Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சித்திரை திருவிழா: பச்சை பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளி கள்ளழகர் தரிசனம்

Kallazhagar Vaigai River Entry:மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் தரிசனம் கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தங்கக் குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டு அணிந்த கள்ளழகர், ஆண்டாள் மாலை அணிந்து அருள்பாலித்தார்.

சித்திரை திருவிழா: பச்சை பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளி கள்ளழகர் தரிசனம்
பச்சை பட்டுடுத்தி வைகையில் கள்ளழகர் தரிசனம்Image Source: x
sivasankari-bose
Sivasankari Bose | Updated On: 12 May 2025 08:01 AM

மதுரை மே 12: மதுரை சித்திரைத் திருவிழாவின் (Madurai Chithirai Festival) முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் தரிசனம் (Kallazhagar descending into the Vaigai River) இன்று அதிகாலை 6 மணியளவில் நடைபெற்றது. தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டது. மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 15 லட்சம் பக்தர்கள் தரிசனத்துக்கு வந்தனர். பக்தர்கள் தண்ணீர் பீச்சி அடித்து, சர்க்கரை சூடம் ஏற்றி, நேர்த்திக்கடன்கள் செலுத்தி பக்திபூர்வமாக விழாவில் பங்கேற்றனர். பாதுகாப்பு பணிக்காக 5000 போலீசார் மற்றும் 400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த நிகழ்வு பக்தர்களுக்கு பாக்கிய தரிசனமாகவும், மதுரையின் அடையாளமாகவும் திகழ்கிறது.

மதுரையில் சித்திரைத் திருவிழா

மதுரை, ‘கோவில் மாநகர்’ என போற்றப்படும் இந்த புனிதநகரில் ஒவ்வொரு மாதமும் ஏதாவது திருவிழா கொண்டாடப்பட்டாலும், சித்திரைத் திருவிழா அதில் முக்கியத்துவம் வாய்ந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும், அழகர்மலை அழகர்கோயிலும் இணைந்து நடைபெறும் இந்த விழா, சைவ வைணவ சமய ஒற்றுமையின் அழகிய வெளிப்பாடாகும்.

இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா கடந்த 2025 ஏப்ரல் 29-ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அழகர்கோயிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டு திருவிழா 2025 ஏப்ரல் 27-ஆம் தேதி ஆரம்பமானது.

திருக்கல்யாணம் முதல் தேரோட்டம் வரை விழா நிகழ்வுகள்

முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 2025 மே 8-ஆம் தேதி விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து தேரோட்டம் மற்றும் தீர்த்தவாரி நடைபெற்று, சித்திரை விழாவின் கோயில் நிகழ்வுகள் மே 10-ஆம் தேதியுடன் நிறைவடைந்தன.

கள்ளழகர் பயணம் மற்றும் எதிர்சேவை

அழகர்மலையில் இருந்து கள்ளழகர் வேடத்தில் சுந்தரராஜ பெருமாள் தங்கப்பல்லக்கில் 2025 மே 10-ஆம் தேதி மாலை 6.10 மணிக்கு மதுரைக்குத் துவங்கி, பல்வேறு கிராமங்கள் வழியாக 2025 மே 11-ஆம் காலை தல்லாகுளம் மூன்றுமாவடிக்கு வந்தார். அங்கு பக்தர்கள் தண்ணீர் பீச்சியடித்து, பாடல்கள் பாடி எதிர்சேவையில் ஈடுபட்டனர்.

தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் சிறப்பு நிகழ்வுகள்

2025 மே 11-ஆம் இரவு 10 மணிக்கு தல்லாகுளம் கோயிலில் கள்ளழகர் எழுந்தருளினார். பின்னர், தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

வாராரு வாராரு அழகர் வாராரு

வைகை ஆற்றில் இறங்கும் புனித தரிசனம்

சித்திரைத் திருவிழாவின் உச்ச நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் தருணம், இன்று (2025 மே 12) அதிகாலை 5.45 மணிக்கு நடைபெற்றது. தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி, அருள் பாலித்தார். வீரராகவப் பெருமாள் முன்கூட்டியே வரவேற்றார்.

லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 15 லட்சம் பக்தர்கள் மதுரை மாநகருக்கு நேரில் வந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் ஆடிப்பாடி, தீர்த்தவாரி நிகழ்வுகளை நடத்தினர். கருப்புசாமி வேடமிட்டு தண்ணீர் பீச்சியடித்தும், சர்க்கரை சூடம் ஏற்றியும் நேர்த்திக்கடன்கள் செலுத்தினர்.

முன்னுரிமை பாதுகாப்பு ஏற்பாடுகள்

விழா பாதுகாப்பிற்காக 5000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். 50 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டதுடன், 400க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் டிரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பு நடைமுறையில் உள்ளது. போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டது.

மற்ற நிகழ்வுகள் தொடரும்

2025 மே 12 இன்று மதியம் ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி, இரவு வீரராகவப் பெருமாள் கோயிலில் எழுந்தருளல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு தேனூர் மண்டபம், பிற்பகல் கருட வாகனத்தில் மதிய நேர சாபவிமோசனம், பின்னர் மண்டபங்களில் அலங்கார சேவைகள் நடைபெறவுள்ளன.

2025 மே 15-ஆம் தேதி காலை 7 மணிக்கு கருப்பணசாமி கோயிலில் பிரியாவிடை பெற்றும், பின்னர் அழகர்மலைக்கு புறப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது.

 

டிடி நெக்ஸ்ட் லெவல் பாடல் - சந்தானத்தின் மீது பாஜகவினர் புகார்
டிடி நெக்ஸ்ட் லெவல் பாடல் - சந்தானத்தின் மீது பாஜகவினர் புகார்...
தொடர்ந்து நம்பர் ஒன்! டெஸ்ட் கேப்டனாக கோலி படைத்த சாதனைகள்!
தொடர்ந்து நம்பர் ஒன்! டெஸ்ட் கேப்டனாக கோலி படைத்த சாதனைகள்!...
கண் புற்றுநோயின் எச்சரிக்கை: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
கண் புற்றுநோயின் எச்சரிக்கை: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!...
விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவு!
விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவு!...
தமிழகத்தில் தொடரும் வெயிலும் மழையும்...கனமழை எப்போது?
தமிழகத்தில் தொடரும் வெயிலும் மழையும்...கனமழை எப்போது?...
டூரிஸ் ஃபேமிலி படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்...
டூரிஸ் ஃபேமிலி படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்......
உலர் பழங்கள்... நன்மைகள் மற்றும் அவற்றை எப்போது உண்ணலாம்?
உலர் பழங்கள்... நன்மைகள் மற்றும் அவற்றை எப்போது உண்ணலாம்?...
10 செயற்கைக்கோள்கள் மூலம் இந்தியாவை கண்காணிக்கிறோம் - இஸ்ரோ!
10 செயற்கைக்கோள்கள் மூலம் இந்தியாவை கண்காணிக்கிறோம் - இஸ்ரோ!...
பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவத்திற்கு பிரதமர் மோடி உத்தரவு..!
பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவத்திற்கு பிரதமர் மோடி உத்தரவு..!...
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் விராட் கோலி..!
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் விராட் கோலி..!...
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ் தேதிய லாக் செய்த படக்குழு!
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ் தேதிய லாக் செய்த படக்குழு!...