காப்பி சர்ச்சையில் சிக்கிய நடிகர் மோகன்லாலின் துடரும் படம்… இயக்குநர் விளக்கம்
Mohanlals Thudarum Movie: மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியானப் படம் துடரும். திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது ஓடிடியிலும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் படத்தின் மீது காப்பி சர்ச்சை எழுந்த நிலையில் இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.

மோலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால் (Actor Mohanlal). சினிமா துறையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடித்தும் தனது ஸ்டார் இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் மோகன்லால் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த துடரும் படம் தற்போது கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது. ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த க்ரைம் த்ரில்லர் படமான துடரும் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது ரசிகர்களிடையே சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து இயக்குநர் சனல் குமார் சசிதரன் (Director Sanal Kumar Sasidharan) கூறிய குற்றச்சாட்டு தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.
இயக்குநர் சனல் குமார் சசிதரன் சொன்ன குற்றச்சாட்டு:
இயக்குநர் சனல் குமார் சசிதரன் தான் 2020-ம் ஆண்டு எழுதி வைத்துள்ள தீயாட்டம் என்ற படத்தில் இருந்து தான் இந்த மோகன்லாலின் துடரும் படத்தின் கதையை திருடியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான துடரும் படத்தைப் பார்த்த போது தனது கதை திருடப்பட்டதை உணர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் முழு கதையையும் அவர்களால் திருட முடியவில்லை. கதையில் சாராம்சத்தை புரிந்துகொள்ளும் அளவிற்கு அவர்களுக்கு போதிய அறிவு இல்லை என்றும் இயக்குநர் சனல் குமார் சசிதரன் குறிப்பிட்டு பேசியுள்ளார். மேலும் கதையை அவர்களால் மாற்றி எழுதும் அளவிற்கு அறிவு இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.
நடிகர் மோகன்லாலின் துடரும் படம்:
நடிகர் மோகன்லால் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் துடரும். இந்தப் படத்தை கே.ஆர்.சுனில் உடன் இணைந்து எழுதி இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கியுள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகை சோபனா மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.
இவர்கள் இருவரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் இணைந்து நடிப்பதைப் பார்த்த ரசிகர்கள் கொண்டடித் தீர்த்தனர். க்ரைம் திரில்லர் பாணியில் உருவான இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் தனது மகனின் இறப்பில் உள்ள மர்மத்தை தேடி அழைவதே படத்தின் கதை. இறுதியில் தனது மகனை கொலை செய்தவர்களை அவர் என்ன செய்தார் என்பதே படத்தின் கதை.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
துடரும் படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Watch the success trailer of #Thudarum now on YouTube.https://t.co/f3YXMViFdj#ThudarumInCinemasNow@Rejaputhra_VM @talk2tharun @Mohanlal #Shobana #MRenjith #KRSunil #ShajiKumar @JxBe pic.twitter.com/f9hHnOkMn8
— Rejaputhra Visual Media (@Rejaputhra_VM) May 3, 2025