AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

T20 World Cup: சூப்பர் 8 சுற்றில் இந்தியாவின் முதல் சறுக்கல்.. அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புகள் என்னென்ன?

T20 World Cup Semifinal Scenario: தொடர்ந்து 188 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, ஆரம்பம் முதலே தடுமாறியது. மார்கோ யான்சனின் துல்லியமான பந்துவீச்சில் (4 விக்கெட்டுகள்) சிக்கிய இந்தியா, வெறும் 111 ரன்களுக்கு மோசமாக சுருண்டது.

T20 World Cup: சூப்பர் 8 சுற்றில் இந்தியாவின் முதல் சறுக்கல்.. அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புகள் என்னென்ன?
தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா அதிர்ச்சி தோல்வி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 23 Feb 2026 08:09 AM IST

அகமதாபாத்தில் நேற்று (பிப்.23) நடைபெற்ற டி20 உலகக்கோப்பை 2026 (T20 World Cup 2026)  ‘சூப்பர் 8’ சுற்றின் முதல் போட்டியில், இந்திய அணி தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்வி இந்தியாவின் அரையிறுதி வாய்ப்புகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. டேவிட் மில்லர் (63 ரன்கள்) மற்றும் தேவால்ட் பிரெவிஸ் (45 ரன்கள்) ஆகியோரின் அதிரடி ஆட்டம் தென்னாப்பிரிக்காவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. இந்தியத் தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா அபாரமாகப் பந்துவீசி 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையும் படிக்க: ‘சூப்பர் 8’ சுற்றில் அதிரப்போகும் குரூப்-1.. இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்..

நெருக்கடிக்குத் தள்ளப்பட்ட இந்தியா:

தொடர்ந்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, ஆரம்பம் முதலே தடுமாறியது. மார்கோ யான்சனின் துல்லியமான பந்துவீச்சில் (4 விக்கெட்டுகள்) சிக்கிய இந்தியா, வெறும் 111 ரன்களுக்கு சுருண்டது. இந்தத் தோல்விக்குப் பிறகு, இந்தியா தனது அரையிறுதி இடத்தைப் உறுதி செய்ய மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் (மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிராக) கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால்:

இந்தியா தனது அடுத்த இரண்டு போட்டிகளிலும் வென்றால் 4 புள்ளிகளைப் பெறும். வேறு இரண்டு அணிகளும் தலா 4 புள்ளிகளைப் பெற்றால் ஒழிய, இது அரையிறுதிக்கு முன்னேறப் போதுமானதாக இருக்கும். எனினும், தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் இருந்தால், நிகர ரன் ரேட் (NRR) அடிப்படையில் மட்டுமே வெற்றி தீர்மானிக்கப்படும்.

இதையும் படிக்க : மழையால் அனைத்து சூப்பர்-8 போட்டிகளும் ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும்? ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றால்:

இந்தியா ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றால், தென்னாப்பிரிக்கா தனது அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். இந்தச் சூழலில் மற்றொரு நிபந்தனை என்னவென்றால், மேற்கிந்தியத் தீவுகள் – ஜிம்பாப்வே இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு எதிராக இந்தியா வெற்றி பெற வேண்டும். அப்படி நடந்தால், இந்தியா, ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய மூன்று அணிகளும் தலா 2 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அப்போதும், இந்தியாவின் தகுதி என்பது மீண்டும் ஒருமுறை முற்றிலும் நிகர ரன் ரேட்டை (NRR) பொறுத்தே அமையும்.