AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நீல நிறச் சட்டை போட்ட அந்த மனிதன் யார்? நெஞ்சை உருக்கிய சம்பவம்!

Mortuary Lessons: பிணவறைக்குள் கண்ட காட்சிகள், மனிதனின் செல்வம், பதவி மற்றும் அழகு அனைத்தும் தற்காலிகமானவை என்பதையும் மரணத்தின் முன் அனைவரும் சமமே என்பதையும் உணர்த்தின. ஒரு மனிதன் மறைந்த பிறகும் அவன் சேர்த்த சொத்துக்கள் அல்ல, அவன் பிறருக்குக் காட்டிய அன்பும் செய்த நன்மைகளுமே அவனை மக்கள் மனதில் வாழ வைக்கின்றன.

நீல நிறச் சட்டை போட்ட அந்த மனிதன் யார்? நெஞ்சை உருக்கிய சம்பவம்!
பிணவறைImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 26 Aug 2026 13:42 PM IST

ஒரு எதிர்பாராத விபத்தின் காரணமாக பிணவறைக்குள் செல்ல நேரிட்ட அனுபவம், மனித வாழ்க்கையின் நிலையாமையையும் அகங்காரத்தின் போலித்தனத்தையும் உணர்த்தியது. அங்கே பணக்காரன், ஏழை, படித்தவன், படிக்காதவன் என்ற எந்த பாலின மற்றும் சமூக பேதமும் இன்றி அனைத்து உடல்களும் ஒரே தகுதியில் அமைதியாகக் கிடந்தன. பதவி, செல்வம், அழகு போன்றவை தற்காலிகமானவை என்பதும், மரணம் மட்டுமே இவ்வுலகின் மறுக்க முடியாத உண்மை என்பதும் அங்கே தெளிவாகப் புரிந்தது. ஒரு மனிதன் இறந்த பிறகும் அவனது சொத்துக்கள் நினைவுகூரப்படுவதில்லை, அவன் பிறருக்குக் காட்டிய அன்பும் செய்த நன்மைகளும் மட்டுமே அவனை வாழ வைக்கின்றன. அங்கிருந்து வெளியேறும்போது கேட்ட உதவியாளரின் வார்த்தைகள், நல்ல மனிதர்கள் மரணத்திற்குப் பிறகும் மரியாதையோடு நினைவுகூரப்படுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தின.

வாழ்க்கையின் நிஜ முகத்தைக் காட்டிய பிணவறை

இன்று எதிர்பாராதவிதமாக நேரிட்ட ஒரு விபத்தின் காரணமாக, பிணவறைக்குள் செல்ல வேண்டிய சூழல் உருவானது. அங்கே கண்ட காட்சிகள் மனிதனின் அகங்காரத்தை ஒரே நொடியில் சுக்குநூறாக உடைத்து எறிந்தன. ஆணாதிக்கமோ, பெண்ணாதிக்கமோ அற்ற அந்த மௌன உலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட உடல்கள் தரையிலும் மேசைகளிலும் கிடந்தன. ஆடைகள் அகற்றப்பட்ட நிலையில், தன் மானத்தைக் காக்கக் கூடக் கைகளை அசைக்க முடியாமல் கிடந்த அந்த உடல்கள், “இதுதானா வாழ்க்கை?” என்ற கேள்வியை நெஞ்சில் எழுப்பின.

செல்வமும் பதவியும் தரும் பொய் பிம்பம்

ஐந்து வீடுகளுக்கு அதிபதியான உரிமையாளர்களும், பெரிய பட்டங்கள் பெற்ற மேதைகளும், சொகுசு கார்களில் வலம் வந்த பணக்காரர்களும் இன்று கிணறு வெட்டும் போது பலியான ஏழைத் தொழிலாளியின் உடலுக்கு அருகிலேயே கிடந்தனர். அழகு மற்றும் ஆடைகளின் மீது கர்வம் கொண்ட மனிதர்களும் எந்தவித பேதமும் இன்றி ஒரே தகுதியில் அங்கே அமைதியாக உறங்கினர். பதவி, செல்வம், அழகு என அனைத்தும் தற்காலிகமானவை என்பதையும், மரணம் மட்டுமே இங்கு இறுதியான உண்மை என்பதையும் அந்த இடம் உணர்த்தியது.

இறந்த பின்பும் வாழும் நல்ல மனிதர்கள்

நாம் எப்போது இறப்போம் என்பது நமக்குத் தெரியாது; ஆனால் இறந்த பின் என்ன நடக்கும் என்பதை அந்தப் பிணவறை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அங்கிருந்து வெளியேறும்போது, அந்த உதவியாளர் சக ஊழியரிடம் “அந்த நீல நிறச் சட்டை அணிந்தவரைப் பார்த்து மெதுவாகக் கையாளுங்கள், அவர் நல்ல மனிதர்” என்று கூறிய வார்த்தை இதயத்தை உலுக்கியது. அங்கே இறந்த பின்பும் வாழ்பவர்கள் சொத்து சேர்த்தவர்கள் அல்ல, பிறரிடம் அன்பைக் காட்டியவர்கள் மட்டுமே என்பது புரிந்தது.

Also Read: டென்ஷனுக்கு டாட்டா! மனசுக்கு நிம்மதி தரும் இந்த பழக்கங்கள் போதும்!

அன்பும் பணிவுமே நிலையான பாதை

வாழ்க்கையில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் பணிவோடும், மன்னிக்கும் மனப்பான்மையோடும், அதிக மனிதாபிமானத்தோடும் வாழப் பழக வேண்டும். உலகைச் சொந்தமாக்க நடத்தும் போராட்டங்களும், அகங்காரமும் முற்றிலும் வீணானவை. இருக்கும் வரை சக மனிதர்களுக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து, அன்பைப் பரப்புவதே நாம் இந்த மண்ணிற்குச் செய்யும் உண்மையான நன்மையாகும்.

Follow Us