AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: அம்பயருடன் வாக்குவாதம்.. நோட்டமிட்ட ஐசிசி.. ராணாவுக்கு அபாராதம்!

ICC Fined Nitish Rana: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இன்னிங்ஸின் 19வது ஓவரின் போது நிதிஷ் ராணா நடுவருடன் வாக்குவாதம் செய்தார். அந்த ஓவரின் 3வது பந்தில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டமிழந்தார். ஸ்டப்ஸை கையுறைகளை மாற்ற அனுமதிக்காததால் ராணாவும் டெல்லி அணியும் கோபமடைந்தனர். ஓவரின் நடுவில் நடுவர் அனுமதி மறுத்ததால், ஸ்டப்ஸ் ஆட்டமிழந்தார்.

IPL 2026: அம்பயருடன் வாக்குவாதம்.. நோட்டமிட்ட ஐசிசி.. ராணாவுக்கு அபாராதம்!
நிதிஷ் ராணா
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 Apr 2026 15:59 PM IST

சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியைத் தொடர்ந்து, நிதிஷ் ராணாவின் போட்டி சம்பளத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. ஐபிஎல் (IPL) நடத்தை விதிகளின் ரேஞ்ச் 1-ஐ மீறியதற்காக அவருக்கு ஒரு டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக நிதிஷ் ராணா பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. மேலும், இம்பாக்ட் வீரர் பட்டியலிலும் இடம் பெறவில்லை. இருப்பினும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டமிழந்த பிறகு, ராணா பவுண்டரி லைனுக்கு வந்து 4வது அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, வைரலான வீடியோவில் ராணா கோபமாக இருந்ததோடு, தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தியதும் தெரிய வந்தது.

ALSO READ: எம்.எஸ்.தோனி எங்கே..? டாஸின்போது எழுந்த கேள்வி.. ருதுராஜ் சூசக பதில்!

தவறை ஒப்புக்கொண்ட நிதிஷ் ராணா:


ஐபிஎல் வெளியிட்ட அறிக்கையில், “ஐபிஎல் வீரர்களுக்கான நடத்தை விதிகளின் ரேஞ்ச் 1-ஐ மீறியதற்காக, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பேட்ஸ்மேன் நிதிஷ் ராணாவுக்கு அவரது போட்டி ஊதியத்தில் 25% அபராதமும், ஒரு தகுதிக்குறைப்புப் புள்ளியும் விதிக்கப்பட்டுள்ளது. போட்டியின் போது உரத்த மற்றும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவது தொடர்பான ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.3-ஐ ராணா மீறியது கண்டறியப்பட்டது. 19-வது ஓவரில், ராணா 4வது நடுவருடன் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது,” என்று கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல் வெளியிட்ட அறிக்கைக்கு பிறகு, நிதிஷ் ராணா தனது தவறை ஒப்புக்கொண்டதாகவும், தனக்கு வழங்கப்பட்ட தண்டனையையும் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ALSO READ: முன்னேற்றம் கண்ட சிஎஸ்கே.. யார் கடைசி இடம்..? ஐபிஎல் 2026 புள்ளிகள் பட்டியல் இதோ!

நிதிஷ் ராணா ஏன் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்..?

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இன்னிங்ஸின் 19வது ஓவரின் போது நிதிஷ் ராணா நடுவருடன் வாக்குவாதம் செய்தார். அந்த ஓவரின் 3வது பந்தில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டமிழந்தார். ஸ்டப்ஸை கையுறைகளை மாற்ற அனுமதிக்காததால் ராணாவும் டெல்லி அணியும் கோபமடைந்தனர். ஓவரின் நடுவில் நடுவர் அனுமதி மறுத்ததால், ஸ்டப்ஸ் ஆட்டமிழந்தார். அந்த நிலையில், டெல்லி அணி வெற்றி பெற 10 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்டன. ஸ்டப்ஸ் ஆட்டமிழந்த பிறகு, நிதிஷ் ராணா கோபமடைந்து நடுவருடன் வாக்குவாதம் செய்யத் தொடங்கினார். தொடர்ந்து, அவுட்டான ஸ்டப்ஸும் கோபமடைந்து  ஆடை மாற்றும் அறைக்குச் செல்லும் வழியில் தனது பேட்டையும் பின்னர் ஹெல்மெட்டையும் பலமாக எறிந்தார்.

Follow Us