Virat Kohli: விமர்சனங்களுக்கு உணர்ச்சிவசப்படக்கூடியவர் கோலி.. மஞ்ச்ரேகர் கருத்தால் பரபரப்பு!
Sanjay Manjrekar on Virat Kohli: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு மிகவும் தேவைப்படும் நேரத்தில், விராட் கோலி அடுத்தடுத்து 2 போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ளார். ஃபார்மில் ஏற்பட்டுள்ள கோலியின் பார்ம் அவுட் குறித்து சஞ்சய் மஞ்சரேகர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) சிறப்பான தொடக்கத்திற்குப் பிறகு, நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியின் ஃபார்ம் சரிந்துள்ளது. கோலியின் ரன்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு மிகப்பெரிய சாதகமாக இருந்தது. ஆனால் கடந்த 2 போட்டிகளில் கோலி டக் அவுட் ஆனது கேள்விகளை எழுப்பியுள்ளது. கோலி திடீரென ஒரு கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளார். பெங்களூரு அணிக்கு மிகவும் தேவைப்படும் நேரத்தில், கோலி அடுத்தடுத்து 2 போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ளார். ஃபார்மில் ஏற்பட்டுள்ள கோலியின் பார்ம் அவுட் குறித்து சஞ்சய் மஞ்சரேகர் வெளிப்படையாக பேசியுள்ளார். ஒரு பாட்காஸ்டில், வெளிக்கருத்துக்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்று அடிக்கடி கூறும் விராட் கோலி, உண்மையில் விமர்சனங்களுக்கு மிகவும் “உணர்ச்சிவசப்படக்கூடியவர்” என்று மஞ்ச்ரேகர் விளக்கினார்.
ALSO READ: சுதர்சன் வெளியேற்றம்.. படிக்கலுக்கு வாய்ப்பு.. AFG எதிரான இந்திய உத்தேச அணி!




விராட் கோலி குறித்து பேசிய சஞ்சய் மஞ்சரேகர், ” தன் மீது எழும் விமர்சனங்களுக்கு கோலி மிகவும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர். கோலி பற்றி என்ன பேசப்படுகிறது என்பது அவருக்குத் தெரியும் என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் ஒரு கேப்டனாகவும் வீரராகவும் அவருடன் எனக்கு அனுபவம் உண்டு. திடீரென்று ஒரு நாள், டாஸின் போது அவருடைய நடத்தையை நான் கவனித்தேன், ஒருவேளை அவரைப் பற்றிச் சொல்லப்பட்ட எதையாவது அவர் கேட்டிருக்கலாம் என்று நான் நினைத்தேன். மற்றவர்கள் என்ன சொன்னாலும் எங்களுக்குக் கவலையில்லை’ என்று சொல்லும் வீரர்களில் கோலியும் ஒருவர், ஆனால் அதே சமயம் அவர் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர். ஒருவேளை அது ஒரு நல்ல விஷயமாக இருக்கலாம்; அவர் விமர்சனத்தையோ அல்லது எதிர்மறையான ஒன்றையோ கேட்டால், அது அடுத்த பெரிய சதத்தை அடிக்க அவரைத் தூண்டும்.” என்றார்.
ALSO READ: ஐபிஎல்லில் விதிமீறல்! ஒரே தவறு.. வரிசையாக சிக்கிய 6 கேப்டன்கள்..!
விராட் கோலி கேப்டன்ஷி:
🔴 SHOCKING STATEMENT BY SANJAY MANJREKAR ON VIRAT KOHLI 🤯
Manjrekar said🎙️- Virat Kohli is “very sensitive to criticism” and believes outside opinions have played a role in Kohli changing his batting approach in IPL 2026.🙄 pic.twitter.com/5zTcWUdEw3
— Sam (@Cricsam01) May 12, 2026
தொடர்ந்து பேசிய சஞ்சய் மஞ்சரேகர், ”ஒரு அணி அதன் கேப்டனின் குணத்தையே பின்பற்றும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். விராட் கோலியின் தலைமையில், ஒவ்வொரு வீரரும் அவரைப் பின்பற்ற வேண்டியிருந்தது. ஒரு வீரர் களத்தில் சற்றேனும் மந்தமாகத் தெரிந்தால், அவர் அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார். எனவே, விராட்டின் ஆக்ரோஷத்திற்கு அனைவரும் கவனத்துடன் இருப்பார்கள். ஒரு வீரருக்கு வயதாகி, அவர் அதிக கோப்பைகளை வெல்லும்போது, அவரது ஆட்டம் அமைதியடையும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. இருப்பினும், கோலி இந்த வழக்கத்தை மீறியுள்ளார். இந்த வயதில் அவர் சற்று அமைதியடைவார் என்று நான் நினைத்தேன், ஆனால் கோலி அபாரமான ஆற்றலுடன் கேட்சுகளைப் பிடிப்பதையும், ரன்-அவுட்களைச் செய்வதையும் நான் காண்கிறேன்.” என்று கூறினார்.