20 ஆண்டுகளை நிறைவு செய்தது நடிகர் விக்ரமின் அந்நியன் படம்!
Anniyan Movie Completes 20 Years: தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான படம் அந்நியன். இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகளை கடந்துள்ளது. இதற்காக ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் தனக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் விக்ரம் (Actor Vikram). இவரை ரசிகர்கள் அன்புடன் சியான் என்றும் அழைப்பார்கள். இந்த நிலையில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த அந்நியன் படம் இன்றுடன் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தப் படத்தை இயக்க்குநர் சங்கர் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். இதுகுறித்து ரசிகர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துகளையும் படத்தில் தங்களுக்கு பிடித்த விசயங்களையும் பகிர்ந்து வருகின்றனர். இந்தப் படம் கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி 2005-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விக்ரம் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த அந்நியன் படம்:
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான இந்தப் படத்தில் இவருடன் இணைந்து நடிகர்கள் சதா, பிரகாஷ் ராஜ், விவேக், நெடுமுடி வேணு, நாசர் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையைத்து இருந்த நிலையில் ஆஸ்கர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை தயாரித்து இருந்தார்.




மிகவும் வித்யாசமான கதையில் சைக்கலாஜிகள் ஆக்சன் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. நடிப்பு அரக்கன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விக்ரம் தனது கதாப்பாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்து இருப்பார். கருட புராண அடிப்படையில் நடிகர் விக்ரம் இந்த சமூகத்தில் தவறு செய்பவர்களுக்கு கொடுக்கும் தண்டனை அனைத்தும் மிகவும் பயங்கரமானதாக இருக்கும்.
அம்மி, ரெமோ மற்றும் அந்நியன் என மூன்று விதமாக தோற்றத்தை மிகவும் எளிமையாக நடித்துவிட்டு போயிருப்பார் விக்ரம். இதில் நடிகர் விக்ரம் மற்றும் பிரகாஷ் ராஜ் இடையே நடக்கும் காட்சி ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அந்நியன் படம் குறித்து நடிகர் விக்ரம் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
அம்பி முதல் அந்நியன் வரை இந்த 20 வருடங்களாக நீங்கள் கொண்டாடியதற்கு நன்றி. அன்பு, ஆத்திரம், நீதி, இன்னும் கர்ஜிக்கும் நினைவுகள் என்னுடனே இருக்கிறது என்றும் என்றென்றும் நன்றி உடையவனாக இருப்பேன் என்று நடிகர் விக்ரம் அந்தப் பதவில் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.