மொழி சர்ச்சை… கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்த கன்னட நடிகர் சிவராஜ் குமார்
Actor Shivarajkumar: தமிழ் சினிமாவில் தக் லைஃப் வைப் என்றால் கன்னடர்களிடையே தற்போது கமல் ஹாசன் பேசிய மொழி வரலாறு குறித்த சர்ச்சை அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் இருந்த நடிகர் சிவராஜ் குமார் தற்போது இந்த சர்ச்சை குறித்து விளக்கமாக பேசியுள்ளார்.

நடிகர் கமல் ஹாசன் (Actor Shivaraj Kumar) தற்போது தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கடந்த 24-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் படத்தில் நடித்த நடிகர்கள் படக்குழுவினர் மட்டும் இன்றி மற்ற பிரபலங்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக கன்னடத்தில் பிரபல நடிகராக இருக்கும் சிவராஜ் குமாரும் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு நடிகர் கமல் ஹாசன் குறித்தும் அவரை தனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பது குறித்து மனம் திறந்து பேசினார். அதனைத் தொடர்ந்து வந்துபேசிய நடிகர் கமல் ஹாசன் சிவராஜ்குமார் எனக்கு கர்நாடகாவில் இருக்கும் குடும்பம் என்று தெரிவித்தார். மேலும் அவரது மொழியும் இங்கு இருந்து சென்றதுதான் என்று தெரிவித்தார்.
இதன் மூலம் தமிழ் மொழியில் இருந்து பிரிந்ததுதான் கன்னட மொழி என்று கமல் ஹாசன் கூறியுள்ளார். இதன் காரணமாக கர்நாடகாவில் நடிகர் கமல் ஹாசன் வரலாறு தெரியாமல் பேசுகிறார் என்று எதிர்ப்பு கிளம்பியது. பல கன்னட அமைப்புகளும், கன்னட மொழி ஆர்வளர்களும் நடிகர் கமல் ஹாசனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கமல் ஹாசனுக்கு மிரட்டல் விடுத்த கர்நாடக அமைச்சர்:
கர்நாடகாவில் மொழி சர்ச்சை உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் கர்நாடக அமைச்சர் சிவராஜ் தங்கடகி நடிகர் கமல் ஹாசனுக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக பேசியது மேலும் சர்ச்சையை கிளப்பியது. நேற்று 28-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மொழி குறித்து பேசியதற்கு நடிகர் கமல் ஹாசன் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
அப்படி கமல் ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியிட மாட்டோம் என்றும் அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மிரட்டல் விடுக்கும் தொணியில் அமைச்சர் சிவராஜ் தங்கடகி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சில கன்னட நடிகர்களும் கமல் ஹாசனுக்கு கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.
கர்நாடக அமைச்சருக்கு கமல் ஹாசனின் தக் ரிப்ளை:
இந்த நிலையில் நேற்று 28-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு கேரளாவிற்கு தக் லைஃப் படத்தின் புரமோஷன் விழாவிற்காக கமல் ஹாசன் உடன் இணைந்து படக்குழுவினர் சென்றிருந்தனர். அங்கு அமைச்சரின் எச்சரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் கமல் ஹாசன் பேசியுள்ளார். அப்போது அவர் மொழி குறித்து பேச எந்த அரசியல்வாதிக்கும் தகுதி இல்லை. ஆமா எனக்கும் தகுதி இல்லை. மொழி குறித்து பேச வல்லுணர்களும் ஆய்வாளர்களும் இருக்கிறார்கள். வரலாறு அவர்களுக்கு நன்கு தெரியும். அதனால் இதனை கடந்து போக வேண்டும் என்று தக் ரிப்ளை கொடுத்தது இணையத்தில் வைரலானது.
சர்ச்சை குறித்து கமல் ஹாசனின் விளக்கம்:
#WATCH | Thiruvananthapuram, Kerala: On his recent remarks where he said, ‘Kannada was born out of Tamil’, MNM President and actor Kamal Haasan says, “… What I said was said out of love and a lot of historians have taught me language history. I didn’t mean anything. Tamil Nadu… pic.twitter.com/YjW8qAUIB3
— ANI (@ANI) May 28, 2025
கமல் ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்த சிவராஜ் குமார்:
இத்தனை சர்ச்சைகள் நடக்கும் போது அந்த நிகழ்ச்சியில் இருந்த சிவராஜ்குமார் ஏன் இன்னும் பேசவில்லை என்று ஒரு கேள்வியும் எழுந்தது. இந்த தற்போது சிவராஜ் குமார் இது குறித்து விளக்கமாக பேசியுள்ளார். அதில் இசை வெளியீட்டு விழாவிற்கு என்னை அழைத்தார்கள். நானும் அங்கு சென்றேன் மிகவும் மரியாதையாக நடத்தினார்கள்.
தொடர்ந்து பேசிய அவர் மேடையில் என்ன நடந்தது என்று எனக்கு புரியவில்லை. இங்கு வந்து பார்த்த போதுதான் அது சர்ச்சையானது புரிந்தது. மேலும் கமல் ஹாசன் இங்கு இருக்கும் போதும் அவர் அனைவரிடம் பேசிக்கொண்டிருந்த போதே அவரிடம் இது குறித்து கேட்டிருக்கலாம். ஏன் அப்போ கேட்கவில்லை என்று எனக்கு புரியவில்லை.
மேலும், கன்னட மொழி மீதான காதல் என்பது ஒருத்தர் பேசும்போது மட்டும் வரக்கூடாது. மொழி மீதான காதல் எப்போதுமே இருக்க வேண்டும். நாங்க கன்னட மொழிக்காக போராடுவோம். தேவைப்பட்டால் உயிரையும் கொடுப்போம். சும்மா பேசிட்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்துக்கொண்டு இருக்க மாட்டோம்.
கமல் ஹாசன் பற்றி நான் எதுவும் பேசத் தேவையில்லை. எது சரி எது தவறு என்று அவருக்கு தெரியும். மேலும் அவருக்கு கன்னட மொழி மீது மிகுந்த மரியாதை உள்ளது. அவர் பல கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார். இந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும் என்றும் நடிகர் சிவராஜ் குமார் பேசியிருந்தார்.