AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எப்போது விநாயகரை வழிபட்டாலும் இடம் பெற வேண்டிய பிரசாதங்கள்!

விநாயகருக்கு ஐந்து வகையான பிரசாதங்களை வைத்து வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். இந்தப் பிரசாதங்கள் ஒவ்வொன்றும் செல்வம், அமைதி, ஆரோக்கியம் போன்ற நற்பலன்களை அளிக்கும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. விநாயகர் பகவான் புத்திசாலித்தனம், அறிவு ஆகியவற்றை அருளுகிறார். வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் தடைகளை விலக்குகிறார்.

எப்போது விநாயகரை வழிபட்டாலும் இடம் பெற வேண்டிய பிரசாதங்கள்!
விநாயகருக்கான நைவேத்தியங்கள்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 27 Aug 2025 10:14 AM IST

விநாயகர் இந்து மதத்தில் முழு முதற் கடவுளாக அறியப்படுகிறார். அவர் பிறந்த தினம் விநாயகர் சதுர்த்தி என அழைக்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகை ஆகஸ்ட் 27ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. இந்த முறை விநாயகர் சதுர்த்தி புதன்கிழமை வருவதால் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று ஜோதிடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது புதன் கிரகம் புத்திசாலித்தனம், அறிவு மற்றும் தகவல் தொடர்புக்கு அடையாளமாக உள்ளது. விநாயகர் பகவானும் இவற்றை அருளுவதால், இந்த நாளில் செய்யப்படும் பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகள் இரட்டிப்பு சக்தியுடன் கூடிய பலன்களைத் தரும் என சொல்லப்படுகிறது. கல்வி, வேலைகள் மற்றும் புதிய முயற்சிகளைத் தொடங்குபவர்களுக்கு இது ஒரு நல்ல காலமாகும். விநாயகர் நீங்கள் எப்போது வழிபடுபவர்களாக இருந்தாலும் இந்த ஐந்து வகையான பிரசாதங்களை வைத்து வணங்குவது நல்ல பலன்களை தரும் என நம்பப்படுகிறது.

மஞ்சள் கலந்த அரிசி

நமது சாஸ்திரத்தில் அரிசி நிலைத்தன்மை மற்றும் செழிப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது. 250 கிராம் அரிசியை மஞ்சள் கலந்து தெய்வத்திற்கு வழங்குவது மிகவும் புனிதமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த அளவு முழுமையான செல்வத்தைக் குறிக்கிறது. மஞ்சள் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தையும் செழிப்பையும் தருகிறது. இதைச் செய்வது வீட்டில் பணத்தை அள்ளித்தரும் மற்றும் நீங்கள் மேற்கொள்ளும் வேலைகள் சீராக முடிவடையும் என்பதை குறிக்கும்.

தேங்காய்

தேங்காயை தெய்வங்களின் பழம் என்று கூறுவார்கள். அதன் மேல் உள்ள கடினமான ஓடு நமது கோபத்தை குறிக்கிறது, உள்ளே இருக்கும் வெள்ளை தானியம் தூய்மையைக் குறிக்கிறது. தேங்காயை காணிக்கையாகக் கொடுப்பது என்பது நமது கோபத்தை, பிடிவாதத்தை விட்டுவிட்டு நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் தூய்மையைத் தருவதாக அமையும். எந்தவொரு புதிய பணியையும் தொடங்குவதற்கு முன்பு தேங்காய் உடைப்பது தடைகளை நீக்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

கரும்பு

கரும்பு இனிப்பு, மகிழ்ச்சி மற்றும் தைரியத்தின் சின்னமாக அறியப்படுகிறது. விநாயகருக்கு கரும்பு படைப்பது குடும்பத்தில் அன்பையும் ஒற்றுமையையும் அதிகரிக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இது செல்வத்தை அள்ளித் தருகிறது. கரும்பு தண்டு நீளமாக இருப்பதால், அது வளர்ச்சி மற்றும் நீண்ட ஆயுளைக் குறிக்கிறது. இது சிரமங்களை எதிர்கொள்ள வலிமை அளிக்கிறது. மகிழ்ச்சியையும் செல்வத்தையும் விரும்புவோருக்கு இந்த பிரசாதம் மிகவும் புனிதமானது.

தாமரை மலர்

தாமரை மலர் தூய்மை மற்றும் ஆன்மீக உணர்வுகளின் சின்னமாக அறியப்படுகிறது. அது சேற்றில் பிறந்தாலும், அது அழுக்காகாமல் தூய்மையாகவே உள்ளது. இது சிரமங்களை சமாளித்து வெற்றியை அடைவதைக் குறிக்கிறது. விநாயகருக்கு தாமரை மலர் சமர்ப்பிப்பது மனதில் தெளிவையும் அறிவையும் அதிகரிக்கிறது. கல்வியைத் தொடர்பவர்களுக்கும் புதிய தொழில்களைத் தொடங்குபவர்களுக்கும் இது மிகவும் நல்லது.

வாழை இலை

இந்து பாரம்பரியத்தில், வாழை இலையில் காணிக்கை வைப்பது மிகவும் புனிதமானது. கடவுளுக்கு அதன் மீது காணிக்கை வைப்பது புனிதமானது மற்றும் தூய்மையின் அறிகுறியாகும். இது குடும்பத்திற்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் தருகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று வாழை இலையில் காணிக்கை வைப்பது பூஜைக்கு கூடுதல் புனிதத்தை சேர்க்கிறது.

(இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் உள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us