ராஷ்மிகா மந்தனா எங்கள் அனைவரையும் முந்திவிட்டார் – நடிகர் நாகர்ஜுனா!
Nagarjuna talks about Rashmika Mandanna: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் நாகர்ஜுனா. இவருக்கு தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய சினிமாவில் அதிக அளவில் ரசிகர்களைக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தெலுங்கு சினிமாவில் சுமார் இரண்டு தலைமுறையாக முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நாகர்ஜுனா. இவர் தற்போது இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள குபேரா படத்தில் நடித்துள்ளார். நடிகர் தன்ஷ் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். இந்த நிலையில் இன்று படத்தின் மூன்றாவது சிங்கிள் வீடியோ வெளியீட்டு விழா மும்பையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உடன் இணைந்து படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகர்களின் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. குறிப்பாக நாகர்ஜுனா நடிகை ராஷ்மிகா குறித்து பேசியது கவனம் பெற்று வருகின்றது.
ராஷ்மிகாவை புகழ்ந்துதள்ளிய நடிகர் நாகர்ஜுனா:
மும்பையில் நடைப்பெற்ற விழாவில் கலந்துகொண்ட நடிகர் நாகர்ஜுனா குபேரா படத்தில் தன்னுடன் நடித்த நடிகர்கள் குறித்து பேசினார். அதில் குறிப்பாக நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர் நாகர்ஜுனா பேசியதாவது, ராஷ்மிகா மந்தனா கடைசி மூன்று வருடங்களில் நடித்தப் படங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.
குபேரா பட விழாவில் நடிகர் நாகர்ஜுனா பேசிய வீடியோ:
A KING’s words that stirred the hearts ❤️🔥
KING @iamnagarjuna speech at #Kuberaa3rdSingle launch ✨#Kuberaa in cinemas June 20, 2025.#PippiPippiDumDumDum #SekharKammulasKuberaa #KuberaaOn20thJune pic.twitter.com/gVjZzmFaFE
— Kuberaa Movie (@KuberaaTheMovie) June 10, 2025
மேலும் நடிகை ராஷ்மிகாவின் நடிப்பில் வெளியாகும் படங்கள் 1000 கோடி ரூபாய் வசூல் செய்வது எல்லாம் மிகவும் சாதாரணமான விசயம் என்று புகழ்ந்துதள்ளினார். மேலும் இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் எங்கள் அனைவரையும் முந்திவிட்டார் என்றும் நடிகர் நாகர்ஜுனா தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சேகர் கம்முலா மற்றும் தனுஷ் குறித்து பேசிய நாகர்ஜுனா:
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று கிட்டதட்ட பல வருடங்களாக காத்திருந்தேன். அப்படி இருந்த நிலையில் ஒரு நாள் வந்து சேகர் என்னிடம் இந்த கதையில் நடிக்க வேண்டும் என்று கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டேன். அது மட்டும் இன்றி இந்தப் படத்தில் நடிகர் தன்ஷ் நாயகனாக நடிக்கிறார்.
அவருடன் திரையை பகிந்துகொள்வதில் எனக்கு மிகவும் பெருமையான விசயம். மேலும் இப்படி ஒரு படத்தில் இப்படி ஒரு கதாப்பாதிரத்தில் நடித்தது எனக்கு மிகவும் பெருமையான விசயமாக உள்ளது. மேலும் இதற்கு மேல் வேறு என்ன நான் செய்யப்போகிறேன் என்று நடிகர் நாகர்ஜுனா மிகவும் மகிழ்ச்சியாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.