AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒரு லிட்டர் பெட்ரோலில் எண்ணெய் நிறுவனங்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?

Business Insight: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை பொதுமக்களுக்கு பெரும் சுமையாக இருந்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல் , டீசல் விலை அதிகரித்தால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். ஒரு லிட்டர் பெட்ரோல் மூலம் எண்ணெய் நிறுவனங்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

ஒரு லிட்டர் பெட்ரோலில் எண்ணெய் நிறுவனங்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 28 Aug 2025 19:15 PM IST

சென்னையில் ஆகஸ்ட் 28, 2025 அன்று தகவல் படி பெட்ரோலின் (Petrol) விலை லிட்டருக்கு ரூ.100.84 ஆக உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை மக்களுக்கு பெரும் சுமையாக இருந்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வது மறைமுகமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்விற்கும் காரணமாக அமையும்.  கடந்த சில வாரங்களாக இந்திய ரஷ்யாவிடம் (Russia) இருந்து எண்ணெய் வாங்குவதும் அதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிப்பதும் செய்திகளில் இடம் பெற்று வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்குவதன் மூலம் ரஷ்ய போருக்கு காரணமாக இருப்பதாக அமெரிக்க குற்றம்சாட்டுகிறது. மற்றொரு பக்கம் நாட்டில் பெட்ரோல் டீசல் விற்பதன் மூலம் எண்ணெய் நிறுவனங்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என பார்க்கலாம்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 70 டாலருக்கும் குறைவாகவே உள்ளது. மறுபுறம் நம் நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 90க்கும் அதிகமாக உள்ளது.  நடப்பு நிதியாண்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலை விற்பதன் மூலம் நாட்டின் பெட்ரோலிய நிறுவனங்கள் எவ்வளவு லாபம் அடைகிறது என பார்க்கலாம்.

இதையும் படிக்க : எளிமையான விஷயம்.. இதை செய்தால் மின் கட்டணத்தை குறைக்கலாம்!

ஒரு லிட்டர் பெட்ரோலால் எண்ணெய் நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாபம்

தி எகனாமிக்ஸ் டைம்ஸில் வெளியான தகவலின் படி 2026 நிதியாண்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலிலிருந்து பெட்ரோலிய நிறுவனங்களின் வருவாய் அதிகரித்துள்ளது.  , நாட்டின் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மூலம் லிட்டருக்கு ரூ.11.2 சம்பாதிக்கின்றன.  மறுபுறம்,  ஒரு லிட்டர் டீசலில் லிட்டருக்கு ரூ.8.1 சம்பாதிக்கிறது. இதற்குக் காரணம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கும் குறைவாக இருப்பதுதான்.

இது பெட்ரோலிய நிறுவனங்களுக்கு நன்மை பயக்கும். உண்மையில், கச்சா எண்ணெய் விலை குறைக்கப்பட்ட பிறகும், சாமானிய மக்களுக்கு இதனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இதன் பொருள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தக் குறைப்பும் இல்லை. கடைசியாக 2024 ஆம் ஆண்டு, அதாவது சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது. பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 2 முதல் 3 ரூபாய் வரை குறைக்கப்பட்டது.

இதையும் படிக்க : ஒரு மாநில பதிவு எண் கொண்ட வாகனத்தை வேறு மாநிலத்தில் ஓட்ட முடியுமா? உண்மை என்ன?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை

வளைகுடா நாடுகளின் எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 70 டாலருக்கும் குறைவாகவே உள்ளது.  கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 67.10 டாலராக வர்த்தகம் செய்யப்படுகிறது.  குறிப்பாக ஆகஸ்ட், 2025ன் படி கச்சா எண்ணெயின் விலை சுமார் 7.50 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. கடந்த மாதத்தின் கடைசி வர்த்தக நாளில்,  கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 72 டாலருக்கும் அதிகமாக இருந்தது. மறுபுறம், அமெரிக்க கச்சா எண்ணெயின் விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது, ​​விலை பீப்பாய்க்கு 63.13 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.  அமெரிக்க கச்சா எண்ணெயின் விலை நடப்பு மாதத்தில் சுமார் 9 சதவீதம் குறைந்துள்ளது.

 

Follow Us