அயோத்தி பட இயக்குநரின் அடுத்தப் படம்… கதாநாயகன் யார்?
Director Manthiramoorthy: நடிகர் சசிகுமாரின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் அயோத்தி. இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இயக்குநர் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.

நடிகர் சசிகுமார் (Actor Sasikumar) நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் அயோத்தி. இந்தப் படத்தை இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சசிகுமார் உடன் இணைந்து நடிகர்கள் யஷ்பால் ஷர்மா, பிரீத்தி அஸ்ரானி, புகழ், அஞ்சு அஸ்ரனி, மாஸ்டர் அத்வைத் வினோத், சேத்தன், பாண்டி ரவி, போஸ் வெங்கட், கல்லூரி வினோத் மற்றும் தமன் குமார் ஆகியோர் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தை தயாரிப்பாளர் ரவீந்தரன் தயாரித்துள்ள நிலையில் இசையமைப்பாளர் ரகுநந்தன் இசையமைத்து இருந்தார். படம் நல்ல வரவேற்பைப் பெற்றது போல படத்தின் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அயோத்தி படத்தின் கதை என்ன?
வட மாநிலத்தில் இருந்து தீபாவளி பண்டிகை நாளில் ராமேசுவரம் செல்வதற்காக மதுரை வருகிறது ஒரு குடும்பம். அப்பா மற்றும் அம்மா உடன் மகள் மற்றும் மகன் ஆகியோர்மதுரையில் இருந்து ராமேசுவரம் செல்வதற்காக காரில் சென்றுக் கொண்டிருக்கின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக கார் விபத்துக்குள்ளாகிறது. அதில் அந்த அம்மா உயிரிழந்துவிடுகிறார்.
அவரின் உடலை மதுரையில் இருந்து சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்கு பல சிக்கல்கள் ஏற்படுகின்றது. பண்டிகை நாள் என்பதால் உடலை கொண்டுச்செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. இதற்கு உதவி செய்வதற்காக அந்த கார் ட்ரைவரின் நண்பராக சசிகுமார் வருகிறார். சசிகுமார் மற்றும் புகழ் இருவரும் தேடி அழைந்து பலரின் உதவியுடன் அந்த குடும்பத்தை விமானம் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.
தீவிர இந்துதுவ வாதியாக மற்ற மதத்தை எதிர்ப்பவராக அந்த அப்பா கதாப்பாத்திரம் நடித்து இருந்தது. இறுதியாக விமான நிலையத்தில் இருந்து செல்வதற்கு முன்பு சசிகுமாரின் பெயர் என்ன என்று கேட்கிறார். அப்போது தனது பெயர் அப்துல் மாலிக் என்று கூறுகிறார். அப்போது அந்த அப்பா மனம் உடைந்து போகிறார்.
இந்தப் படம் மதத்தால் பிரிவடைவதை எதிர்த்து பேசியது. அனைவரும் மனிதர்களே என்று காட்டியிருந்தது. மேலும் மனிதர்கள் அனைவரும் அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் என்பதை இந்தப் படம் காட்டியிருந்தது. மேலும், இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் மந்திர மூர்த்தியின் அடுத்தப் படம்:
அயோத்தி படம் வெற்றியடைந்ததற்கு பிறகு அடுத்து எப்போது படம் எடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் அவர் அடுத்தாக படம் இயக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க நடிகர்கள் மாதவன் மற்றும் ராகவ லாரன்ஸ் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாக தகவல்கள் வைரலாகி வருகின்றது. மேலும் இதில் யார் நாயகனாக நடிப்பார் என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.