Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Suryakumar Yadav Surgery: திடீரென அறுவை சிகிச்சை.. சூர்யகுமார் யாதவுக்கு என்ன ஆனது..? வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சி!

Suryakumar Yadav Successful Hernia Surgery: சூர்யகுமார் யாதவ் ஜெர்மனியில் வெற்றிகரமான விளையாட்டு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சமூக ஊடகங்களில் அவர் தனது குணமடைதல் பற்றி பதிவிட்டுள்ளார். 6-12 வாரங்கள் குணமடைவதற்கு ஆகலாம் என்பதால், 2025 ஆகஸ்ட் வங்கதேச சுற்றுப்பயணத்தில் அவர் பங்கேற்க மாட்டார். 2026 டி20 உலகக் கோப்பையில் அவர் இந்திய அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Suryakumar Yadav Surgery: திடீரென அறுவை சிகிச்சை.. சூர்யகுமார் யாதவுக்கு என்ன ஆனது..? வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சி!
சூர்யகுமார் யாதவ்Image Source: Suryakumaryadav/Instagram
mukesh-kannan
Mukesh Kannan | Published: 26 Jun 2025 11:42 AM

சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) நீண்ட காலமாக விளையாட்டு குடலிறக்கம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தநிலையில், அதற்கான அறுவை சிகிச்சையை ஜெர்மனியில் வெற்றிகரமாக செய்து முடித்தார். இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு, படுக்கையில் படுத்திருந்தது போன்ற புகைப்படத்தை சூர்யகுமார் யாதவ் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டு ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) கேப்டனாக சூர்யகுமார் யாதவ், தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியின்போது ரோஹித் சர்மா (Rohit Sharma) ஓய்வை அறிவித்தார். அதன்பிறகு, பிசிசிஐ டி20 அணியின் கேப்டன் பதவியை சூர்யகுமார் யாதவிடம் ஒப்படைத்தது.

அறுவை சிகிச்சைக்கு பிறகு சூர்யகுமார் யாதவ் தனது சமூக ஊடக பக்கத்தில், “வாழ்க்கை பற்றிய அப்டேட் இது. வயிற்றின் கீழ் வலது பகுதியில் விளையாட்டு ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நான் குணமடைந்து வருகிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கிரிக்கெட் மைதானத்திற்குத் திரும்ப வலுவுடன் காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

சூர்யகுமார் யாதவ் எப்போது இந்திய அணிக்கு திரும்புவார்..?


இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் பிறகு, இந்திய அணி வருகின்ற 2025 ஆகஸ்ட் மாதம் வங்கதேச சுற்றுப்பயணத்தில் ஒருநாள் போட்டிகளிலும், பின்னர் டி20 தொடரிலும் விளையாட இருக்கிறது. முதல் டி20 போட்டி 2025 ஆகஸ்ட் 26ம் தேதியும், கடைசி டி20 போட்டி 2025 ஆகஸ்ட் 31ம் தேதியும் நடைபெறும். சூர்யகுமார் யாதவ் இந்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. விளையாட்டு ஹெர்னியா அறுவை சிகிச்சைக்குப் பிறகு குணமடைய 6 முதல் 12 வாரங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு அதாவது 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம், டி20 உலகக் கோப்பையில் விளையாடுகிறது. இந்த உலகக் கோப்பை போட்டியானது இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க இருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியை வழிநடத்துவார்.

சூர்யகுமார் யாதவ் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

30 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ், இந்திய அணிக்காக இதுவரை 1 டெஸ்ட், 37 ஒருநாள் மற்றும் 83 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 4 அரைசதங்களுடன் 773 ரன்கள் எடுத்துள்ளார். அதேநேரத்தில் டி20யை பொறுத்தவரை 4 சதங்கள் மற்றும் 21 அரைசதங்கள் உதவியுடன் 2598 ரன்கள் எடுத்துள்ளார்.

ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 16 இன்னிங்ஸ்களில் 5 அரைசதங்களுடன் 717 ரன்கள் எடுத்துள்ளார். சூர்யகுமார் யாதவ் 2018 முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 2012ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் அறிமுகமான, சூர்யகுமார் யாதவ் அதன் பிறகு 4 ஆண்டுகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார்.