Health Tips: சிறுநீர் கழித்த உடனே தண்ணீர் குடிக்கலாமா? இந்த பிரச்சனையை உண்டாக்கும் அபாயம்!
Drinking Water After Peeing: சிறுநீர் கழித்த உடனே தண்ணீர் குடிப்பது சிறுநீரகக் கற்களை உண்டாக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இந்தக் கட்டுரை, இந்தப் பழக்கத்தின் நன்மை தீமைகள், சிறுநீரக ஆரோக்கியத்தில் அதன் தாக்கம் மற்றும் எப்போது தண்ணீர் குடிப்பது சிறந்தது என்பது குறித்து விளக்குகிறது.

ஒவ்வொரு நாளும் நாம் சிந்திக்காமல் சில தவறுகளை செய்கிறோம். அது நம்மை நோய்வாய்ப்படுத்தும். அதில், ஒன்றுதான் சிறுநீர் கழித்த உடனே தண்ணீர் குடிப்பது. சிலர் சிறுநீர் கழித்தவுடன் தண்ணீர் குடிப்பது சிறுநீரக கற்களை (Kidney Stone) உண்டாக்கும் என்று கூறுகின்றனர். சிலர் அப்படி எதுவும் இல்லை என்ற கருத்தை முன்வைக்கின்றனர். தாகம் என்பது நமது உடலின் ஒரு உடலியல் செயல்முறை. நமது இரத்தத்தில் உள்ள நீர் குறையத் தொடங்கும் போது, நமக்கு தாகம் எடுக்கத் தொடங்குகிறது. பலர் குறைவாக தண்ணீர் (Water) குடிக்கிறார்கள், சிலர் அதிகமாக தாகம் எடுக்கிறார்கள். இது அனைத்தும் மக்களின் நீர்ச்சத்தைப் பொறுத்தது. மக்கள் தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் எடுக்காமல் வலுக்கட்டாயமாக குடிக்கக்கூடாது. அதிகமாக தண்ணீர் குடிப்பது நமது இதயத்தையும் சிறுநீரகங்களையும் கடினமாக உழைக்க வைக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் தண்ணீர் உட்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
அந்தவகையில், இந்தப் பழக்கம் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதா இல்லையா..? இது உடலில் எந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் தெரிந்து கொள்வோம்.
ALSO READ: உணவுடன் உடனுக்குடன் தண்ணீர்! செரிமானத்தை மெதுவாக்குமா..?
சிறுநீர் கழித்தவுடன் தண்ணீர் குடிக்கலாமா..?
சிறுநீர் கழித்த உடனேயே தண்ணீர் குடிக்கக் கூடாது. நாம் சிறுநீர் கழிக்கும்போது, நமது சிறுநீர்ப்பை காலியாகிவிடும். அது காலியான பிறகு, சில சேர்மங்கள் அங்கேயே இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், சிறுநீர் கழித்த உடனேயே நாம் தண்ணீர் குடித்தவுடன், அந்த நீர் சேர்மங்கள் தண்ணீருடன் கரைந்து, சிறுநீர் பகுதிகள் மற்றும் சிறுநீரகங்களைச் சுற்றி படிந்துவிடும். நாளடைவில் காலியான சிறுநீர்ப்பையில் இருக்கும் தனிமங்கள் தண்ணீரில் சேரத் தொடங்குகின்றன, இது கற்களை உருவாக்குவதற்கு காரணமாகிறது.
எப்போது தண்ணீர் குடிக்கலாம்..?
உங்களுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்தால், அதற்கு முன் சிறிது தண்ணீர் குடிப்பது நல்லது. இது சிறுநீர்ப்பையில் உள்ள கெட்ட தாதுக்களையும் வெளியேற்றும். இந்தப் பழக்கத்தை கடைப்பிடிப்பதன் மூலம், உங்களுக்கு சிறுநீர் தொற்று பிரச்சனை ஏற்படாது.
ALSO READ: துரித உணவுகளை தூரம் வையுங்கள்.. ஆண்களின் கருவுறுதலை பாதிக்கும் அபாயம்..!
அதேநேரத்தில், எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்கலாம் என்ற கேள்வி எழும்போது, காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக பார்க்கப்படுகிறது. சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக்கூடாது என்பது அனைவருக்கும் தெரியும், சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு தண்ணீர் குடிக்கவும். அதேபோல், உடற்பயிற்சி செய்த பிறகு குறைந்த அளவில் அவ்வபோது தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம். இருப்பினும், ஒரேயடியாக தண்ணீரை குடிக்கக்கூடாது. இரவை பொறுத்தவரை, இரவில் தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தண்ணீர் குடிப்பது நல்லது.