Priya Saroj – Rinku Singh Wedding: ரிங்கு சிங்குக்கு டும் டும் டும்! மணப்பெண் யார் தெரியுமா..?
Rinku Singh Marriage: உத்தரபிரதேச மச்லிஷாஹர் தொகுதி எம்.பி பிரியா சரோஜ் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் ஆகியோர் 2025 நவம்பர் 18 அன்று வாரணாசியில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். ஜூன் 8 அன்று லக்னோவில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. வழக்கறிஞரான பிரியா, இளம் எம்.பி. ஆவார். ரிங்கு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இருவரும் நண்பர் மூலம் அறிமுகமாகி திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் உள்ள மச்லிஷஹர் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி பிரியா சரோஜூம் (Priya Saroj), இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்குவும் (Rinku Singh) விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள் இவர்களது திருமணமானது வருகின்ற 2025 நவம்பர் 18ம் தேதி வாரணாசியில் உள்ள ஹோட்டல் தாஜில் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்திற்கு முன்னதாக, இவர்களது நிச்சயதார்த்தம் 2025 ஜூன் 8ம் தேதி லக்னோவில் நடைபெறுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் யார் இந்த பிரியா சரோஜ் என்பதை இங்கு தெரிந்துகொள்வோம்.
யார் இந்த பிரியா சரோஜ்..?
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கார்கியான் கிராமத்தைச் சேர்ந்த பிரியா, இந்தியாவின் இளைய எம்.பி.க்களில் ஒருவர். 26 வயதான பிரியா சரோஜ், தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞராக இருந்து வருகிறார். இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் உ.பி.யின் மச்லிஷாஹர் தொகுதியில் நின்று வெற்றிபெற்று, எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரியா சரோஜின் தந்தையான தூபானி சரோஜ் சமாஜ்வாதி கட்சியில் முக்கிய தலைவர். இவர் இந்த தொகுதியில் இதற்கு முன்பு போட்டியிட்டு, 3 முறை மக்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பி.பி. சரோஜை 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
ரிங்கு சிங்குவும், பிரியா சரோஜூம் சந்தித்தது எப்படி..?
பிரியா சரோஜின் தோழியின் தந்தை ஒரு கிரிக்கெட் வீரர். அவர் மூலமாகத்தான் ரிங்குவும் பிரியாவும் அறிமுகமானார்கள். இருவருக்கும் ஏற்கனவே ஒருவரையொருவர் தெரியும். தற்போது, இருவரும் தங்கள் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர்.




ரிங்கு சிங் குடும்ப பின்னணி..?
கடந்த 1997ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி ரிங்கு சிங் அலிகரில் மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை கான்சந்திரா எரிவாயு நிறுவனத்தில் சிலிண்டர் விநியோகஸ்தராகப் பணிபுரிந்தார். ரிங்கு சிங் சிறு வயது முதல் தந்தைக்கு உதவியாக சிலிண்டரி விநியோகம் செய்து வந்தார். அதன்பிறகு, வறுமையை எதிர்த்து போராடி, இந்திய கிரிக்கெட் அணிக்குள் இடம் பிடித்தார். ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.13 கோடிக்கு தக்கவைத்துக் கொண்டது.
முன்னதாக, கடந்த 2017ம் ஆண்டு முதன்முதலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.10 லட்சத்திற்கு ரிங்கு சிங்கை வாங்கியது. ஆனால், அந்த சீசனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 2018 ஆம் ஆண்டில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரை ரூ. 80 லட்சத்திற்கு தங்கள் அணியில் சேர்த்தது.இப்போது அவரது ஆண்டு வருமானம் சுமார் 60 முதல் 80 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில், ரிங்கு சிங்கின் நிகர மதிப்பு சுமார் ரூ.8 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.