AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

National Unity Day : தேசிய ஒற்றுமை தினம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா? வரலாறு இதுதான்!

புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரரும் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. நாட்டின் அரசியல் ஒற்றுமைக்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பை நினைவுகூரும் வகையில், அரசாங்கம் இந்த கொண்டாட்டங்களை அதிகாரப்பூர்வமாக ஏற்பாடு செய்கிறது.

National Unity Day : தேசிய ஒற்றுமை தினம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா? வரலாறு இதுதான்!
வல்லபாய் படேல்
C Murugadoss
C Murugadoss | Published: 31 Oct 2025 08:54 AM IST

சுதந்திரத்திற்குப் பிறகு, 560க்கும் மேற்பட்ட சிறிய மாநிலங்களை இந்தியாவில் இணைத்து நாட்டை ஒன்றிணைப்பதில் படேல் முக்கிய பங்கு வகித்தார். அதனால்தான் அவர் இந்தியாவின் ‘இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படுகிறார். நாட்டின் முதல் துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் அவர் காட்டிய தொலைநோக்குப் பார்வையும் துணிச்சலும் இன்றும் ஊக்கமளிக்கின்றன. அவரது பிறந்தநாளை முன்னிட்டு 2014 முதல் மத்திய அரசு இந்த நாளை ”தேசிய ஒற்றுமை தினமாக” அதிகாரப்பூர்வமாக கொண்டாடி வருகிறது. இதன் நோக்கம் – நமது நாடு எவ்வளவு வித்தியாசமாக இருந்தாலும்.. வேற்றுமையில் ஒற்றுமை என்ற உணர்வை அதிகரிப்பதுதான்.

ஒரு இந்தியா – சிறந்த இந்தியா

படேல் கனவு கண்ட ஒற்றுமையைத் தொடர, பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 31, 2015 அன்று “ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரத்” திட்டத்தை அறிவித்தார். மாநிலங்களுக்கு இடையேயான கலாச்சார உறவுகளை அதிகரிக்க இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு கொண்டாட்டங்களின் கருப்பொருள் “வேற்றுமையில் ஒற்றுமை” என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சிறப்பு கொண்டாட்டங்கள்

சர்தார் படேலின் 150வது பிறந்தநாளை நாடு முழுவதும் இரண்டு ஆண்டுகளுக்கு பிரமாண்டமாக கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள ஒற்றுமை சிலையில் பிரதமர் மோடி படேலுக்கு அஞ்சலி செலுத்தி ஒற்றுமை அணிவகுப்பில் பங்கேற்பார். இந்திய விமானப்படையின் சூர்ய கிரண் குழுவினர் அற்புதமான வான்வழி காட்சி மூலம் அஞ்சலி செலுத்துவார்கள். படேலின் தேசிய ஒற்றுமைக்கான அழைப்பை பிரதிபலிக்கும் வகையில், நாடு முழுவதும் ஒற்றுமைக்கான ஓட்டம் என்ற மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாரத்தானில் அனைவரும் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லியில் 2 மாதங்கள்

இந்த நிகழ்வை முன்னிட்டு டெல்லி அரசு சர்தார்@150 என்ற இரண்டு மாத பிரச்சாரத்தை ஏற்பாடு செய்து வருகிறது. டெல்லியின் 11 மாவட்டங்களில் படேல் சவுக் முதல் தேசிய போர் நினைவுச்சின்னம் வரை ஒற்றுமை பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாலை 6 மணிக்கு மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள். நவம்பர் 1 முதல் 15 வரை குஜராத்தின் ஏக்தா நகரில் பாரத் பர்வ் கொண்டாட்டங்கள் நடைபெறும். பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் உணவுத் திருவிழா இதன் சிறப்பம்சங்களாக இருக்கும்.

Follow Us