Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Health Tips: மாரடைப்பு வந்தால் CPR கொடுப்பது எப்படி..? மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி விளக்கம்!

CPR for Heart Attack: நீங்கள் CPR செய்யும்போது, மார்பு அழுத்தம் பயனுள்ளதாக இருக்கும். இதயம் எலும்பு அமைப்பிற்குள் அடைக்கப்பட்டுள்ளது. எனவே, எலும்புகளுக்குள் இதயம் உந்தித் தள்ளத் தொடங்க போதுமான அழுத்தத்தை கொடுக்க வேண்டும். அதன்படி, உங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தி அழுத்தம் கொடுங்கள்.

Health Tips: மாரடைப்பு வந்தால் CPR கொடுப்பது எப்படி..? மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி விளக்கம்!
மாரடைப்புக்கான மருத்துவ சிகிச்சைImage Source: Freepik and instagram
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Sep 2025 21:35 PM IST

CPR என்பது கார்டியோ புல்மோனரி ரிசசிட்டேஷன் (Cardiopulmonary resuscitation) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு உயிர்காக்கும் நுட்பமாகும். இது சுவாசம் நின்று, இதயத் துடிப்பு நின்றுவிட்ட ஒருவருக்கு முதலுதவியாக (First Aid) உயிர் காக்க வழங்கப்படும் அவசர சிகிச்சை முறையாகும். ஒவ்வொரு நபரும் இந்த நுட்பத்தைப் பற்றி அறிந்திருப்பது மிக மிக முக்கியம். இது எந்த அவசரநிலையிலும் இறக்கும் நிலையில் உள்ள நபர் மருத்துவமனை செல்வதற்கு நேரம் எடுக்கும். அந்தவகையில், CPR விலைமதிப்பற்ற உயிரை காப்பாற்றும். CPR என்பது பொதுவாக பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு நுட்பமாகும். ஆனால் கொஞ்சம் விழிப்புணர்வுடன், யார் வேண்டுமானாலும் அதைக் கற்றுக்கொள்ளலாம். CPR எப்படி செய்வது என்பதை பிரபல மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

CPR செய்ய 2 முறைகள்:

CPR இரண்டு வகைகள் உள்ளன. ஒன்றை மார்பை 1 வினாடிக்கு 2 முறை அழுத்துவது, மற்றொன்று வாயோடு வாய் வைத்து ஊதுவது ஆகும். வாயோடு வாய் வைத்து ஊதுவது சற்று கடினம் என்றாலும், மார்பை அழுத்துவது என்பது செய்வது எளிது.

ALSO READ: வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள் என்ன..? பிரபல மருத்துவர் விளக்கம்!

மார்பு அழுத்தம்:


யாராவது உங்கள் முன் மயக்கம் அடைந்தால், சமமான பகுதியில் படுக்க வைத்து, கால் மற்றும் கால்களை சற்று உயர்ந்த நிலையில் வைக்க வேண்டும். இது இதயத்தை நோக்கி இரத்தம் பாய உதவி செய்யும். பின்னர், அவர்களின் மூக்கின் வழியாக அல்லது காதுகளுக்குப் பின்னால் இரண்டு விரல்களை வைத்து அவர்களின் சுவாசத்தைச் சரிபார்க்கவும். அவர்கள் சுவாசிக்கவில்லை என்றால், உடனடியாக உங்கள் கைகளால் அவர்களின் மார்பில் ஒரு வினாடிக்கு என 2 முறை அழுத்தம் கொடுத்து CPR கொடுங்கள். இவ்வாறு செய்வது, அந்த நபரின் இதயத்தை மீண்டும் இயக்க உதவும்.

இதயம் துடிக்கத் தொடங்க எவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டும்?

நீங்கள் CPR செய்யும்போது, மார்பு அழுத்தம் பயனுள்ளதாக இருக்கும். இதயம் எலும்பு அமைப்பிற்குள் அடைக்கப்பட்டுள்ளது. எனவே, எலும்புகளுக்குள் இதயம் உந்தித் தள்ளத் தொடங்க போதுமான அழுத்தத்தை கொடுக்க வேண்டும். அதன்படி, உங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தி அழுத்தம் கொடுங்கள்.

ALSO READ: கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ சாப்பிடுவதால் குழந்தை வெள்ளையாக பிறக்குமா? பிரபல மருத்துவர் விளக்கம்! 

எத்தனை முறை CPR கொடுக்கப்பட வேண்டும்?

இதயத்தைத் துடிக்க வைக்க உங்கள் உள்ளங்கைகளால் அழுத்தம் கொடுக்கும்போது, நேரம் மற்றும் மீண்டும் மீண்டும் செய்வது மிக முக்கியம். எனவே, இதயத்தைத் துடிக்க வைக்க ஒரு நிமிடத்திற்குள் 60 முதல் 100 முறை தொடர்ந்து அழுத்துவதை நிறுத்த வேண்டாம்.