Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உங்கள் குழந்தைகள் கல்வி, செல்வத்தில் செழிக்க.. இங்கு சென்று வழிபடுங்க!

சிறந்த கல்வியை பெற குருபகவானை வழிபட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேசமயம், குழந்தைகள் வாழ்வில் கல்வியுடன், செல்வமும் சிறக்க பல்வேறு தடைகளை வென்று அவர்கள் முன்னேற நிச்சயம் ஒருமுறையாவது புதுக்கோட்டையில் உள்ள இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள், கண்டிப்பாக பலன் கிடைக்கும் என்கின்றனர்.

உங்கள் குழந்தைகள் கல்வி, செல்வத்தில் செழிக்க.. இங்கு சென்று வழிபடுங்க!
மாதிப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 02 Nov 2025 21:08 PM IST

இன்றைய நவீன உலகில் குழந்தைகளுக்கு கவனச் சிதறல்கள் அதிகம் ஏற்படுகின்றன. ஆதலால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. அவ்வாறு கல்வியில் கோட்டை விடும் மாணவர்களின் எதிர்காலம் என்பது பெரும் கேள்விக்கு உள்ளாகிறது. நாளைய எதிர்காலத்தை தீர்மானிப்பது குழந்தைகளின் இன்றையே கல்வியே, சரியாக படிக்கும் பலர் வாழ்க்கையில் எட்ட முடியாத உயரத்திற்கு செல்வது நிச்சயம். இதனால், குழந்தைகளின் எதிர்காலம் குறித்து இன்றையே பெற்றோர்கள் தொடக்கக் கல்வியில் இருந்து பெரும் பயம் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆன்மீக ரீதியாக பல்வேறு வழிகளில் நாம் பலன் பெறலாம். அதன் மூலம், படிப்பின் மீது குழந்தைகளுக்கு ஆர்வத்தை உண்டாக்க முடியும் என்கின்றனர் ஆன்மீகவாதிகள்.

கல்விக்கு உறுதுணையான ஆத்மநாதர் கோயில்:

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆவுடையார் கோயில் அல்லது ஆத்மநாத சுவாமி கோயில் தமிழின் ஆன்மீக, தத்துவ மரபில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. இக்கோயிலின் பிரதான தெய்வம் ஆத்மநாதர், தாயார் யோகாம்பாள் ஆவார். “ஆத்மநாதர்” என்ற பெயர் தத்துவ ரீதியாக மிக ஆழமான அர்த்தம் கொண்டது – ஆத்மாவின் நாதன், அதாவது உள்ளுணர்வின் கடவுள். இதனால் இக்கோயிலில் வழிபடப்படும் இறைவன், உருவமற்ற “அறிவு” அல்லது “ஞானம்” எனப் பொருள் பெறுகிறார்.

Also read: குரு மற்றும் சுக்கிரனின் பொருத்தம்.. திருமணம் கைகூடும் ராசிகள்!

இக்கோயிலின் சிறப்பான அம்சம் என்னவெனில், வழக்கமான சிவாலயங்களில் உள்ளபோல் லிங்க வடிவம் இங்கு இல்லை. அதற்கு பதிலாக “அவுடை” எனப்படும் லிங்கத்தின் பாதம் மட்டுமே வழிபாட்டிற்கு உள்ளது. இதுவே “ஆவுடையார் கோயில்” என்ற பெயருக்குக் காரணம். இது இறைவன் வடிவமற்ற ஞானம் என்பதைக் குறிக்கிறது. அதனால் இக்கோயில் ஆன்மீக கல்வியின் ஆலயம் எனப் போற்றப்படுகிறது.

நினைவாற்றலை மேம்படுத்தும் மந்திரம்:

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெறவும், ஞானம் பெறவும் ஆத்மநாதரிடம் வழிபடுவது வழக்கமாக உள்ளது. “ஓம் ஆத்மநாதாய நமஹ” என்ற மந்திரம் கல்வி மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இக்கோயிலின் கட்டிடக்கலை அதிசயமானது. 1000 தூண்கள் கொண்ட மண்டபம், செம்மையான சிற்பங்கள், நுணுக்கமான கல் வேலைப்பாடுகள் அனைத்தும் சைவத் தத்துவத்தின் ஆழத்தையும் கலைநயத்தையும் வெளிப்படுத்துகின்றன. நந்தி மற்றும் கோபுரம் இல்லாதது தத்துவ ரீதியான அர்த்தத்துடன் அமைந்துள்ளது — அதாவது, இறைவன் வெளிப்படையான வடிவில் அல்ல, உள்ளுணர்வில் நிலை கொண்டவன் என்பதைக் காட்டுகிறது.

மாணிக்கவாசகர் இக்கோயிலில் இறையறிவு பெற்றதாகவும், அவர் அருளிய திருவாசகம் இங்குத் தோன்றியதாகவும் கூறப்படுகிறது. அந்தப் பாடல்கள் கல்வி, தத்துவம், ஞானம் ஆகியவற்றின் அடிப்படை மதிப்புகளை எடுத்துரைக்கின்றன. எனவே, புதுக்கோட்டை ஆத்மநாதர் கோயில், கல்வி, ஞானம் மற்றும் ஆன்மீக விழிப்புணர்வை வளர்க்கும் சிறப்பிடம் மட்டுமல்லாது, தமிழின் பண்பாடு, தத்துவம், கலை ஆகியவற்றையும் இணைக்கும் ஒரு ஆன்மீகப் பல்கலைக்கழகம் போன்ற புனிதத் தலமாக திகழ்கிறது.

Also Read: கண் திருஷ்டியால் அவதியா?  ; செவ்வாய்கிழமை செய்ய வேண்டிய அனுமன் வழிபாடு

ஆத்மநாதர் கோயில், கல்வியில் சிறந்தது மட்டுமல்லாது, ஆன்மீக ஞானத்தை உணர்த்தும் தளமாகவும் விளங்குகிறது. “கல்வி என்பது வெளிப்படையான அறிவு; ஞானம் என்பது உள்ளுணர்வு” என்பதை இக்கோயில் நமக்கு நினைவூட்டுகிறது.

(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரை தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)