AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kerala: அறிவியல் ஆய்வுகளுக்கு சவால் விடும் சிவன் கோயில்.. எங்கே இருக்கு தெரியுமா?

Kerala Temple Special: நீர்ப்புதூர் கோயில், அதன் சுயம்புவாக உருவான சிவலிங்கம் மற்றும் அதிசய நீர் ஆகியவற்றால் பிரபலமானது. அறிவியலால் கூட விளக்க முடியாத இந்த கோயில், அதன் கட்டடக்கலை மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் ஆகியவற்றால் ஆராய்ச்சியாளர்களை ஈர்க்கிறது. ஆண்டு முழுவதும் சிவலிங்கத்தைச் சுற்றி இருக்கும் நீர், நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டதாக நம்பப்படுகிறது.

Kerala: அறிவியல் ஆய்வுகளுக்கு சவால் விடும் சிவன் கோயில்.. எங்கே இருக்கு தெரியுமா?
நீர்புதூர் கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 09 Apr 2025 16:11 PM IST

இந்தியா ஒரு ஆன்மிக பூமி (Spiritual Land) என்பது உலக நாடுகள் அறிந்த உண்மையாகும். இங்கு எங்கு திரும்பினாலும் ஏதேனும் ஒரு மதத்தின் வழிபாட்டு தலங்கள் இருப்பதைக் காணலாம். கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், புத்த மடங்கள் என ஒவ்வொன்றும் பின்னணியிலும் ஒரு மிகப்பெரிய வரலாறு என்பது உள்ளது. சில வழிபாட்டு தலங்கள் எல்லாம் நம்மை மிக பிரமிப்பில் ஆழ்த்தும் வகையில் கட்டடக்கலை, சிலை வரலாறு, அங்கு காணப்படும் வரலாற்று பின்னணி கொண்ட இடங்கள் ஆகியவை அமையும். அப்படியாக சுமார் 3000 ஆண்டுகள் பழமையான ஒரு கோயில் மர்மங்கள் (Mysterious Temple) நிறைந்து காணப்படுகிறது. அந்த கோயில் இன்றளவும் அறிவியல்aகொள்கைகளையும், கோட்பாடுகளையும் முறியடிக்கும் வகையில் அமைந்துள்ளது. அப்படியான ஒரு கோயிலைப் பற்றி நாம் காணலாம்.

பொதுவாகவே இந்திய நாகரிகம் உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தப் பண்டைய கலாச்சாரத்தின் மிகப்பெரிய சான்று இங்குள்ள வழிபாட்டு தலங்களாகும். அவை இன்றும் கூட உலக மக்களால் மிகவும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. அப்படியான ஒரு கோயில் தான் கேரளாவில் உள்ள நீர்புதூர் (Neerputhoor Shiva Temple) கோயிலாகும்.  இந்தக் கோயிலும் அதன் கருவறையானது இன்னும் ஆராய்ச்சியாளர்களுக்கு தீர்க்கப்படாத புதிராகவே உள்ளது.

புரியாத புதிரான சிவலிங்கம்

இந்தக் கோயிலின்  மர்மமான அம்சமாக திகழ்வது  அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் சிவலிங்கம் தான். இது எந்த மனித முயற்சியாலும் அல்லாமல் தானாகவே தோன்றியதாக நம்பப்படுகிறது. அறிவியலால் அதன் தோற்றத்தையும் வடிவத்தையும் பகுப்பாய்வு செய்து பார்க்கும்போது, ​​இந்த சிவலிங்கத்தின் இருப்பு உண்மையில் ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்படுத்துகிறது. உள்ளூர் மக்களின் நம்பிக்கையின்படி, இந்த சிவலிங்கத்திற்கு தெளிவான கட்டுமான காலமோ அல்லது கட்டுமான செயல்முறையோ கிடையாது என  சொல்லப்படுகிறது.

இதனையடுத்து கோயிலில் அமைந்துள்ள நீர் வளமும் ஒரு பிரமிப்பை தான் உண்டாக்குகிறது. அதாவது இங்கு ஆண்டு முழுவதும் சிவலிங்கத்தைச் சுற்றி தண்ணீர் நிரம்பியிருக்கும். வறண்ட காலமாக இருந்தாலும் சரி, மழைக்காலமாக இருந்தாலும் சரி  லிங்கத்தைச் சுற்றி எப்போதும் இருக்கும் நீர் இருப்பு அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்பதற்கு உறுதியான அறிவியல் சான்றுகள் எதுவும் கிடையாது.

நோய்களைக் குணப்படுத்தும் சக்தி

இந்த நீர் ‘அதிசயம்’ என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. காரணம் இதற்கு நோய்களைக் குணப்படுத்தும் சக்தி உள்ளதாக நம்பப்படுகிறதுஇதில் சில கனிமங்கள் தன்மை இருக்கலாம்.அவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் அப்பகுதி மக்கள் இதனை ‘மருத்துவ நீர்’ என்று அழைக்கிறார்கள்.  இந்த நீரின் அளவு அறிவியலின் வரம்புகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மூன்றாவதாக இந்தக் கோயிலின் கட்டிடக்கலையும் ஒரு திகில் நிறைந்ததாகவே உள்ளது. இதன் அமைப்பு வாஸ்து சாஸ்திரம் மற்றும் வானியல் விதிகளை அடிப்படையாகக் கொண்டது. இன்றைக்கு சந்தையில் இருக்கும் நவீன உபகரணங்களால் கூட இதை முழுமையாக அளவிட முடியாது. கருவறையின் நிலை, அதன் வெப்பநிலை மற்றும் அதில் நிலவும் யூகிக்க முடியாத ஆற்றல் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் தோல்வியில் தான் முடிந்தது.

எந்த உறுதியான முடிவும் எட்டப்படவில்லை. உள்ளூர் மக்கள் கருத்துப்படி, பல ஆராய்ச்சியாளர்கள் கருவறைக்குள் சென்று பார்த்தபோது, ​​அவர்கள் அசாதாரண ஆற்றலை அனுபவித்தனர் என்றும், ஆனால் இது இன்றுவரை தொழில்நுட்ப ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறுகின்றனர்.

புராணங்களுடன் தொடர்புடைய கோயிலின் கதைகள்

வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, இந்த கோயில் ஆன்மீகக் கண்ணோட்டத்தில் மட்டுமல்ல, கலாச்சாரக் கண்ணோட்டத்திலும் மிகவும் முக்கியமானது. இதன் கதைகள் வேதங்கள் மற்றும் புராணங்களுடன் தொடர்புடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் மக்கள் இந்த கோயில் மீது மிகப்பெரிய மரியாதை கொண்டுள்ளனர். இங்கு வசிப்பவர்கள் இதை வெறும் கோயிலாக மட்டுமல்ல, அற்புதங்களின் இடம்  என்றும் அழைக்கின்றனர்.

நீர்புதூர் கோயிலானது  அறிவியல் பூர்வமாக எல்லாவற்றையும் பகுப்பாய்வு செய்வது பார்ப்பது சாத்தியமில்லை என்பதைக் காட்டுகிறது. நம்பிக்கை, அனுபவம் மற்றும் கலாச்சாரம் மூலம் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய சில உள்ளன. அந்த வகையில் இந்தக் கோயில் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு சவாலாக திகழ்கிறது.

Follow Us