Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Corona Virus : கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. 4 பேர் பலி!

India COVID-19 Update of Past 24 Hours | உலக அளவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Corona Virus : கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. 4 பேர் பலி!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 07 Jun 2025 12:50 PM

சென்னை, ஜூன் 07 : உலக அளவில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ள நிலையில், இந்தியாவிலும் மிக வேகமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 391 பேருக்கு கொரோனா (Corona) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் தற்போதைய கொரோனா நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

உலக அளவில் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கிய கொரோனா பரவல்

2019 ஆம் ஆண்டு சீனாவின் ஊகான் மாகாணத்தில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து உலகம் முழுவதும் மிக வேகமாக கொரோனா பரவ தொடங்கியது. இதன் காரணமாக உலக அளவில் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவுக்கு பலியாகினர். தொற்று பரவலை கட்டுப்படுத்தி, உயிரிழப்புகளை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து பல மாதங்கள் கழித்து உலகம இயல்பு நிலைக்கு திரும்பியது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பரவ தொடங்கியுள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதை போலவே இந்தியாவிலும், தொற்று பரவல் வேகமாகவே உள்ளது. இந்தியாவை பொருத்தவரை கேரளாவில் தொற்று பரவல் சற்று அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்திலும் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை கூறியுள்ளது.

ஒரே நாளில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்த நிலையில், நேற்று (ஜூன் 06, 2025) ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் புதியதாக 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரை 194 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வைகாசி பௌர்ணமி எப்போது? - அந்நாளில் இதெல்லாம் கண்டிப்பா செய்யுங்க
வைகாசி பௌர்ணமி எப்போது? - அந்நாளில் இதெல்லாம் கண்டிப்பா செய்யுங்க...
எளிமையாக ஆவணங்களை PDF-ஆ மாத்தலாம் - கூகுள் டிரைவின் புதிய வசதி
எளிமையாக ஆவணங்களை PDF-ஆ மாத்தலாம் - கூகுள் டிரைவின் புதிய வசதி...
மகனை நினைத்து நெகிழ்ச்சி.. சிம்ரன் வெளியிட்ட வீடியோ!
மகனை நினைத்து நெகிழ்ச்சி.. சிம்ரன் வெளியிட்ட வீடியோ!...
கொரோனாவை எதிர்கொள்ள அரசு தயார்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு
கொரோனாவை எதிர்கொள்ள அரசு தயார்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு...
பென்ஸ் முழுவதும் லோகேஷின் கதை இல்லை- இயக்குநர் பாக்யராஜ் கண்ணன்!
பென்ஸ் முழுவதும் லோகேஷின் கதை இல்லை- இயக்குநர் பாக்யராஜ் கண்ணன்!...
'கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை...' எடப்பாடி பழனிசாமி
'கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை...' எடப்பாடி பழனிசாமி...
விராட் கோலி தன் முடிவை மாற்றிக்கொள்வார் - மைக்கேல் கிளார்க்
விராட் கோலி தன் முடிவை மாற்றிக்கொள்வார் - மைக்கேல் கிளார்க்...
வைகாசி விசாகம்.. திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
வைகாசி விசாகம்.. திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!...
கமல் படங்களை தவிர்த்த துல்கர் சல்மான்.. நடந்தது என்ன?
கமல் படங்களை தவிர்த்த துல்கர் சல்மான்.. நடந்தது என்ன?...
முருகனுக்கு பன்னீர் அபிஷேகம்.. சென்னையில் இந்த கோயில் தெரியுமா?
முருகனுக்கு பன்னீர் அபிஷேகம்.. சென்னையில் இந்த கோயில் தெரியுமா?...
தனுஷின் குபேரா படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்த நாகார்ஜுனா!
தனுஷின் குபேரா படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்த நாகார்ஜுனா!...