EPFO : இனி இபிஎஃப்ஓவில் ரூ.5 லட்சம் வரை சுலபமாக பணம் எடுக்கலாம்.. எப்படி?
EPFO Raises Auto Claim Settlement Limit | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சக உறுப்பினர்கள் தங்களது தேவைகளுக்காக பிஎஃப் பணத்தை எடுக்கின்றனர். இந்த நிலையில், உறுப்பினர்கள் பயனடையும் வகையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் மூலம் ரூ.5 லட்சம் வரை ஆடோமெடிக் க்ளெய்ம் செட்டில்மென்ட் செய்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) உறுப்பினர்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு அம்சங்களை வழங்கி வருகிறது. அதுமட்டுமன்றி உறுப்பினர்கள் மிக எளிதில் சேவைகளை பெறும் வகையில், சில முக்கிய மாற்றங்களையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஒரு அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, இனி வரும் காலங்களில் பயனர்கள் ரூ.5 லட்சம் வரை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் இருந்து ஆடோமெடிக் க்ளெய்ம் செட்டில்மென்ட் (Automatic Claim Settlement) மூலம் எடுத்துக்கொள்ளலாம் என கூறியுள்ளது. இந்த நிலையில், இந்த வரம்பு உயர்த்தப்பட்டது குறிப்பி இபிஎஃப்ஓ கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஊழியர்களுக்கு சிறப்பு அம்சங்களை வழங்கும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம்
இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் பெயரில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் கீழ் கணக்கு தொடங்கப்பட்டு அதில் அவர்களது மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு, பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. குறிப்பாக அவசர தேவைகளுக்கு விரைவாக பணம் பெறும் வகையில், ரூ.1 லட்சம் வரை ஆடோமெடிக் க்ளெய்ம் செட்டில்மென்ட் மூலம் பணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் இபிஎஃப்ஓ ச்ஒரு முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது.




ஊழியர்கள் ரூ.5 லட்சம் வரை பணம் எடுத்துக்கொள்ளலாம் – இபிஎஃப்ஓ
EPFO Enhances Auto-Settlement Limit for Advance Claims to ₹5 Lakhs, Ensuring Faster Access to Funds for Members
This move will help lakhs of EPFO members receive funds faster, especially in times of urgent need
Read here: https://t.co/G1I0kwmv9z pic.twitter.com/nG4LBNJsCT
— PIB India (@PIB_India) June 24, 2025
ஆடோமெடிக் க்ளெய்ம் செட்டில்மென்ட் மூலம் பணம் எடுப்பதில் முக்கிய மாற்றம் செய்து ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதாவது, ஆடோமெடிக் க்ளெய்ம் செட்டில்மென்ட் மூலம் பணம் எடுப்பதற்கான வரம்பை ரூ.5 லட்சம் வரை உயர்த்தியுள்ளது. அவசர தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டாம் என்று நினைக்கும் பெரும்பாலான பொதுமக்கள் தங்களது பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்வார்கள். இந்த நிலையில், வெறும் ரூ.1 லட்சம் வரை மட்டுமே அனுமதி வழங்குவது அவர்களது தேவைகளை பூர்த்தி செய்ய பயனளிக்காது என்பதால் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் இந்த முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பணம் எடுப்பது எப்படி?
- அதற்கு முதலில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் UAN (Universal Account Number) எண் மற்றும் கடவுச்சொல்லை பதிவிட்டு லாக் இன் செய்ய வேண்டும்.
- பிறகு கிளெய்ம் (Claim) ஆப்ஷனை தேர்வு செய்து, ஆட்டோமெடிக் செட்டில்மென்ட் (Automatic Settlement) என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- அதற்கு பிறகு உங்கள் வங்கி கணக்கை சரிபார்த்து, கணக்கு புத்தகம் அல்லது காசோலையை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு பணத்தை எடுப்பதற்கான காரணத்தை பதிவிட்டு Submit செய்ய வேண்டும்.