AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருச்செந்தூர் போறீங்களா? முதல்ல உங்க செல்போனை ‘இங்க’ வச்சிட்டு போங்க!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாதுகாப்பு மற்றும் புனிதத்தைக் காக்கும் பொருட்டு, பக்தர்கள் உள்ளே செல்போன் கொண்டு செல்வதற்கான தடை உத்தரவு தற்போது மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பொது தரிசனம், கட்டண தரிசனம் மற்றும் முதியோர் வரிசை என அனைத்து நுழைவு வாயில்களிலும் பாதுகாப்புப் பணியாளர்கள் மூலம் தீவிர உடல் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

திருச்செந்தூர் போறீங்களா? முதல்ல உங்க செல்போனை ‘இங்க’ வச்சிட்டு போங்க!
திருச்செந்தூர் கோயில்
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 01 Jul 2026 17:06 PM IST

புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குள் பக்தர்கள் கைபேசிகளை (செல்போன்) எடுத்துச் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்பொழுது மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவிலின் புனிதம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கடந்த 2022ஆம் ஆண்டு முதல் இந்தத் தடை உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. எனினும், தற்போது இந்த விதியை மிகவும் கண்டிப்புடன் பின்பற்ற கோவில் நிர்வாகம் புதிய அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி, பக்தர்கள் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், விதியை மீறி செல்போன் கொண்டு சென்றால் அவை உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரிசன வழிகளிலும் முழுப் பரிசோதனை

திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள பொது தரிசன வரிசை, நூறு ரூபாய் கட்டண விரைவு தரிசன வழி, முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேகப் பாதைகள் என அனைத்து நுழைவு வாயில்களிலும் பாதுகாப்புப் பணியாளர்கள் மூலம் முழுமையான கண்காணிப்பு மற்றும் உடல் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. எனவே, பக்தர்கள் தங்களின் அவசியத் தேவைகளுக்கான செல்போன்களை தாங்கள் தங்கியிருக்கும் விடுதிகளிலோ அல்லது தங்களது சொந்த வாகனங்களிலோ பாதுகாப்பாக வைத்துவிட்டு கோவிலுக்கு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதன் மூலம் தரிசன வரிசையில் ஏற்படும் தேவையற்ற தாமதங்களைத் தவிர்க்க முடியும்.

கோவில் நிர்வாகத்தின் சிறப்பு ஏற்பாடுகள்

தங்களின் இருப்பிடங்களிலோ அல்லது வாகனங்களிலோ கைபேசிகளை வைக்க இயலாத பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஆங்காங்கே ‘கைபேசி பாதுகாப்பு வைப்பகங்கள்’ பிரத்யேகமாக நிறுவப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்களுடைய செல்போன்களை இந்த வைப்பகங்களில் ஒப்படைத்துவிட்டு, அதற்கான ரசீதைப் பெற்றுக்கொண்டு நிம்மதியாக சாமி தரிசனம் செய்யச் செல்லலாம். இந்த தற்காலிக வைப்பகங்கள் மூலம் பக்தர்களின் உடைமைகளுக்கு முழுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

Also Read: 4 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்… மீனவர்கள் கடலுக்குப் போக வேண்டாம்!

பக்தர்களுக்கான கூடுதல் மருத்துவ மற்றும் உதவி வசதிகள்

செல்போன் தடை மட்டுமின்றி, திருச்செந்தூர் வரும் பொதுமக்களின் அவசரத் தேவைகளுக்காகவும் வசதிக்காகவும் பல்வேறு கூடுதல் ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் செய்துள்ளது. அவசரச் சிகிச்சைக்கான மருத்துவ மையம், இருபத்து நான்கு மணி நேர ஆம்புலன்ஸ் சேவை, பக்தர்களுக்குத் தகவல்களைத் தெரிவிப்பதற்கான பொது அறிவிப்பு ஒலிபெருக்கிகள் போன்றவை செயல்பாட்டில் உள்ளன. மேலும், நடக்க இயலாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக மின்கல ஊர்திகள் மற்றும் சக்கர நாற்காலிகள் போன்ற அத்தியாவசிய சேவைகளும் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன.

Follow Us