Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Health Tips: சாப்பிட்ட உடனே ஏன் குளிக்கக் கூடாது? செரிமான சிக்கலை தருமா..?

Bathing After Meals: சாப்பிட்ட உடனே குளிப்பது செரிமானத்தைப் பாதிக்கும். உணவு ஜீரணத்திற்கு இரத்தம் வயிற்றுக்குச் செல்லும்; குளித்தால் இரத்த ஓட்டம் மாறுபட்டு, அஜீரணம், வாயு, வயிற்று வலி ஏற்படும். குறைந்தது 20-25 நிமிடங்கள் கழித்து குளிப்பது நல்லது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இந்த எளிய முறையைப் பின்பற்றுங்கள்.

Health Tips: சாப்பிட்ட உடனே ஏன் குளிக்கக் கூடாது? செரிமான சிக்கலை தருமா..?
குளியல்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 08 Sep 2025 17:51 PM IST

பலர் தூங்க செல்வதற்கு முன் அல்லது காலையில் நன்றாக வெயில் வந்ததற்கு பிறகு குளிக்கும் (Bathing) பழக்கம் கொண்டுள்ளனர். அதேபோல், சிலர் சில சமயங்களில் சாப்பிட்ட உடனேயே அல்லது சாப்பிட்ட 5 முதல் 7 நிமிடங்களுக்குப் பிறகு கூட ஏதாவது ஒரு காரணத்திற்காக குளிக்கச் செல்கிறார்கள். ஆனால் அவ்வாறு செய்வது செரிமானம் (Digestion) உள்பட ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இது பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இதற்குப் பின்னால் உள்ள சரியான காரணம் உங்களுக்குத் தெரியுமா? இந்தநிலையில், சாப்பிட்ட உடனே ஏன் குளிக்கக்கூடாது, அதன் தீமைகள் என்ன? சாப்பிட்ட பிறகு எவ்வளவு நேரம் கழித்து குளிப்பது சரியானது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

சாப்பிட்ட உடனே ஏன் குளிக்கக்கூடாது..?

உணவுக்குப் பிறகு உடனடியாக குளிப்பது உங்கள் செரிமான அமைப்புக்கு தீங்கு விளைவிக்கும். இது உங்கள் உடல்நலம் மற்றும் ஆற்றலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உணவு சாப்பிட்ட பிறகு, நம் உடல் உணவை ஜீரணிக்க கடினமாக உழைக்கிறது. இந்த நேரத்தில், உடலில் அதிக இரத்தம் நமது வயிற்றுக்கும் செரிமான அமைப்புக்கும் செல்கிறது. இதனால் உணவு சரியாக ஜீரணமாகும். இந்த நேரத்தில் நீங்கள் குளித்தால், நீரின் வெப்பநிலை உடலின் சமநிலையை சீர்குலைக்கிறது.

ALSO READ: முதலில் உடலின் எந்த பகுதியில் தண்ணீர் தொட வேண்டும்..? குளிக்கும்போது செய்யக்கூடாத தவறுகள்!

சூடான நீரில் குளிப்பதால் உடல் வெப்பநிலை அதிகரிக்கிறது. இது தோல் மற்றும் பிற பகுதிகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மேலும், வயிற்றுக்கு இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. இதன் விளைவாக, செரிமானம் மெதுவாகி, வாயு அல்லது கனமாக உணரலாம். மறுபுறம், குளிர்ந்த நீரில் குளிப்பதால் இரத்த நாளங்கள் விரிவடைகின்றன. இது சருமத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, செரிமானத்தை பாதிக்கிறது. இது அஜீரணம், வீக்கம், வாயு அல்லது அசௌகரியம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, உணவுக்குப் பிறகு உடனடியாக குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

 20 முதல் 25 நிமிடங்கள்:

எனவே நீங்கள் குளிக்க வேண்டியிருந்தால், அதற்கு முன்பு ஏதாவது சாப்பிட்டிருந்தால், சாப்பிட்ட பிறகு சுமார் 20 நிமிடங்கள் நடக்க வேண்டும். இது வயிறு மற்றும் குடலில் உணவு எளிதாக நகர உதவுகிறது. இவ்வாறு செய்வது மலச்சிக்கல் அல்லது அஜீரணம் போன்ற பிரச்சனைகளைக் குறைக்கிறது. அதேபோல், உங்களால் முடிந்தால், வஜ்ராசனத்தில் 10 முதல் 15 நிமிடங்கள் அமர்ந்திருப்பதும் நன்மை பயக்கும். இந்த யோகா ஆசனம் இயற்கையாகவே செரிமானத்தை மேம்படுத்துகிறது. அதன் பிறகு, நீங்கள் 15 முதல் 20 நிமிடங்களுக்குப் பிறகு குளிக்கலாம். அதாவது, நீங்கள் உணவுக்குப் பிறகு குளிக்க விரும்பினால், இரண்டு செயல்பாடுகளுக்கும் இடையில் குறைந்தது 20 முதல் 25 நிமிடங்கள் இடைவெளியை பின்பற்றுங்கள்.

ALSO READ: காருக்குள் தண்ணீர் பாட்டிலை வைத்து செல்லும் பழக்கமா..? எச்சரிக்கை! புற்றுநோயை உண்டாக்கும்!

இந்தப் பழக்கங்கள் சற்று கடினமாக தோன்றினாலும், இவை உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, சாப்பிட்ட பிறகு குளிப்பதைத் தவிர்க்கவும். நீங்கள் சாப்பிட்ட பிறகு கட்டாயம் குளிக்க வேண்டும் என்றால், குறைந்தது 20 முதல் 25 நிமிடங்கள் இடைவெளியை பின்பற்றி குளிக்கலாம்.