Asia Cup 2025: முடிவுக்கு வரும் 2025 ஆசியக் கோப்பை சஸ்பென்ஸ்.. அட்டவணை எப்போது வெளியிடப்படும்..?
India vs Pakistan Clash 2025: 2025 ஆசிய கோப்பை 2025 செப்டம்பர் 10 அன்று இந்தியாவில் தொடங்கலாம் என கிரிக்பஸ் தெரிவித்துள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. பாகிஸ்தான் பங்கேற்பது சந்தேகத்திற்குரியது. பாதுகாப்பு காரணங்களால், ஹைப்ரிட் மாதிரியில் போட்டி நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்யலாம். 2025 ஜூலை முதல் வாரத்தில் அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2025 ஆசிய கோப்பை (Asia Cup 2025) தொடர்பான நீண்டகால சர்ச்சை இப்போது மெதுவாக தணிந்து வருகிறது. கிரிக்பஸ் அறிக்கையின்படி, இந்தியாவில் நடைபெறும் 2025 ஆசியக் கோப்பை வருகின்ற 2025 செப்டம்பர் 10ம் தேதி முதல் தொடங்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (Asian Cricket Council) இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. ஆனால், அடுத்த வாரம் இதுகுறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இறுதி முடிவை எடுக்கும் என்று நம்பப்படுகிறது. இந்தியாவில் நடைபெறும் இந்த ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் விளையாடுமா என்பதுதான் பெரிய கேள்வியாக உள்ளது.
ஆசிய கோப்பை எப்போது நடைபெறுகிறது..?
ஐசிசி ஒப்புதல் அளித்தால் 2025 ஆசியக் கோப்பை வருகின்ற 2025 செப்டம்பர் 2வது வாரத்தில் (அதாவது செப்டம்பர் 10) தொடங்கலாம். இந்த போட்டியில் டி20 வடிவத்தில் நடைபெறுகிறது. கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை ஒருநாள் வடிவத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடந்தது குறிப்பிடத்தக்கது. 2025 ஆசியக் கோப்பையில் போட்டியை நடத்தும் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என மொத்தம் 6 அணிகள் பங்கேற்கிறது. இந்த போட்டியை அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளரான சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் இதற்கான விளம்பரத்தை வெளியிட்டது.




அட்டவணை எப்போது வெளியிடப்படும்..?
🚨 ASIA CUP 2025 UPDATE. 🚨
– Asia Cup 2025 likely to start from 10th September with both India and Pakistan taking part. (Cricbuzz). pic.twitter.com/EARuncL092
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 28, 2025
வருகின்ற 2025 ஜூலை முதல் வாரத்தில் போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை இந்தியா போட்டியை நடத்தும் நாடாக அறிவிக்கப்பட்டாலும், போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி மட்டும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அரசியல் உறவு கடந்த சில மாதங்களாக மோசமாக உள்ளது. கடந்த 2025 ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, 2025 மே 6-7 தேதிகளில் இந்திய இராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆபரேஷன் சிந்தூரை மேற்கொண்டது. இதில், 100க்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், ஆசிய கோப்பைக்காக பாகிஸ்தான் இந்தியா வருவதற்கான வாய்ப்பு முடிந்துவிட்டது. வருகின்ற 2025 ஜூலை முதல் வாரத்தில் ஹைப்ரிட் மாடலில் போட்டியை நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்யலாம்.
இதுவரை அதிக முறை ஆசியக் கோப்பையை வென்ற அணி எது..?
கடந்த 1984ம் ஆண்டு முதல் ஆசியக் கோப்பை விளையாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த போட்டி இதுவரை 16 முறை நடத்தப்பட்டுள்ளது. இதில், இந்திய அணி அதிகபட்சமாக 8 முறையும், இலங்கை 6 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வென்றுள்ளன.