Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Healthy Breastfeeding: தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது..? மருத்துவர் கூறும் அட்வைஸ்!

Breastfeeding Diet: தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் சில உணவுகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம். காஃபின், மசாலாப் பொருட்கள், வாயுவை உண்டாக்கும் உணவுகள், சிட்ரஸ் பழங்கள் போன்றவை குழந்தையின் செரிமானத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால், குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்காக, இந்த உணவுப் பழக்கங்களை கவனமாகக் கடைபிடிப்பது முக்கியம்.

Healthy Breastfeeding: தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது..? மருத்துவர் கூறும் அட்வைஸ்!
தாய்ப்பால் Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 10 Sep 2025 21:12 PM IST

குழந்தையை ஆரோக்கியமாக வைத்திருக்க தாய்ப்பாலே (Breastfeeding) சிறந்த அமிர்தம். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தங்கள் உணவு மற்றும் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இதனால் குழந்தையின் மன மற்றும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் குழந்தை பெற முடியும். தாய்ப்பால் கொடுக்கும் போது பெண்களுக்கு சில வைட்டமின்கள் (Vitamins), கலோரிகள் மற்றும் தாதுக்கள் அதிகமாக எடுத்துகொள்வது முக்கியம். அந்தவகையில், தாய்ப்பால் கொடுக்கும்போது நீங்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்களை பற்றி பிரபல குழந்தை நல மருத்துவர் அருண் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏனெனில், இவற்றை சாப்பிடுவது குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

பொதுவாகவே கிழங்கு வகைகள், பயறு வகைகள், வாயுவை உண்டாக்கும் பொருட்கள், மாவுச்சத்து பொருட்கள், டிரான்ஸ் கொழுப்பு உள்ள பொருட்கள், மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் ஆகியவற்றைத் தவிர்த்தல், சாக்லேட் உட்கொள்வதை தவிர்த்தல், அதிகளவிலான கடல் உப்பு உட்கொள்வதை தவிர்த்தல் போன்றவற்றை தவிர்க்கவேண்டும். இதுதவிர, கீழ்கண்ட உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இவற்றை சாப்பிடக்கூடாது:

காஃபின் உட்கொள்வதைத் தவிர்க்கவும்

காஃபினின் மிகவும் பொதுவான ஆதாரங்கள் காபி, டீ, சோடா மற்றும் எனர்ஜி பானங்கள். பாலூட்டும் பெண்களுக்கு காஃபின் நல்லதல்ல. ஏனெனில் அதிகமாக காஃபின் உட்கொள்வது பால் உற்பத்தியைக் குறைக்கிறது. காஃபின் பாலில் உள்ள இரும்பின் அளவைக் குறைக்கிறது, இது குழந்தைகளுக்கு இரத்த சோகையை ஏற்படுத்துகிறது. எனவே, தேவைப்பட்டால், நாள் முழுவதும் ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு கப் டீ அல்லது காபி குடிக்கலாம்.

ALSO READ: கர்ப்ப காலத்தில் முதுகு வலி ஏற்பட காரணம் என்ன? தடுப்பது எப்படி..?

மசாலாப் பொருட்கள்:

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மிளகாய் மசாலா, பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ளாமல் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இது குழந்தைக்கு வயிற்றுப்போக்கு மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும்.

வாயு உண்டாக்கும் பொருட்கள்:

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ப்ரோக்கோலி, வெங்காயம், காலிஃபிளவர், முட்டைக்கோஸ், பீன்ஸ், கொண்டைக்கடலை, உளுந்து, வேர்க்கடலை, உருளைக்கிழங்கு, சோளம் மற்றும் வெள்ளரி போன்ற உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை வாயுவை உண்டாக்கும். இவற்றை உட்கொள்வது உங்களுக்கு வாயு பிரச்சனையை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், குழந்தைக்கும் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

ALSO READ: கர்ப்ப காலத்தில் டீ குடிப்பது எவ்வளவு பாதுகாப்பானது? ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ குடிக்கலாம்..?

சிட்ரஸ் பழங்கள்:

தாய்ப்பால் கொடுக்கும் போது, ​​பெண்கள் ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் நெல்லிக்காய் போன்ற சிட்ரஸ் பழங்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவை குழந்தையின் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும். இதன் காரணமாக குழந்தைக்கு வயிற்றுப்போக்கு மற்றும் டயபர் வெடிப்புகள் ஏற்படலாம். இருப்பினும், அவற்றை உணவில் இருந்து முற்றிலுமாக நீக்க வேண்டிய அவசியமில்லை. அவற்றை உட்கொள்ளும்போது குழந்தையின் நடத்தையில் ஏதேனும் மாற்றம் உள்ளதா இல்லையா என்பதைக் கவனியுங்கள், ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அவ்வப்போது மட்டுமே அவற்றை உட்கொள்ளுங்கள்.