Karun Nair: இங்கிலாந்து மண்ணில் இரட்டை சதம்.. கலக்கும் கருண் நாயர்..! கதிகலங்கிய இங்கிலாந்து லயன்ஸ்!
England Lions vs India A: இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் அற்புதமான இரட்டை சதம் (203 ரன்கள்) அடித்து அசத்தியுள்ளார். 281 பந்துகளில் 26 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் அவர் இந்த சாதனையை படைத்தார். சர்ஃபராஸ் கான் (92) மற்றும் துருவ் ஜூரெல் (94) சதம் விட்டுச் சென்றாலும், இந்தியா ஏ அணி வலுவான நிலையில் உள்ளது. கருண் நாயரின் இந்த சாதனை இந்திய அணிக்கான தேர்வுக்கு வாய்ப்புகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து லயன்ஸ் (England Lions) அணிக்கும் இந்தியா ஏ (India A) அணிக்கும் இடையே 4 நாள் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கருண் நாயர் அற்புதமாக விளையாடி இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். 2025 மே 30ம் தேதியான நேற்று முதல் நடைபெறும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 4 நாள் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் சதம் அடித்தார். இரண்டாவது நாள் ஆட்டமானது இன்று அதாவது 2025 மே 31ம் தேதியில் இரட்டை சதம் அடித்தார். சிவப்பு பந்து வடிவத்தில் கருண் நாயர் (Karun Nair) கடந்த சில வருடங்களாக சிறந்த ஃபார்மில் உள்ளது. ஐபிஎல் 2025லிலும் கருண் நாயர் பல அற்புதமான இன்னிங்ஸ் விளையாடி இந்திய அணிக்குள் கதவை தட்டினார். இப்போது, இங்கிலாந்து மண்ணிலும் கருண் நாயர் இரட்டை சதம் அடித்து மிரட்டியுள்ளார்.
இரட்டை சதம்:
From 303 to 200 — same opponent, same class! Karun Nair’s bat speaks again.
The comeback is real. 🔥🇮🇳
📷: BCCI#KarunNair #IndiaA #INDAVENGA #BCCI #TestCricket pic.twitter.com/pAKtg2IHU2
— SportsTiger (@The_SportsTiger) May 31, 2025




இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் 2வது நாளில் இரட்டை சதம் அடித்த பிறகு, கருண் நாயர் அவுட்டானார். இந்த போட்டியில் 281 பந்துகளில் 26 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உதவியுடன் 203 ரன்கள் எடுத்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட்டும் 128.57 ஆகும். இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, இரட்டை சதம் கருண் நாயருக்கும், இந்திய அணிக்கும் பலமாக அமையும். சுப்மன் கில் தலைமையிலான 18 பேர் கொண்ட அணியில் கருண் நாயர் இடம் பிடித்துள்ளார். இதனால், கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு கருண் நாயர் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கருண் நாயர், ஒரு இன்னிங்ஸில் முச்சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சதத்தை தவறவிட்ட சர்பராஸ் கான், துருவ் ஜூரெல்:
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கருண் நாயரை தவிர, சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜூரெல் ஆகியோரும் அற்புதமாக பேட்டிங் செய்தனர். சர்ஃபராஸ் கான் 119 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 92 ரன்களும், துருவ் ஜூரெல் 11 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 94 ரன்கள் எடுத்திருந்தனர். இந்த 2 வீரர்களும் சதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சதத்தை தவறவிட்டனர். தற்போது, இந்திய ஏ அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 533 ரன்கள் என்ற வலுவான நிலையில் உள்ளது.