AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மாசி அமாவாசை 2026: எளிய வழிபாட்டு முறை, கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்.. தவறவிடாதீர்கள்!!

Masi amavasya 2026: தமிழ் மரபில் அமாவாசை என்பது சாதாரணமான ஒரு நாளாக இல்லாமல், ஆழமான ஆன்மீக அர்த்தத்தை கொண்ட புனித நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் சந்திரன் முழுமையாக மறைந்திருப்பதால், இயற்கையின் சக்திகள் அமைதியான நிலையிலிருக்கும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, 2026 பிப்ரவரி 17 அன்று வரும் மாசி அமாவாசை, செவ்வாய்க்கிழமையுடன் இணைந்து வருவதால் அதன் ஆன்மீக முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது.

esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 16 Feb 2026 15:24 PM IST
மாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்புடையதாக மதிக்கப்படுகிறது. முன்னோர்கள் கூறியபடி, இந்த நாளில் செய்யப்படும் வழிபாடுகள் மற்றும் பரிகாரங்கள், மனித வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் சக்தி கொண்டவை என நம்பப்படுகிறது. அந்தவகையில், மாசி மாத அமாவாசை திதி இன்று (பிப்ரவரி 16) மாலை 6.26க்கு ஆரம்பித்து, நாளை (பிப்ரவரி 17) மாலை 6.30 வரை இருக்கும்.

மாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்புடையதாக மதிக்கப்படுகிறது. முன்னோர்கள் கூறியபடி, இந்த நாளில் செய்யப்படும் வழிபாடுகள் மற்றும் பரிகாரங்கள், மனித வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் சக்தி கொண்டவை என நம்பப்படுகிறது. அந்தவகையில், மாசி மாத அமாவாசை திதி இன்று (பிப்ரவரி 16) மாலை 6.26க்கு ஆரம்பித்து, நாளை (பிப்ரவரி 17) மாலை 6.30 வரை இருக்கும்.

1 / 5
குலதெய்வ மற்றும் காவல் தெய்வ வழிபாடு: அமாவாசை திதியில் அருகிலுள்ள குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்வது மிகவும் உத்தமம். அதேபோல், காவல் தெய்வக் கோவிலுக்குச் சென்று நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபாடு செய்வது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மாசி அமாவாசை நாளில் அங்காள பரமேஸ்வரி அம்மனை வணங்குவது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. அருகில் அம்மன் கோவில் இருந்தால் நேரில் சென்று தரிசனம் செய்வது நல்லது. இல்லையெனில், வீட்டிலேயே அம்மனை நினைத்து வழிபடலாம்.

குலதெய்வ மற்றும் காவல் தெய்வ வழிபாடு: அமாவாசை திதியில் அருகிலுள்ள குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்வது மிகவும் உத்தமம். அதேபோல், காவல் தெய்வக் கோவிலுக்குச் சென்று நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபாடு செய்வது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மாசி அமாவாசை நாளில் அங்காள பரமேஸ்வரி அம்மனை வணங்குவது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. அருகில் அம்மன் கோவில் இருந்தால் நேரில் சென்று தரிசனம் செய்வது நல்லது. இல்லையெனில், வீட்டிலேயே அம்மனை நினைத்து வழிபடலாம்.

2 / 5
நாளை மாலை 5.30 முதல் 7.30 வரை உள்ள 2 மணி நேரம் 'சோடசக்கலை நேரம்' ஆகும். இந்த நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி நாம் நினைப்பதை இறைவனிடம் வேண்டினால் அது நிறைவேறும் என்பது நம்பிக்கை. முன்னோர் வழிபாடு: அமாவாசை என்பது முன்னோர்களை நினைவுகூரும் நாள். அவர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். வீட்டில் படையல் இடுபவர்கள் மதியம் 12 மணிக்குள் சூரியன் உச்சத்திற்கு வருவதற்கு முன் செய்வது சிறந்தது.

நாளை மாலை 5.30 முதல் 7.30 வரை உள்ள 2 மணி நேரம் 'சோடசக்கலை நேரம்' ஆகும். இந்த நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி நாம் நினைப்பதை இறைவனிடம் வேண்டினால் அது நிறைவேறும் என்பது நம்பிக்கை. முன்னோர் வழிபாடு: அமாவாசை என்பது முன்னோர்களை நினைவுகூரும் நாள். அவர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். வீட்டில் படையல் இடுபவர்கள் மதியம் 12 மணிக்குள் சூரியன் உச்சத்திற்கு வருவதற்கு முன் செய்வது சிறந்தது.

3 / 5
இந்த நாளில் கடைப்பிடிக்கப்படும் ஒரு எளிய பரிகாரம் பெரும் பலனை அளிக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, ஒரு செம்பருத்தி இலை மீது ஒரு தீபத்தை ஏற்றி வழிபடுவது. இந்த தீபம் ஏற்றும்போது, குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் மனதில் நினைத்து இறைவனிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த எளிய வழிபாடு கூட, கஷ்டங்கள் நீங்கி நல்ல மாற்றங்கள் ஏற்பட உதவும் என்று நம்பப்படுகிறது. தீபம் குறைந்தது ஒரு மணி நேரம் எறிய வேண்டும் என்பதும் முக்கியமாக கூறப்படுகிறது.

இந்த நாளில் கடைப்பிடிக்கப்படும் ஒரு எளிய பரிகாரம் பெரும் பலனை அளிக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, ஒரு செம்பருத்தி இலை மீது ஒரு தீபத்தை ஏற்றி வழிபடுவது. இந்த தீபம் ஏற்றும்போது, குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் மனதில் நினைத்து இறைவனிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த எளிய வழிபாடு கூட, கஷ்டங்கள் நீங்கி நல்ல மாற்றங்கள் ஏற்பட உதவும் என்று நம்பப்படுகிறது. தீபம் குறைந்தது ஒரு மணி நேரம் எறிய வேண்டும் என்பதும் முக்கியமாக கூறப்படுகிறது.

4 / 5
மேலும், மாசி அமாவாசை முன்னோர்களை நினைத்து செய்யப்படும் தர்ப்பணம் மற்றும் தானங்களுக்கும் மிகச் சிறந்த நாளாகும். ஏழை மக்களுக்கு உணவு வழங்குதல், தானம் செய்தல் போன்ற நற்காரியங்கள் மூலம் பாபங்கள் மற்றும் தோஷங்கள் குறையும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, துவரம் பருப்பு போன்ற பொருட்களை தானமாக வழங்குவது குடும்ப நலனை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.

மேலும், மாசி அமாவாசை முன்னோர்களை நினைத்து செய்யப்படும் தர்ப்பணம் மற்றும் தானங்களுக்கும் மிகச் சிறந்த நாளாகும். ஏழை மக்களுக்கு உணவு வழங்குதல், தானம் செய்தல் போன்ற நற்காரியங்கள் மூலம் பாபங்கள் மற்றும் தோஷங்கள் குறையும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, துவரம் பருப்பு போன்ற பொருட்களை தானமாக வழங்குவது குடும்ப நலனை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.

5 / 5