Atlee : எங்க அண்ணா ஸ்டைலில் குட்டி கதை.. டாக்டர் பட்டம் பெற்ற இயக்குநர் அட்லீ!
Thalapathy Vijay style Atlee speech : தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, தற்போது பான் இந்திய ஹிட் இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் அட்லீ. இவரின் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக அல்லு அர்ஜுனின் 22வது படம் உருவாகிவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் டாக்டர் பட்டம் பெற்ற அட்லீ, மேடையில் விஜய்யின் ஸ்டைலில் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோலிவுட் சினிமாவில் ஆரம்பத்தில் உதவி இயக்குநராக சினிமாவில் நுழைந்தவர் இயக்குநர் அட்லீ (Atlee). இவர் இயக்குநர் எஸ் ஷங்கரிடம் (S Shankar)உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். இவர் உதவி இயக்குநராக விஜய்யின் (Thalapathy Vijay) நடிப்பில் வெளியான நண்பன் (Nanban) படத்தில் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் கடந்த 2013ல் வெளியான ராஜா ராணி (Raja Rani) என்ற படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து விஜய்யுடன் படங்களை இயக்கி ஹிட் கொடுத்தார். தமிழ் ஹிட் படங்களைக் கொடுத்த இவரின் இயக்கத்தில் பாலிவுட்டில் பிரம்மாண்டமாக வெளியான படம் ஜவான் (Jawan). நடிகர் ஷாருக்கானை வைத்துக் கடந்த 2023ம் ஆண்டு இப்படத்தை இயக்கியிருந்தார். தமிழ் சினிமாவை தொடர்ந்து பான் இந்திய இயக்குநராக இப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹாலிவுட் பட ரேஞ்சில் நடிகர் அல்லு அர்ஜுனின் (Allu Arjun) 22வது படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இன்று 2025, ஜூன் 14ம் தேதியில் சென்னை சத்யபாமா கல்லூரியில் இயக்குநர் அட்லீக்கு டாக்டர் பட்டம் (Doctorate) கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கலந்துகொண்டு பட்டம் பெற்ற இயக்குநர் அட்லீ, தளபதி விஜய்யைப் போலக் குட்டி கதை கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.




இயக்குநர் அட்லீ பேசிய வீடியோ :
“I generally finish my speech with Small story. ORU KUTTY KATHAI ENGA ANNAN STYLE LA😎
1000 Per Vachu enna Selai Akirukanga. If you are facing more Negativity in life, you will be praised and worshiped🔥”
– #Atlee‘s today’s speech while honouring with Doctorate pic.twitter.com/YfzNeV706K
— AmuthaBharathi (@CinemaWithAB) June 14, 2025
இயக்குநர் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி :
இன்று 2025, ஜூன் 14ம் தேதியில் சென்னை தனியார் கல்லூரியான சத்யபாமா கல்லூரியில் 34வது பட்டமளிப்பு விழா நடந்துள்ளது. இதில் கலந்துகொண்ட இயக்குநர் அட்லீக்கும் டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பட்டம் பெற்ற பிறகு மேடையில் பேசிய இயக்குநர் அட்லீ, தளபதி விஜய்யின் பாணியில் குட்டி ஸ்டோரி கூறியுள்ளார். அவர் பேசியது பற்றிப் பார்க்கலாம்.
இயக்குநர் அட்லீ , “நான் ஒரு குட்டி கதை கூறுகிறேன், சிம்பிளாக ஒரு குட்டி கதை எங்க அண்ணா ஸ்டைலில் கூறுகிறேன். எனக்கு நிறைய நெகடிவ் விமர்சனங்கள் வந்திருக்கிறது. அதை நான் ஒரு கதையாக கூற விரும்புகிறேன். ஒரு கோவில் இருக்கிறது, அந்த கோவிலில் இருக்கும் கருவறையில் இருக்கும் கற்சிலையைப் பார்ப்பதற்கு, படிகல்லைத் தண்டி பார்த்துவிட்டுச் சென்று விடுகிறார்களாம். ஒரு நாள் அந்த கோவிலின் நடை அடைக்கப்பட்டுள்ளது. அப்போது அந்த படிக்கல், கோவிலில் இருக்கும் சிலையிட கேட்டதாம்.
என்னப்பா நீயும் கல்தான், நானும் கல்தான். என்னை எல்லோரும் தாண்டிப் போகிறார்கள் ஆனால் உன்னை மட்டும் ஏன் எல்லோரும் வரிசையாக நின்று கும்பிடுகிறார்கள் என்று , அந்த படி கல் கேட்டதாம். அதற்குச் சிலையோ எனக்கு ஆயிரம் அடிகள் வாங்கித்தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன், அதற்கான மரியாதை எனக்கு இருக்கத்தான் செய்யும் என்று கூறியது என இயக்குநர் அட்லீ மேடையில் பேசியிருந்தார்.