AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Suryakumar Yadav: என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் மிஸ் செய்தது இதைதான்.. சூர்யகுமார் யாதவ் வருத்தம்..!

Indian Cricket Team: உலகின் மிகவும் திறமையான டி20 கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக சூர்யகுமார் யாதவ் கருதப்படுகிறார். ஐபிஎல்லை பல முறை வென்றது முதல் கேப்டனாக ஆசிய கோப்பையை வென்றது வரை, சூர்யகுமார் யாதவ் ஒரு கிரிக்கெட் வீரராக தனது வாழ்க்கையில் நிறைய வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

Suryakumar Yadav: என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் மிஸ் செய்தது இதைதான்.. சூர்யகுமார் யாதவ் வருத்தம்..!
சூர்யகுமார் யாதவ் - எம்.எஸ்.தோனிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 06 Oct 2025 17:16 PM IST

2025 ஆசியக் கோப்பையில் (2025 Asia Cup) இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி (Indian Cricket Team) சாம்பியன் பட்டத்தை வென்றது. அதேநேரத்தில், இன்று உலகின் மிகவும் திறமையான டி20 கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) கருதப்படுகிறார். ஐபிஎல்லை பல முறை வென்றது முதல் கேப்டனாக ஆசிய கோப்பையை வென்றது வரை, சூர்யகுமார் யாதவ் ஒரு கிரிக்கெட் வீரராக தனது வாழ்க்கையில் நிறைய வெற்றிகளைப் பெற்றுள்ளார். இருப்பினும், இதையெல்லாம் மீறி, அவரது வாழ்க்கையில் ஒரு வருத்தம் இருக்கிறது. அதுகுறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

மகேந்திர சிங் தோனி தலைமை:


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் (MS Dhoni) தலைமையில் ஒருபோதும் விளையாட முடியாதது தான் தனது வாழ்க்கையின் மிகப்பெரிய வருத்தம் என்று சூர்யகுமார் கூறினார். இதுகுறித்து அவர் பேசுகையில், “தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது, ​​அணியில் ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நான் மிகவும் ஆசைப்பட்டேன். ஆனால் அந்த வாய்ப்பு ஒருபோதும் எனக்கு அமையவில்லை. அவருக்கு எதிராக விளையாடும்போது, ​​ஸ்டம்புக்கு பின்னால் இருந்து அவர் பலமுறை எல்லாவற்றையும் கையாள்வதை நான் பார்த்தேன்.

ALSO READ: கில் கேப்டன்ஷி குறித்து 12 வருடங்களுக்கு முன்பே கணிப்பு.. வைரலாகும் ரோஹித் சர்மா ட்வீட்!

தோனி எப்போதும் எந்த நேரத்திலும் அமைதியாக இருப்பார். அவருக்கு எதிராக விளையாடும்போது, ​​எந்த சூழ்நிலையிலும் அமைதியாக இருப்பதுதான் நான் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள முயற்சித்த ஒரு விஷயம். போட்டியில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறார். எல்லாவற்றையும் கவனித்து பின்னர் முடிவுகளை எடுத்து வெற்றி காண்பார்.”என்று கூறினார்.

விராட் கோலி ஆக்ரோஷமானவர்:

விராட் கோலியை மிகவும் கண்டிப்பான கேப்டன் என சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார். அதில், ”எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, விராட் பாயின் தலைமையில் நான் அறிமுகமானேன். விராட் கோலி மிகவும் கண்டிப்பானவர் என்று நான் நினைக்கிறேன். அவர் எப்போதும் உங்கள் மனதில் எல்லைகளை விரிவுபடுத்த முயற்சிக்குமாறும், உங்களில் சிறந்ததை வெளிக்கொணருமாறும் கேட்டுக்கொள்கிறார். அனைத்து கேப்டன்களும் தங்கள் வீரர்களிடமிருந்து சிறந்ததை விரும்புகிறார்கள், ஆனால் அவர் எப்போதும் ஆற்றல் நிறைந்தவர், அது மைதானத்திலோ அல்லது மைதானத்திற்கு வெளியேயோ உங்களிடம் இருந்து சிறந்ததை பெற முயற்சிப்பார். அவர் மற்றவர்களிடமிருந்து சற்று வித்தியாசமானவர்.” என்று கூறினார்.

ALSO READ: ரோஹித்- கோலிக்கு இறுதி எச்சரிக்கை.. உள்நாட்டு தொடரில் விளையாட கட்டாயப்படுத்தும் பிசிசிஐ?

ரோஹித் சர்மாவின் தலைமையில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்காகவும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் பல ஆண்டுகளாக விளையாடியுள்ளார். சமீபத்தில், முன்னாள் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தலைமை குறித்து சூர்யகுமார் கூறுகையில், ”நான் இந்திய அணிக்காகவும், ஐபிஎல்லிலும் ரோஹித் பாயின் தலைமையில் நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன் . அவர் தன்னைச் சுற்றி அனைவரையும் வசதியாக உணர வைக்கிறார். அவர் அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு உத்வேகம். அவரது கதவு எப்போதும் அனைவருக்கும் திறந்திருக்கும். இது மற்ற கேப்டன்களுடன் சேர்ந்து நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்ட சிறந்த விஷயம்.” என்றார்.

Follow Us