Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை..! பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பிரதமர் மோடி!

PM Narendra Modi’s Warning To Pakistan: மேற்கு வங்கத்தின் அலிப்பூர்துவாரில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில் பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். "ஆபரேஷன் சிந்தூர்" இன்னும் முடியவில்லை என்றும், இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் மூன்று முறை ஊடுருவி தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசையும் கடுமையாக விமர்சனம் செய்தார். பயங்கரவாதம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்தார்.

Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை..! பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடிImage Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 29 May 2025 17:37 PM

மேற்கு வங்கம், மே 29: பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) இன்று அதாவது 2025 மே 29ம் தேதி மேற்கு வங்கத்தில் அலிப்பூர்துவாரில் பயணம் மேற்கொண்டு பேசினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) இன்னும் முடியவில்லை என்றும், நமது இந்திய இராணுவம் (Indian Army) பாகிஸ்தானுக்கு குங்குமத்தின் சக்தியை உணர வைத்தது என்றும் தெரிவித்தார். மேலும், பாகிஸ்தானுக்கு மீண்டும் எச்சரிக்கையும் விடுத்தார். தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர் மோடி:

மேற்கு வங்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “இன்று நான் சிந்தூர் கேலா நிலத்திற்கு வந்திருக்கும்போது, பங்கரவாதம் தொடர்பான இந்தியாவின் புதிய தீர்மானத்தை பற்றி விவாதிப்பது முக்கியம் என நினைக்கிறேன். கடந்த 2025 ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் செய்த காட்டுமிராண்டித்தனத்திற்கு பிறகு, மேற்கு வங்கமும் பாகிஸ்தான் மீது மிகுந்த கோபத்தை வெளிப்படுத்தியது. உங்களுக்குள் இருந்த கோபத்தை நான் நன்றாக புரிந்துகொண்டேன். பயங்கரவாதிகள் நம் சகோதரிகளின் குங்குமத்தை அளிக்க துணிந்தனர். இதன் காரணமாக, நமது இராணுவம் பாகிஸ்தானுக்கு குங்குமத்தின் சக்தியை உணர வைத்தது. பாகிஸ்தான் நினைத்துக்கூட பார்க்காத பயங்கரவாதிகள் தங்கியிருந்த முகாம்களை நாங்கள் அழித்தோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “ பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானால் உலகிற்கு பயங்கரவாதத்தை தவிர, வேறு எதையும் வழங்க தெரியாது. பாகிஸ்தான் உருவானதில் இருந்து, அது பயங்கரவாதத்தை மட்டுமே வளர்த்து வருகிறது. 1947ல் சுதந்திரம் கிடைத்த பிறகு, பாகிஸ்தான் இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது. சில ஆண்டுகளுக்கு பிறகு, நமது அண்டை நாடான இன்றைய வங்கதேசத்திலும் பயங்கரவாதத்தை பரப்பியது. பாகிஸ்தான் ராணுவம் வங்கதேசத்தில் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கொலைகளை செய்த விதத்தை யாராலும் மறக்க முடியாது. பயங்கரவாதமும், இனப்படுகொலையும் பாகிஸ்தான் இராணுவத்திம் மிகப்பெரிய நிபுணத்துவமாகும்.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நேரடி போர் நடந்தால், பாகிஸ்தான் தோல்வி நிச்சயம். இதனால்தான், பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளின் உதவியை நாடுகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, இந்தியா மீது இப்போதும் பயங்கரவாத தாக்குதல் நடந்தால், எதிரி அதற்கான விலையை பெற்றுதான் தீர வேண்டும். பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்தியா 3 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த வங்க மண்ணிலிருந்து சொல்லுகிறேன் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என்று 140 கோடி இந்தியர்களுக்கான அறிவிப்பு இது” என்றார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்:

மேற்கு வங்கம் குறித்து பேசிய பிரதமர் மோடி, “மேற்கு வங்கத்தில் இருந்து கலவரங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் ஊழல் ஆகியவற்றிலிருந்து விடுதலை தேவை. பாஜகவின் வளர்ச்சி மாதிரி இப்போது மாநிலத்தின் முன் உள்ளது. இன்று நாடு முழுவதும் பல மாநிலங்களில் பாஜக அரசு உள்ளது.இதன் காரணமாக, மக்கள் பாஜகவுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு அளித்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் 4 புதிய கல்லூரிகள்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் 4 புதிய கல்லூரிகள்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...
90ஸ் கிட்ஸின் சூப் சாங்... காதல் கசக்குதையா உருவான கதை தெரியுமா?
90ஸ் கிட்ஸின் சூப் சாங்... காதல் கசக்குதையா உருவான கதை தெரியுமா?...
பாகிஸ்தானில் 90 நாட்கள்.. உளவு பார்த்த நபர் அதிரடி கைது!
பாகிஸ்தானில் 90 நாட்கள்.. உளவு பார்த்த நபர் அதிரடி கைது!...
மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தும் எடப்பாடி பழனிசாமி!
மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தும் எடப்பாடி பழனிசாமி!...
எலிமினேட்டரில் வெளியேறும் அணி எது..? மும்பை - குஜராத் இன்று மோதல்
எலிமினேட்டரில் வெளியேறும் அணி எது..? மும்பை - குஜராத் இன்று மோதல்...
சூடாகும் உலகம்.. நிலச்சரிவில் புதைந்த சுவிட்சர்லாந்து கிராமம்!
சூடாகும் உலகம்.. நிலச்சரிவில் புதைந்த சுவிட்சர்லாந்து கிராமம்!...
மாணவர்களுக்கு விருது விழா.. பரிசுகளை வழங்கும் விஜய்!
மாணவர்களுக்கு விருது விழா.. பரிசுகளை வழங்கும் விஜய்!...
பள்ளிகளில் செவ்வாய் கிழமைகளில் போதைப்பொருள் விழிப்புணர்வு!
பள்ளிகளில் செவ்வாய் கிழமைகளில் போதைப்பொருள் விழிப்புணர்வு!...
சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து.. எந்த ரூட் தெரியுமா?
சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து.. எந்த ரூட் தெரியுமா?...
8 பேரை பலிவாங்கிய பல் சிகிச்சை.. 2 வருடம் கழித்து வெளியான ஷாக்!
8 பேரை பலிவாங்கிய பல் சிகிச்சை.. 2 வருடம் கழித்து வெளியான ஷாக்!...
தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்... கொட்டப்போகும் மழை
தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்... கொட்டப்போகும் மழை...