Corona Virus : கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. 4 பேர் பலி!
India COVID-19 Update of Past 24 Hours | உலக அளவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, ஜூன் 07 : உலக அளவில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ள நிலையில், இந்தியாவிலும் மிக வேகமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 391 பேருக்கு கொரோனா (Corona) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் தற்போதைய கொரோனா நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலக அளவில் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கிய கொரோனா பரவல்
2019 ஆம் ஆண்டு சீனாவின் ஊகான் மாகாணத்தில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து உலகம் முழுவதும் மிக வேகமாக கொரோனா பரவ தொடங்கியது. இதன் காரணமாக உலக அளவில் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவுக்கு பலியாகினர். தொற்று பரவலை கட்டுப்படுத்தி, உயிரிழப்புகளை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து பல மாதங்கள் கழித்து உலகம இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பரவ தொடங்கியுள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதை போலவே இந்தியாவிலும், தொற்று பரவல் வேகமாகவே உள்ளது. இந்தியாவை பொருத்தவரை கேரளாவில் தொற்று பரவல் சற்று அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்திலும் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை கூறியுள்ளது.
ஒரே நாளில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
कोरोना वायरस के मामले लगातार बढ़ रहे हैं. पिछले 24 घंटों के दौरान 391 नए केस सामने आए हैं. इस बीच 4 लोगों की मौत हो गई है. वहीं, एक्टिव मामलों की संख्या बढ़कर 5755 हो गई है.
.
.#CoronaVirus #CoronaUpdate pic.twitter.com/Lxp7YCcXIM— TV9 Bharatvarsh (@TV9Bharatvarsh) June 7, 2025
இந்த நிலையில், நேற்று (ஜூன் 06, 2025) ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் புதியதாக 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரை 194 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.