India – England 5th Test: கம்பீர் – கில் எடுத்த ரிஸ்க்.. 5வது டெஸ்டில் இந்திய அணிக்கு சவாலுடன் வெற்றி!

India's Oval Test Win: இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்டில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், போட்டியின் கடைசி நாளில், ஓவர் விகிதம் குறைவாக இருந்ததால் 4 புள்ளிகள் இழக்கும் அபாயத்தில் இருந்தது. இந்த துணிச்சலான முடிவு இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்தது.

India - England 5th Test: கம்பீர் - கில் எடுத்த ரிஸ்க்.. 5வது டெஸ்டில் இந்திய அணிக்கு சவாலுடன் வெற்றி!

கௌதம் கம்பீருடன் சுப்மன் கில்

Published: 

10 Aug 2025 12:38 PM

 IST

கென்னிங்டன் ஓவலில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் (India – England 5th Test) இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தது. ஓவல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இந்திய அணி வீரர்கள் அனைத்து ரசிகர்களின் இதயங்களையும் வென்றனர். இருப்பினும், இந்தப் போட்டி குறித்தான ஒரு பெரிய தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் (Gautam Gambhir) மற்றும் கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill) ஆகியோர் போட்டியின் கடைசி நாளில் ஒரு பெரிய ரிஸ்க் எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரிஸ்க் தோல்வியடைந்திருந்தால், இந்திய அணி பெரிய இழப்பை சந்தித்திருக்கும்.

அப்படி என்ன ரிஸ்க்..?

ஓவல் டெஸ்டின் 5வது நாளன்று காலை இந்திய அணி களத்தில் இறங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது, போட்டி நடுவர் அணிக்கு ஒரு செய்தியை அனுப்பினார். அணி திட்டமிட்ட நேரத்தை விட 6 ஓவர்கள் பின்தங்கியிருப்பதாகவும், இந்த ஓவர் விகிதம் சரி செய்யப்படாவிட்டால், இந்திய அணியிடம் 4 புள்ளிகள் கழிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்தவகையில், இந்திய அணி தங்கள் 4 புள்ளிகளைக் காப்பாற்ற வேண்டியிருந்தால், அவர்கள் இங்கிலாந்தை ஆட்டமிழக்கச் செய்ய வேண்டியிருந்தது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கேப்டன் சுப்மன் கில் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் டிரஸ்ஸிங் அறையில் இதைப் பற்றி அறிந்ததும், இதற்காக ஒரு கூட்டத்தை கூட்டினர்.

ALSO READ: ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருடன் கோலி, ரோஹித் ஓய்வா..? பிசிசிஐ முடிவு இதுதான்!

கில் – கம்பீர் எடுத்த முடிவு:


இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்டின் கடைசி நாளில் பிரசித் கிருஷ்ணாவின் ஓவரின் நான்கு பந்துகளுக்குப் பிறகு, ஓவர் விகிதத்தை மேம்படுத்த இரு தரப்பிலிருந்தும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பந்து வீச வேண்டும் என்று கூறி வந்தனர். அப்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர், ஓவர் விகிதத்தைப் பற்றி தான் கவலைப்படவில்லை என்றும், நான்கு புள்ளிகள் கழிக்கப்பட்டால் போகட்டும், ஆனால் அணியின் வெற்றி மிகவும் முக்கியமானது என்றும் தெளிவாகக் கூறியிருந்தார். ஆட்டத்தின் கடைசி நாளில், பிரசித் கிருஷ்ணா ஒரு முனையிலிருந்தும், முகமது சிராஜும் மறுமுனையிலிருந்தும் பந்து வீசுவார்கள் என்று கவுதம் கம்பீர் ஒரு திட்டத்தை வகுத்தார். சுப்மன் கில்லும் இதற்கு ஒப்புக்கொண்டார். இருவரும் சேர்ந்து இந்த பெரிய ரிஸ்க்கை எடுத்தனர், அது வெற்றி பெற்றது.

ALSO READ: ஓவல் பிட்ச் விவகாரம்! மைதான பராமரிப்பாளரிடம் மோதலில் ஈடுபட்ட கம்பீர்.. என்ன நடந்தது?

ஓவல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி:

ஓவலில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், இந்தியா முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 224 ரன்கள் எடுத்தது. அதற்கு பதிலளித்த இங்கிலாந்து 247 ரன்களுக்கு சுருண்டது. இதன் பின்னர், டீம் இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 396 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் வெற்றி பெற இங்கிலாந்து 374 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் இங்கிலாந்து அணியால் 367 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது, இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில், முகமது சிராஜ் இந்தியாவுக்காக அபாரமாக பந்து வீசி மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Follow Us
100 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் அரசுக்கு வழங்கிய கடனை திருப்பி கேட்கும் இந்திய குடும்பம்
பிறந்த குழந்தையை கையில் வாங்கும்போது உணர்ச்சிவசப்பட்ட தந்தை - வைரலாகும் வீடியோ
காமிகாஸ் டிரோன் படகுகளை பயன்படுத்தி எண்ணெய் கப்பல்களை தாக்கும் ஈரான்
பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்ததால் சரச்சை - சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் எக்ஸ் பக்கம் முடக்கம்