழ்நாட்டு மக்கள் ஒன்றாக புறக்கணிப்பார்கள்” என்று கூறினார்.