ENG vs PAK: அடுத்தடுத்து 2 தோல்வி.. பாகிஸ்தான் அணியில் பயிற்சியாளர்களும் மாற்றம்!
Pakistan Cricket Team: லீட்ஸ் டெஸ்டுக்குப் பிறகு, லார்ட்ஸ் மைதானத்திலும் பாகிஸ்தான் படுதோல்வியைச் சந்தித்தது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) கடுமையான நடவடிக்கை எடுத்து, அணியிலிருந்து மூன்று வீரர்களையும் இரண்டு பயிற்சியாளர்களையும் விடுவித்தது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு (Pakistan Cricket Team) இங்கிலாந்து சுற்றுப்பயணம் ஒரு கடினமான ஒன்றாக அமைந்துள்ளது. மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே 0-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு படுதோல்விகளைச் சந்தித்த பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்த டெஸ்ட் போட்டிக்கு (Test Match) முன்னதாக, அணியின் 3 வீரர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 2 பயிற்சியாளர்களும் தங்கள் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். தற்போது, பர்மிங்காம் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, புதிய முகங்கள் மற்றும் புதிய பயிற்சி ஊழியர்களுடன் பாகிஸ்தான் அணி மீண்டும் எழுச்சி பெற முயற்சிக்கும்.
இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியின் 4 இன்னிங்ஸ்களிலும் பாகிஸ்தான் அணி 200 ரன்களைக் கடக்கத் தவறிவிட்டது. முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியை 194 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.




ALSO READ: விறுவிறுப்பான இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. குல்தீப் மீது கோபம் ஏன்..? சூர்யகுமார் யாதவ் விளக்கம்!
பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றம்:
🚨 OFFICIAL – PAKISTAN SQUAD FOR THE THIRD TEST AGAINST ENGLAND 🚨
Babar (c), Abdullah Fazal, Arafat Minhas, Azan, Abbas, Mohammad Ali, Muhammad Imran Randhawa, Mohammad Imran Jnr, Ghazi Ghori, Razaullah, Saad Baig, Saim Ayub, Sajid Khan, Saud Shakeel, Shan Masood, and Ubaid… pic.twitter.com/tIaEKjAASi
— Sheri. (@CallMeSheri1_) August 31, 2026
அதன்படி, லீட்ஸ் டெஸ்டுக்குப் பிறகு, லார்ட்ஸ் மைதானத்திலும் பாகிஸ்தான் படுதோல்வியைச் சந்தித்தது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) கடுமையான நடவடிக்கை எடுத்து, அணியிலிருந்து மூன்று வீரர்களையும் இரண்டு பயிற்சியாளர்களையும் விடுவித்தது. சல்மான் அலி ஆகா பாகிஸ்தான் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால், வரவிருக்கும் டெஸ்ட் போட்டிக்காக அவர் பர்மிங்காமிற்குப் பயணிக்க மாட்டார். இமாம்-உல்-ஹக் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கிடைத்த தகவல்களின்படி, இந்த மூன்று வீரர்களுக்குப் பதிலாக சாம் அயூப், அராஃபத் மின்ஹாஸ் மற்றும் அப்துல்லா ஃபசல் ஆகியோர் இங்கிலாந்து செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சர்பராஸ் அகமது மற்றும் உமர் குல் ஆகியோரும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதே முக்கிய செய்தியாகும். அவர்களுக்குப் பதிலாக மைக் ஹெசன் டெஸ்ட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்குப் பயிற்சியளித்துள்ளார். ஆஷ்லி நாஃப்கே பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ALSO READ: 5 ஆண்டுகளுக்குப் பிறகு! 35 வயதான வீரருக்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பா?
பாகிஸ்தானின் அடுத்த டெஸ்ட் போட்டியானது வருகின்ற 2026 செப்டம்பர் 9 ஆம் தேதி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும். முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 194 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதுவே, பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இத்தனை மாற்றங்கள் செய்ய காரணமாக அமைந்தது.