Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IND vs ENG 1st Test: பென் டக்கெட் சதம்! விக்கெட் எடுக்க போராடும் இந்திய பந்துவீச்சாளர்கள்.. இந்தியா வெற்றி பெறுமா?

Ben Duckett Century: லீட்ஸில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து டெஸ்டின் கடைசி நாளில், இங்கிலாந்து பேட்ஸ்மேன் பென் டக்கெட் அற்புதமான சதம் அடித்து இந்திய அணிக்கு பெரும் சவாலாக மாறினார். 371 ரன்கள் இலக்கை துரத்தும் இங்கிலாந்துக்கு வலுவான தொடக்கத்தை அளித்த டக்கெட், இந்திய பந்துவீச்சாளர்களை திணறடித்தார். ஜாக் க்ரௌலியின் அரைசதமும் இங்கிலாந்துக்கு கூடுதல் பலம் சேர்த்தது. இந்தியா வெற்றி பெற 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டியிருக்கிறது.

IND vs ENG 1st Test: பென் டக்கெட் சதம்! விக்கெட் எடுக்க போராடும் இந்திய பந்துவீச்சாளர்கள்.. இந்தியா வெற்றி பெறுமா?
பென் டக்கெட்Image Source: ECB/Twitter
mukesh-kannan
Mukesh Kannan | Published: 24 Jun 2025 19:41 PM

லீட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்டின் (IND vs ENG 1st Test) கடைசி இன்னிங்ஸில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் பென் டக்கெட், இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சிரமத்தையும், இந்திய ரசிகர்களுக்கு சோகத்தையும் கொடுத்து வருகிறார். இந்திய அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்த இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட் (Ben Duckett), இந்த இன்னிங்ஸில் சதம் அடித்து அசத்தியுள்ளார். பென் டக்கெட் தனது அணிக்காக சதம் அடித்தது மட்டுமல்லாமல், 371 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை துரத்த இந்திய அணிக்காக (Indian Cricket Team) வலுவான தொடக்கத்தையும் வழங்கி வருகிறார். பொதுவாக டெஸ்ட் போட்டியின் கடைசி இன்னிங்ஸில் யாரும் சதம் அடிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் பென் டக்கெட் மிக எளிதாக ரன்களை திரட்டி இந்திய அணிக்கு சிரமத்தை கொடுத்து வருகிறார்.

பென் டக்கெட்டின் அற்புதமான சதம்:

லீட்ஸ் டெஸ்டின் 5வது நாளில் இந்திய பந்து வீச்சாளர்கள் எவ்வளவோ முயற்சித்தும் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் தவித்து வருகின்றனர். இங்கிலாந்து அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய பென் டக்கெட் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணியின் ரன் எண்ணிக்கையையும் உயர்த்தி வருகிறார். கடைசி நாளில் 371 ரன்கள் என்ற இலக்கை துரத்துவது எந்த அணிக்கும் எளிதானது அல்ல. குறிப்பாக எதிர் அணியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா போன்ற பந்து வீச்சாளர்கள் இருக்கும்போது. ஆனால் பென் டக்கெட் இவர்களின் பந்துவீச்சில் தாக்கு பிடித்தது மட்டுமல்லாமல், தனது சிறந்த நுட்பத்தாலும் பொறுமையாலும் சதத்தையும் எட்டினார். சதத்தை எட்ட பென் டக்கெட், 14 பவுண்டரிகளுடன் வெறும் 121 பந்துகளை மட்டுமே எடுத்து கொண்டார்.

சதம் அடித்த பென் டக்கெட்:

மற்றொரு தொடக்க வீரரான ஜாக் க்ரௌலியும் அரைசதம் அடித்து பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். செய்தி எழுதும்போது இங்கிலாந்து இப்போது வெற்றி பெற இன்னும் 190 ரன்கள் எடுக்க வேண்டும். அதே நேரத்தில், இந்தியா 10 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். இந்த 2 அணிகளும் இந்த இலக்கை எட்ட முடியவில்லை என்றால், போட்டி டிராவில் முடியும். இந்திய அணி முடிந்தவரை விரைவாக 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினால், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுவிடும்.