Rinku Singh Wedding Postponed: ரிங்கு சிங் – பிரியா சரோஜ் திருமணம் ஒத்திவைப்பு.. காரணம் என்ன..?
Rinku Singh Marriage Delays for T20 Series: இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்பி பிரியா சரோஜ் ஆகியோரின் திருமணம் 2025 நவம்பரில் இருந்து 2026 பிப்ரவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. T20 தொடரில் ரிங்கு சிங் பங்கேற்பதே இதற்குக் காரணம். லக்னோவில் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில் பல கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கும் (Rinku Singh), ஜான்பூர் மச்லிஷஹர் மக்களவை தொகுதியின் சமாஜ்வாதி கட்சி எம்பி பிரியா சரோஜின் (Priya Saroj) திருமண தேதி ஒத்துவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, இவர்களது திருமணம் வருகின்ற 2025ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி வாரணாசியில் உள்ள ஹோட்டம் தாஜில் நடைபெறவிருந்தது. தற்போது, இந்த தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2026ம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் ஹோட்டல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், தேதி இன்னும் முடிவாகவில்லை. 2025 நவம்பரில் நடைபெறவிருக்கும் கிரிக்கெட் போட்டி காரணமாக ரிங்கு சிங் தேதியை தள்ளிவைத்ததாக கூறப்படுகிறது.
நிச்சயதார்த்தம்:
கடந்த 2025 ஜூன் 8ம் தேதி இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கும், சமாஜ்வாதி கட்சி எம்பி பிரியா சரோஜூம் லக்னோவில் உள்ள ஒரு ஹோட்டலில் மோதிரம் மாற்றிக் கொண்டனர். இந்த நிச்சயதார்த்த விழாவில் விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல, அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த நிச்சயதார்த்த விழாவின்போது பிரியா சரோஜ் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார். இதன் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.




வருகின்ற 2025 நவம்பர் மாதம் இந்திய கிரிக்கெட் அணி டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் ரிங்கு சிங் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்திய அணியில் விளையாட வேண்டும் என்ற காரணத்திற்காக ரிங்கு சிங் தனது திருமணத்தை தற்போதைக்கு ஒத்திவைத்துள்ளார்.
திருமணம் ஒத்திவைப்பு:
🟥 Rinku & Priya’s Wedding Postponed: Cricket Called, Ceremony Crashed! 🏏💍
Rinku Singh and MP Priya Saroj have postponed their November 19, 2025 wedding due to Rinku’s packed cricket schedule. Now rescheduled for February 2026, the exact date remains under wraps.
The… pic.twitter.com/bCoRQi6Bjb
— BharatPaksh (@PakshForBharat) June 24, 2025
ஐபிஎல் முடிந்த கையோடு இந்திய அணியின் நட்சத்திரங்கள் சில நாட்களுக்கு முன்பு, இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றனர். ரிங்குவின் அணி வீரர்கள் பலர் இந்தியாவில் இல்லாததால் நிச்சயதார்த்த விழாவிற்கு வர முடியவில்லை. அதேநேரத்தில், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்பிக்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதேநேரத்தில், காங்கிரஸ் எம்.பி.யும் பிசிசிஐ துணைத் தலைவருமான ராஜீவ் சுக்லாவும் வந்து இருவரையும் வாழ்த்தினார்.
யார் யார் பங்கேற்றனர்..?
கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் மற்றும் எம்பி பிரியா சரோஜ் ஆகியோரின் நிச்சயதார்த்தத்தில் சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ், எம்பி டிம்பிள் யாதவ், எம்பி ஜெயா பச்சன் மற்றும் பல கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர். நிச்சயதார்த்ததின்போது ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் ஆகியோர் ஒன்றாக நடனமாடினர். ரிங்கு சின் தனது விரலில் மோதிரத்தை அணிவித்தபோது பிரியா சரோஜ் உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.